Tuesday, January 22, 2008

கருத்து

shaikdawood mohamedfarook
dateFri, Aug 28, 2009 at 2:31 PM
subjectThanks

Dear Mr.Hidayath,

Assalamu Alaiqum,

Thank you very much for your service to the society and particularly for Tamil Muslim
community through media. Published for Jamal Mohamed College Alumni news is
very fine. My special Thanks to you because you have published my photo and mentioned in my name inside the news.

We will pray to Almighty Allah for you and your family for long life with good health
and wealth & Happiness.

Regards
S.M.Farook


janaki raman
dateFri, Mar 27, 2009 at 6:17 PM
subjectRe: அபுதாபி தமிழ் மகளிர் வட்டம் நடத்தும் நடனப் போட்டி


வணக்கத்திற்குரிய இதயத்துல்லா அவர்களுக்கு,

எங்கள் கல்லூரியில் நடைபெற்ற இரண்டு நாள் தேசியக்கருத்தரங்கிற்கு தாங்கள் கூறிய வாழ்த்துதலை நான் மறக்கவில்லை. ஆயினும் மின்னஞ்சல் கூட அனுப்ப இயலாத சூழ்நிலையில் இருந்தேன். தாங்கள் அபதாபியில் நடைபெறுகின்ற நிகழ்வை அனுப்பியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. தாங்கள் எங்கிருப்பினும் தமிழ் பற்றிய உணர்வையும், வளர்ச்சியையும் மறக்காது செயல்பட்டுக்கொண்டிருக்கின்றீர்கள் என்பது குறித்து மிகவும் மகிழ்கின்றேன். மேலும் நாம் மின்னஞ்சலில் பேசலாம்.



நன்றி.

இவண்,
முனைவர் நா.ஜானகிராமன்
துறைத்தலைவர்
பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரி
பெரம்பலூர்
தமிழ்நாடு - 621 212.

12.3.2009

துபாய்.


அன்புள்ள பத்திரிகையாளர் திரு. முதுவை ஹிதாயத்துல்லா அவர்களுக்கு…


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


நலம். நலம் அறிய ஆவல். தொடர்ந்து தங்களது படைப்புக்களை பார்க்கிறேன். நிறைய தகவல்கள் பயனுள்ளதாக உள்ளன. இன்று தமிழ்.காம் -ல் தாங்கள் தொகுத்திருந்த செய்திகளைப் பார்த்தேன். படித்தேன். ரசித்தேன். நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்!


பலவருடங்களுக்குமுன் திருச்சியில் நாங்கள் சொந்தப்பத்திரிகை நடத்தியபோது உங்களைப் பார்த்தபோது… மற்றவர்களைப் பற்றிய துணுக்கு, கேள்வி எழுதுபவராக இருந்த நீங்கள்… இன்று உங்களைப் பற்றிய மற்றவர்கள் துணுக்கு எழுதும் அளவுக்கு வளர்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இன்னும் நீங்கள் உங்களை பக்குவப்படுத்திக்கொண்டு கதை, கவிதைகள் என எழுதி பட்டை தீட்டிய வைரமாய் ஜொலிக்க வேண்டுமென்று சகபத்திரிகையாளன் என்ற முறையில் வாழ்த்துகிறேன்.


இஸ்லாமிய பத்திரிகை துறைக்கு தகவல் களஞ்சியமாக திகழும் தங்களை மனதார பாராட்டுகிறேன்.




தோழமையுடன்…

திருச்சி சையது.
trichysyed@yahoo.com



MM Shahul Hameed
ccAbdul Rahman ,
Syed Himana ,
Javid Ahamed
dateThu, Mar 5, 2009 at 8:43 PM
subjectCongrats


Assalamu alaikum my dear Hidayathullah. How are you and the family?

I was going thro the Q & A section of the Nargis Meelad Malar. To a question by a reader, Dr Himana Syed expresses his happiness and appreciation to your extraordinary skill in immediately reporting thro net informations and news items in general and those related to our community in particular. I used to wonder about your speed in passing on informations to people throughout the globe. Sometimes, we come to know about happenings in our own surroundings thro your mails!

Dr HS himself is a great writer and speaker with a true commitment towards the welfare of our community. Modirakayyaal thattikodukkapattulleergal! Hearty congrats!
As a Jamalian, I am proud of you for your great service to the community. May Allah bless you! MMS


Syed Ibrahim
dateThu, Feb 19, 2009 at 6:18 PM
subjectRe: Fwd: ராமதாசின் மண்டையில் உரைக்கட்டும்!!

your journalistic jump is very high, Alhamdhulillaah, you are destined to reach very high levels of utility oriented journalism. welldone . we are proud of you himanasyed


|| editor || www.sangamamlive.com ||
dateThu, Feb 19, 2009 at 6:10 PM
subjectRe: ராமதாசின் மண்டையில் உரைக்கட்டும்!!

அன்பின் நண்பருக்கு,

தாங்கள் அனுப்பிய ராமதாசின் மண்டையில் உரைக்கட்டும் எனும் தலைப்பிலான கட்டுரை கிடைத்தது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சனை குறித்து நானும் செவியுற்றேன். தாங்கள் அனுப்பியுள்ள ஆக்கத்தில் உள்ள கருத்துக்கள் செறிவுடையவையாக இருந்தாலும் போதுமானதாக இல்லை ஆகவே இன்னும் ஆதரங்களுடன் அனுப்பிட அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

நட்புடன்
விஜய்


kudanthai hussain
dateTue, Feb 17, 2009 at 2:20 PM
subjectformal

dear hidayath.
assalauallikum(warah)
i want to know whether the THEN KOODU is functioning are not?.
how i link my blog with other blog?
i hope you are well. convey my best wishes to all my friends.
wwassalam.
Prof. Tamilmamani Kuanthai Dr. Hussain,
kumbakonam

fromFirdouse Rahman Khan
dateTue, Mar 4, 2008 at 9:13 AM
subjectRe: துபாயில் நூல் அறிமுக விழா / துபாயில் ரத்ததான முகாம்

Dear Hidayath

Assalamu alaikum(wah).

Well and wish to hear about your welfare.

When I see your activities and social involvement, I am really proud of and to extent jealous also.But I sincerely and wholeheartedly pray for your continued services to our Islamic society.I think it was my gift from God to meeting you in Dubai.

I am also more eager to join you with hands provided I am there in UAE. But my naseeb, I am in Oman.

Thanks a lot.

Remember you in all my duas and prayers.

With regards
Firdouse

navaneetha krishnan
dateSat, Feb 7, 2009 at 12:48 AM
subjectRe: Vanakkam

நண்பரே தங்களின் வலைப்பூவை இன்றுதான் கண்டேன். மிக்க மகிழ்ச்சி! அதில் அதிகாலை லோகோவைக் கண்டதும் இன்னும் ஆனந்தம். நீங்கள் அதிகாலையின் இணைப்பை (Image Link) தங்களின் வலைப்பூவில் நிரந்தரமாகக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். மேலும் முதுகுளத்தூர்.காம்-தான் நமது நட்பை உருவாக்கியது. தாங்கள் மறந்திருப்பீர்கள், எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சரி முடிந்தால் முதுகுளத்தூர்.காம்-மிலும் இணைப்புத் தர முன்வந்தால் எமக்குப் பேருதவியாக இருக்கும். தொடர்ந்து நமது நட்பும் சகோதரத்துவமும், தமிழ்ச் சேவையும் நெடுநாள் தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியவேண்டும். நான் வளைகுடாவில் இருந்தபோது தங்களைச் சந்திக்க இயலவில்லை, பரவாயில்லை இன்ஷா அல்லாஹ் நாம் ஒருநாள் எங்காவது சந்திப்போம்! தங்களின் அனைத்து ஒத்துழைப்பும் அளவிடற்கரியது. மேலும் தங்களின் அனைத்து வலைப்பூக்களையும் அதிகாலையில் இணைத்துவிடவும். தங்களின் http://muduvaihidayath.blogspot.com/ வலைப்பூவை நான் ஏற்கனவே அதிகாலையில் இணைத்தும்விட்டேன். தங்களுக்குச் சிரமமெனில் எனக்கு வலைப்பூக்களின் முகவரியை அனுப்புங்கள். நான் இணைத்துக்கொள்கிறேன். ஆனால் அந்தந்த வலைப்பூக்களில் அதிகாலையின் இணைப்பு இருந்தால்தான் அதிகாலை இணைக்க ஏற்றுக்கொள்ளும். எனவே இணைப்புகளைக் கொடுத்துவிட்டு எனக்குத் தெரிவிக்கவும். நன்றி!

புரட்சி வாழ்த்துக்களுடன் - நவநீ/நவின்
www.adhikaalai.com
http://manuneedhi.blogspot.com

MM Shahul Hameed
dateTue, Feb 3, 2009 at 8:36 AM
subjectSpecial thanks

Dear Br Hidayath, Assalamu alaikum. I must convey our special thanks to you since you could make it on the day when the NAAC Peer Team visited our college and participated in the Alumni Meet with the Team members. The information I mailed you is for general announcement which I know you will immediately execute. May Allah bless you and your family. Regards. Dr M.M. Shahul Hameed
JAMAL MOHAMED COLLEGE
TRICHY

navaneetha krishnan
Ramesh Viswanathan
dateThu, Feb 5, 2009 at 11:46 PM
subjectRe: Adhikaalai Logo in our UTS Website

Yes.... Its working great... Thank you very Much.
மிக்க மகிழ்ச்சி! அருமையானதொரு வாய்ப்பை அதிகாலைக்கு ஏற்படுத்தித்தந்த அருமை நண்பர் ஹிதயத்துக்கும், தங்களுக்கும் அதிகாலை எப்போதும் கடமைப்பட்டுள்ளது. தொடர்ந்து தங்களது ஒத்துழைப்பும், நமது மேன்மைமிகு நட்பும், பரிமாறல்களும் தொடர இறைவனை வேண்டுகிறேன். தங்களின் லோகோ அதிகாலையில் இணைப்பதற்கான பணி நடந்து கொண்டுள்ளது. விரைவில் தெரிவிக்கிறேன். மிக்க நன்றி!

புரட்சி வாழ்த்துக்களுடன் - நவநீ/நவின்
www.adhikaalai.com
http://manuneedhi.blogspot.com

navaneetha krishnan
dateTue, Feb 3, 2009 at 9:43 PM
subjectRe: Fwd: Video of the Holy Kaaba from Inside

Wow....Thanks for the opportunity to see such a wonderful heaven inside.... I am really lucky. Hidayath! Can I put in the site in Spiritual section?

புரட்சி வாழ்த்துக்களுடன் - நவநீ/நவின்
www.adhikaalai.com
http://manuneedhi.blogspot.com

Sudarvamsam vamsam
dateSun, Feb 1, 2009 at 10:18 AM

Mikka Nandri, Thiru Hidayath.


Raghu

Syed Ibrahim
dateSat, Jan 17, 2009 at 9:27 AM
subjectRe: Fwd: துபாய் ஈமான் அமைப்பு நட‌த்தும் அல்ஹ‌ம்துலில்லாஹ் நிக‌ழ்ச்சி

Alhamdhulillah.
Insha Allah you will get more and more recognition IN THE DAYS TO COME AS YOU ARE SHOWING IMPROVEMENT IN YOUR EFFORTS EVERY DAY.
I have received many appreciative notes recently from Brother Salim of Jamiyah Singapore and Sangkam Ilyas who recently visited you in Dx.
I always pray for you, dear Hidayathullah!
Tomorrow, Insha Allah I am moderating a Mega lecture series Inauguration organised by JAMIYAH and all the Indian Muslim Organisations, the first of its kind in singapore.
PRAY FOR ITS SUCCESS -HS


Abdul Baqavi
dateFri, Jan 16, 2009 at 5:19 PM
subjectRe: துபாய் ஈமான் அமைப்பு நட‌த்தும் அல்ஹ‌ம்துலில்லாஹ் நிக‌ழ்ச்சி

Dear Hidayath,
its been a pleasure receiving emails from you as a member of Imantimes.

I have no idea how I got my name involved in this. Probably through efforts of Thalapathi's son Abdul Rahman. Many of your contents are useful and a reflection of events happening in our community. I am quite impressed with all your initiative and it is very encouraging to note that you have excelled in this activity with vigour and energy. God bless this wonderful initiative of yours for many years to come.

I love the focus of Iman times on the Tamil Muslim community. The events and happenings of the community are well revealed. Not taking sides or getting involved in any unnecessary controvery. Keep up the good work Hidayath and I look forward to meeting you someday.

Please remove the following email addresses from the group:
baqavi@singnet.com.sg
sumayab.2005@business.smu.edu.sg
sooffiyah@hotmail.com

Include the new address given below:
abdulbaqavi@gmail.com

This address is created to receive your emails. I also request you to avoid having third parties using our emails. Some of the contents are definitely not in par with the group's intention.

I live in Singapore and note down my mobile number if you drop by. +65 90307249. This is for your own record only. Thanks and best wishes.

Abdul Hameed Baqavi

navaneetha krishnan
dateFri, Jan 23, 2009 at 8:24 AM
subjectRe: நன்றி!

நன்றி ஹிதாயத்! தங்களுடைய ஒத்துழைப்பிற்கும் முயற்சிக்கும் அதிகாலை எப்போதும் நன்றியுள்ளதாகவே இருக்கும்.

வாழ்த்துக்களுடன் - நவநீ/நவின்
www.adhikaalai.com
http://manuneedhi.blogspot.com

navaneetha krishnan
dateMon, Jan 26, 2009 at 9:00 PM
subjectமிக்க மகிழ்ச்சி

மிக்க மகிழ்ச்சி ரமேஷ்! தங்களின் நட்புக்கும் நண்பர் ஹிதாயத் நட்பிற்கும் மகிழ்ச்சி! தமிழ் எங்கு வளர்ந்தாலும் அதற்காக எம்மால் ஆன துளியளவு ஆதரவையாவது பங்களித்தால்தானே தமிழர்களாகப் பிறந்ததற்கு பேறு! மிகுந்த மகிழ்வோடு தங்களின் கைகளோடு எம் கைகள் கோர்த்து பிரயாணிக்க அதிகாலை பெருமிதம் கொள்கிறது! நன்றி!

வாழ்த்துக்களுடன் - நவநீ/நவின்
www.adhikaalai.com
http://manuneedhi.blogspot.com

From: Ramesh Viswanathan
Sent: Monday, 26 January, 2009 6:14:36 AM

Dear Mr. Navaneetha Krishnan,

Good day. How are you ? By gods grace we are fine in UAE.
Thank you very much for all your support.
Because of our Media Secretary Mr. Muduvai Hidayath our UAE Tamil Sangam www.uaetamilsangam.com is growing day by day.
Special thanks to UTS (UAE Tamil Sangam) Media Secretary.
Once again thank you very much Mr. Navaneetha Krishnan.


With
Ramesh Viswanathan

2009/1/26 navaneetha krishnan

Vanakkam Hidayath,
Pl view this link, scroll down for viewing all photos below the news in the site..... FYI. Thanks for the wonderful photos and pl forward to your friends. Dubai night view is already uploaded in the site, but i have some error... soon which will be published and let you know.

துபாய் : UAE தமிழ்ச்சங்கம் நடத்திய 'பொங்கல் விழா' புகைப்படத்தொகுப்பு

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10115&lang=ta&Itemid=188

புரட்சி வாழ்த்துக்களுடன் - நவநீ/நவின்
www.adhikaalai.com
http://manuneedhi.blogspot.com

Samsudeen Sultan Salahudeen
dateThu, Jan 22, 2009 at 8:29 PM
subjectRe: PADITHADHIL PIDITTHAVAI

Assalamu Alaikkum Wr. Wb. Mr. Hidayath.......!

All of your messages are very useful one and have to protect it for future reference. But it is having lot of spelling mistakes and font mistakes also.
If you can do something to avoid such things it will be very useful and help to read tamil in net without any difficulties.

Expecting your quick attention in this regard.

Thanks & regards

Vassalam


S.SHAMSUDEEN
Thidal - Mudukulathur

Habib Mohamed
dateSun, Jan 4, 2009 at 1:27 AM
subjectRe: MAIL FROM HIDAYATH

Dear Hidayath,

Asalamu alaikum warahmathullahi wa barakathuhu. Thanks for approving my request to join this groupg.

As you requested I am introducing myself. I am son of Mohideen son of Quasim [late] (brother of Mohamed Aliyar[late] ). Hope I make sense to you. From child I spent most of the time in Chennai. So, I do not much aware of the happening in Muduvai. I came across this Muduvai group from one of my relatives' email.

Can you kindly introduce yourself. Sorry, to ask this eventhough you may be well known by the most of the Muduvai people.

Are you in Muduvai or in any other country? Very intersted to hear the life in Muduvai from this group.

Jazakallahu Hair...

With regards,
Habib


Kader Mohideen
dateSat, Jan 3, 2009 at 1:01 PM
subjectThanks

Dear Hidayath,
Thanks for your unlimited emails, and also I am happy for joined by you with the Muduvai Groups
Thanking you
With warm Regards
A.Kader Mohideen
CSC - Mudukulathur


fromKader Hussain
dateMon, Jan 5, 2009 at 7:27 AM
subjectமுதுவை ஹிதாயத்

hello முதுவை ஹிதாயத்

if you still remember..jmc life, kadir ibrahim hostel, gani, kiyas, afsal and kader. yes, it is me. i happend to see your blog and took the email from there.

happy to see that you are working dubai. i visited there few times and saw gani and co.

just want to say hi....rest after your reply

keep in touch

Kader


nri_news dinakaran
dateFri, Dec 26, 2008 at 2:38 PM
subjectRe: அமீர‌க‌த்தில் கிறிஸ்தும‌ஸ் கொண்டாட்ட‌ம்

dear sir ,
please make your information as an attachment with an extensions .doc or .txt
ie,.... type your info in notepad or word document and attach it along with font name ......

thanks & regards,...
vanangamudi .v


nazumu deen
dateFri, Dec 26, 2008 at 5:02 PM

Assalamu Alaikkum


Thank u very much for your kind cooperation.

Another thanks for adding this group.

Mr. Nizam (Rahmath Printers) is one of my Friends.

Regards,

(Nazumu Deen)


asan mohamed
dateThu, Dec 25, 2008 at 4:18 PM
subjectRe: Departing of the Soul

Assalamualaikkum(WrWb)

Very useful message brother.

Thanks


Seyed Ibrahim
dateSun, Dec 21, 2008 at 8:23 PM
subjectYour Blog & My mail ID

Assalamu Alaikum முதுவை ஹிதாயத்,

I was doing a google search, and hit upon your
http://muduvaihidayath.blogspot.com/ . It had a ton of information,
and copy of my email "Improving the School Education" sent to some
brothers. I was glad to see that, but also has a request.

Could you Please REMOVE my email id seyed.ibrahim@gmail.com from your
blog. Web crawlers look for the mail ids and send Junk emails. Thank
You.

Question: Just curious to know How did you get my email?

Wassalam
--
Seyed Ibrahim
Chennai-29

E D I T O R - sangamamlive
reply-toeditor@sangamamlive.in

toMuduvai Hidayath

dateWed, Dec 17, 2008 at 3:22 PM
subjectRe: தேசிய யோகாசனப் போட்டியில் லதாங்கி பள்ளி மாணவர்க்குத் தங்கம்

hide details 3:22 PM Reply


அன்பின்ய நண்பருக்கு,

தாங்கள் அனுப்பிய செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து செய்திகள் அனுப்பி வருவதற்கு மிக்க நன்றிகள்.

தாங்கள் தொடர்ந்து சங்கமம்லைவிற்கென்று தாங்கள் எழுத அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

நிகழ்வுகள்,செய்திகள்,தகவல்கள்,அறிவிப்புகள்,கட்டுரைகள்,சிறுகதைகள்,கவிதை என எதுவாக வேண்டுமானாலும் நீங்கள் அனுப்பலாம். வேறு எந்த ஊடகத்தில் வந்ததாக இருக்கக் கூடாது.

தங்களின் அன்பிற்கு நன்றிகள்

நட்புடன்
விஜய்


navaneetha krishnan
dateMon, Dec 15, 2008 at 11:15 PM
subjectRe: எளிய முறையில் தண்ணீரை கொதிக்க வைக்க

Thank You Hidhayath... I expect more from you.

சுலபமாக தண்ணீர் கொதிக்கவைக்கும் சாதனம் - சத்திரக்குடி மாணவர்கள் சாதனை

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=8563&lang=ta&Itemid=52

புரட்சி வாழ்த்துக்களுடன் - நவநீ/நவின்
www.adhikaalai.com
http://manuneedhi.blogspot.com

abdul rahman
"Ali, Liyakath" ,
Muduvai Hidayath
date Dec 2, 2008 8:14 AM
subject Re: Fwd: this news air on 1 dec 10 pm india time thank u ,

Very Good action Hidayath.
Thanks.

Abdul Rahman

gulfnews news
date Dec 1, 2008 9:29 PM
subject Re: this news air on 1 dec 10 pm india time thank u ,
mailed-by gmail.com
asslam bro this news air on 1 dec 10 pm india time thank u ,

kindly send follow up of the news with pic
thank you
by
M.I. Yacoob ( gulfnews editor )
9884107959


kalam kadir
dateSat, Nov 22, 2008 at 10:09 PM
subjectRe: பாலையான வாழ்க்கை

இதயத்தில் உள்ள ஹிதாய்த்துல்லாஹ்
உதய நேரம் என்னிடம் சொன்ன செய்தி
தூங்கி கொண்டிருந்த என்னிடம்(சனிக்கிழமை விடுமுறை)
தூங்கி விடாது என்றென்றும் கவிதை யாத்திட வேண்டும் என்ற
ஆர்வத்தை தூண்டும் வண்ணம் அவாவினை உண்டாக்கியது
போர்வையை விட்டு விட்டு போய்ப்பார்த்தேன்
உண்மையில் நீங்கள் உண்மையான நண்பரே
இம்மையிலும் மறுமையிலும் எல்லாம் பெறுவீரே.............


Vasantha Vaasal Saleem Basha
date Oct 19, 2008 9:15 PM
subject சேவைக்கு இல்லை விடுப்பு..

அன்பு நண்பர் ஹிதாயத் அவர்களுக்கு...
தங்களின் சமுதாய பற்றும் சேவை மனப்பான்மையும் பிறருக்கு உதவிடும் ஆர்வமும் கண்டு எப்போதும் நான் வியப்பும் பெருமிதமும் அடைவதுண்டு!

ஆனால், களைப்பாற விடுமுறையில் நாடு திரும்பிய போதிலும்...சிறிதும் சுனக்கமின்றி சமுதாய பணியில் ஈடு படுவதென்பது...நிச்சயமாய் எல்லோராலும் இயலாது என்பது உண்மையிலும் உண்மை.

தொடரட்டும் உங்கள் சேவை!
மலரட்டும் இனிய சமுதாயம்!!
மறு மலர்ச்சி பெறட்டும் சமூகம்!!!

எல்லாம் வல்ல அல்லாஹ்-நம்
அனைவருக்கும் துணையும் அருளும்
பொழியட்டுமாக.(ஆமீன்!)




Tamil Anna
dateSun, Aug 17, 2008 at 8:44 AM
subjectGreetings Fromadhikaalai.com

அன்பின் ஹிதாயத்,
உங்களை சிறப்புச் செய்தியாளர்
என்றே போட்டுவிட்டோம்.
பார்த்தீர்களா?
--
நன்றி,
தமிழண்ணா,
அதிகாலை.
www.adhikaalai.com
http://www.adhikaalai.com/index.php?/en/செய்திகள்/உலகம்/ஒரே-பிரசவத்தில்-ஏழு-குழந்தைகள்!



ஏ.கே.கான்
ஆசிரியர்,தட்ஸ்தமிழ்.காம்
பெங்களூர்

AK Khan
ccsettu sankar ,
arivualaganarivu@gmail.com
dateTue, Jun 17, 2008 at 11:45 AM

Dear Hidayat,

You can send litrature related articles to Mr. Shankar who has joined our team

Shankar: Hidayat is a very good friend and a major news source for us on local and Gulf affairs

Regards,
Khan


பிர்தொஸ்
ஓமன்

Assalamu alaikum(wah).

Well and wish to hear about your welfare.

When I see your activities and social involvement, I am really proud of and to extent jealous also.But I sincerely and wholeheartedly pray for your continued services to our Islamic society.I think it was my gift from God to meeting you in Dubai.
I am also more eager to join you with hands provided I am there in UAE. But my naseeb, I am in Oman .

I am sure you will keep me in mind.

Thanks a lot.

Remember you in all my duas and prayers.

With regards
Firdouse
firdouse7@gmail.com


அப்துல் மாலிக்
ஜித்தா


Dear brother,
Assalamu Alaikkum.
Its a honor that you have kindly extended to me by publishing about the IUML award and my brief in 'Dina Malar' daily. More than everything I consider having friends like you are my real asset.

We intend to go on vacation during end July. We shall try to meet if you also happen to be Chennai around that time.

Thanks for your kind gesture once again and please Pray for me.
With Duwa'as and salaams

http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=777&Country_name=Gulf&cat=new

A Malik
malikamalik22@hotmail.com

Mon, Jul 7, 2008 at 11:25 AM
subjectRE: Tnx for the report

Dear brother, Assalamu Alaikkum.
You have embarrassed me with your intro. Though our meeting was brief it is still in my green memories. Since then iam interacting with ur emails which are really informative and useful. May Almighty reward you for the good work. Kindly do let me know whenever you happen to pass by Jeddah. Please convey our regards and salaams to your family too.
A Malik


abushaimah@gmail.com has invited you to join the GTMG group with this
message:

அன்புச் சகோதரர் முதுவை ஹிதாயத் அவர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

இணையத்தில் செய்திகளை முந்தித் தரும் உங்கள் சேவையை அறிவேன். உலகத் தமிழ்
முஸ்லிம்களின் ஒருங்கிணைப்பு முயற்சியாக என்னைப் போன்ற சில சகோதரர்கள் தொடங்கிய
இக்குழும முயற்சிக்கு உங்களை அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இணைந்து கொள்ள விருப்பம் இருந்தால் இவ்வழைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்

அன்புடன்

அபூஷைமா

Here is the group's description:

Global Tamil Muslim Groups


சற்றுமுன்னின் வருங்காலம்?

அண்மைக்காலமாக முதுவை இதாயத் மட்டுமே மிகத் தீவிரமாகத் தொடர்ந்து
பங்காற்றி வருகிறார். முன்பு போல் வெறுமனே செய்திகளை வெட்டி ஒட்டி
கொண்டிருப்பதற்கான தேவை இருப்பதாய் தெரியவில்லை. இந்த உழைப்பை இன்னும்
திறமாக நாம் பயன்படுத்துவது குறித்துச் சிந்திக்க வேண்டும்.

ரவி

முன்னாள் எம்பியும் இந்நாள் எம்பியும்

புஜைரா வாரந்திர மாட்டுச் சண்டை


ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜைராவில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மாட்டுச்சண்டை நடைபெற்று வருகிறது.

இது சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது.

முன்னாள் ஜனாதிபதி முனைவர் அப்துல் கலாம்

Monday, January 21, 2008

வலைப்பதிவுலகம் - வலைக்கும்மி

வலைப்பதிவுலகம் - வலைக்கும்மி

2002 வாக்கில் கணினியில் திக்கித் திணறி தமிழில் தட்டியபோது பெரும் அதிசயமாக
உணர்ந்தது இப்போதும் நினைவிருக்கிறது. அன்று முழுவதும் கனவில் தமிழ்
எழுத்துகளாக வந்தன! இணையக் குழுமங்களில் இணைந்து எழுதத் தொடங்கி,
வலைப்பதிவுகளில் எழுதத் தொடங்கி, இன்றைக்குப் பார்த்தால் 2400க்கும் மேற்பட்ட
வலைப்பதிவுகளில் தினமும் தோராயமாக 200 பதிவுகள் எழுதப்படுகின்றன. இன்றைக்குத்
தமிழ் ஊடகங்கள் இந்த வலைப்பதிவுகளையும் இணையத் தளங்களையும் புறக்கணிக்கவே
முடியாது. அப்படி ஒரு பூதாகரமான வளர்ச்சியை அடைந்துள்ளது தமிழ் இணைய
எழுத்துலகம். ஆனால் அந்த வளரச்சி தரும் இலக்கிய அனுகூலங்களோ
கேள்விக்குரியனவாகத்தான் இருக்கின்றன.

2000 வாக்கில் இணையத்தில் எழுதிக்கொண்டிருந்த சில எழுத்தாளர்கள், அடுத்த
தலைமுறை எழுத்தாளர்கள் இணையத்திலிருந்தே வருவார்கள் என்று
சொல்லிக்கொண்டிருந்தார்கள். இன்றைக்கு, கழிந்துவிட்ட இந்த ஏழு வருடங்களில்,
இணையத்திலிருந்து வந்து அச்சுலகில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும்
எழுத்தாளர்கள் எவருமே இல்லை. இனி வரும் என்று நம்பலாம் என்று சொல்லத்தக்க
அளவிலும் இணையத் தமிழ் உலகில் செறிவான எழுத்துகளும் காணக் கிடைப்பதில்லை.
அப்படியே ஒன்றிரண்டு கிடைத்தாலும் ஒப்பீட்டு அளவில் அது மிகவும் குறைவாகவே
உள்ளது.

இன்றைக்கு வலைப்பதிவுகள் என்பது நினைத்த நேரத்தில், நினைத்த விஷயத்தை எழுதி
விடக்கூடிய இடமொன்றை மட்டுமே பெற்றிருப்பதாக நான் நினைக்கிறேன். பரந்து
கிடக்கும் 2400க்கும் மேற்பட்ட வலைப்பதிவுகளில் தீவிரமான இலக்கிய நோக்குடையவை
என இருபது வலைப்பதிவுகள் தேறினாலே பெரும் விஷயம். இணையத்தில் எழுதப்படும்
எழுத்துகளில் பெரும்பாலும் காணக் கிடைப்பவை ஜாதி பற்றிய சொல்லாடல்கள், தமிழக,
ஈழ அரசியல் பற்றிய சீற்றங்கள் மற்றும் நிறைய தனிப்பட்ட குறிப்புகள் இவை
மட்டுமே. இவற்றில் தீவிரமாக எழுதுபவர்கள் மிகமிகக் குறைவே. அப்படி தீவிரமாக
எழுதுபவர்களும் காலம் காலமாக சொல்லிக்கொண்டிருந்தனவற்றையே மீண்டும் மீண்டும்
சொல்லிக்கொ¡ண்டிருக்கிறார்கள். தனிப்பட்ட தாக்குதல் மீறிய விவாதம்
நிகழ்ந்துவிட்டால் அதை அதிசயங்கள் பட்டியலில் சேர்த்துவிடலாம்.

கட்டற்ற சுதந்திரம் என்னும் மந்திரச் சொல்லே இந்த வலைப்பதிவுக்களின் அடிநாதமாக
விளங்குகிறது. உண்மையில் ஒரு தனிமனிதனுக்குத் தரப்படும் கட்டற்ற சுதந்திரம்
என்பது, அவன் சமூகத்தோடு சேரும்போது கடுமையாக மட்டுப்படுத்தப்படுகிறது என்பதை
உணராமல், கட்டற்ற சுதந்திரம் என்னும் வார்த்தைக் கோவைகள் தரும் நேரடி
அர்த்தத்தை மனதில் கொண்டே, பல வலைப்பதிவுகள் எழுதப்படுகின்றன. அதனால்
இயல்பாகவே அவை தாக்குதலில் ஈடுபடுகின்றன. செறிவான விவாதம் என்பதே வலைவிரிக்கும்
பூடகமான தாக்குதல் நிறைத்தே எழுதப்படுகிறது. அதேபோல் இந்த வலைப்பதிவுகள்
நிராகரிப்படாத எழுத்துகளின் தொகையாக விளங்குகின்றன. இதனால் ஒரு வலைப்பதிவு
எழுத்தாளன், நியாயமாக ஒரு எழுத்தாளன் அனுபவித்திருக்கவேண்டிய மட்டுறுத்தல்
மற்றும் தகுதியில்லாத எழுத்துகள் என்பன போன்ற வடிகட்டுதலை சந்திப்பதே இல்லை.
இதனால் வலைப்பதிவு எழுத்தாளன் மனதில் அவனைப் பற்றிய ஒரு மிதமிஞ்சிய அனுமானமும்
சித்திரமும் ஏற்பட்டுப்போகிறது. இரண்டு கட்டுரைகள் எழுதிப் போட்ட உடனேயே தான்
ஒரு எழுத்தாளன் என்கிற பிரமை ஏற்பட்டுவிடுகிறது. அச்சு உலகில் ஒரு எழுத்தாளன்
கடந்து வரவேண்டிய சவால்கள் எவற்றையும் காணாமலேயே ஒரு இணைய எழுத்தாளன் அந்த
இடத்தை அடைந்துகொள்கிறான். இதனால் ஏற்படும் சௌகரியம் நம்பிக்கை என்றாலும்
அதன் இன்னொரு கோடியான அதீத நம்பிக்கையில் எழும் அபத்தங்களைக் கூட சிறந்த
எழுத்து என்றும் நம்பும் எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது. இதனால் வலைப்பதிவுகளில்
எழுதத் தொடங்கும் ஒருவன் அடையவேண்டிய இலக்குகளை அடையமுடியாமல், தொடர்ந்து
வலைப்பதிவுகளில், எப்படி எழுதத் தொடங்கினானோ அப்படியே எழுதிக்கொண்டிருக்கிற
அல்லது மடிந்துபோகிற ஒருவனாகிவிடுகிறான்.

கணினியில் தமிழ் எழுதத்தெரிந்தாலே எழுத்தாளனாகி விடலாம் என்கிற எளிமையான
சூத்திரத்தில் ஆட்பட்டு எழுதத் தொடங்கும் எவரும், இதுவரை தமிழ் எழுத்துலகம்
கண்டிருக்கிற உயரங்களை, வீழ்ச்சிகளை, சவால்களைப் பற்றிய எந்தவித அறிவும்
இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இன்றைய அச்சு எழுத்தாளர்கள் மீதே 'தமிழின் மரபை
அறியாதவர்கள்' என்கிற விமர்சனம் வைக்கப்படும் நிலையில், இன்றைய வலைப்பதிவு
எழுத்தாளர்கள் தமிழின் தற்போதைய எழுத்தாளர்களின் இலக்கியப் பங்களிப்பைக் கூட
அறியாதவர்களாக இருக்கிறார்கள். ஆனந்த விகடன், குமுதம் வழியாக இலக்கியத்தை அடைய
இவர்கள் எடுக்கும் முயற்சி இவர்களை ஒரு ரெண்டுங்கெட்டான் நிலையில் கொண்டு
சேர்க்கிறது. இதனால் வெகுஜன இதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் வளர்ந்த வெகுஜன
திரைப்படங்களும் அது சார்ந்த ஆழமற்ற எழுத்துகளும் மேலும் 'சிறப்பாக' இங்கு
வளர்கின்றன. குறைந்தபட்சம் எழுதத் தொடங்கிய பின்பாவது, இதற்குமுன் தமிழில்
இருக்கும் இலக்கியங்களைப் படிப்பது பற்றிக் கூட யோசிப்பதில்லை என்பது யதார்த்த
சோகம். இணையத்தில் எழுதத் தொடங்கி, சிறப்பாக தொடர்ந்து முன்னேற்றம்
கண்டுவரும் எழுத்துகளை இனம்கண்டு ஒன்றிரண்டு உதாரணங்களைக் கூறலாம் என்ற
போதிலும், அவற்றையே பொதுக்கருத்தாக முன்வைக்க முடியாது என்பதே நிதர்சனம்.

வலைப்பதிவுகள் தொடங்கிய காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த
வலைப்பதிவுக்களைத் திரட்ட, திரட்டிகள் தோன்றியபோது அவை ஒரு வசதியை
முன்னிறுத்தியே செயல்பட்டன. ஆனால் அதிலிருந்து வரும் ஹிட்டுகளின் எண்ணிக்கை
வலைப்பதிவுக்களின் தரத்தை நிர்ணயிக்கும் சக்தி என்கிற எண்ணம் நிலைபெற்றபோது,
வலைப்பதிவுகளில் எழுதப்படும் எழுத்தின் தரம் மேலும் சரியத் தொடங்கியது. வாசகனை
திடுக்கிடச் செய்து உள்ளே அழைத்துவரச் செய்யும் கிறுக்குத்தனமான தலைப்புகளுடன்
கும்மிப் பதிவுகள் வரத் தொடங்கின. [இந்த இடத்தில் இன்னொன்றைச்
சொல்லவேண்டும். நிறைய வலைபதிவர்கள் எழுதுவதால் புழக்கத்திற்கு வரும் புதிய
சொற்களை வலைப்பதிவு உலகம் தானறியாமலேயே தமிழுக்குத் தந்துகொண்டிருக்கிறது.]
தொடர்ந்து திரட்டிகள் பின்னூட்டங்களையும் (Comments) திரட்ட ஆரம்பித்தன. அதிக
பின்னூட்டங்கள் வேண்டி செய்யப்பட்ட அரசியலைப் பற்றி எழுதவேண்டுமானால் பெரிய
புத்தகமே போடவேண்டியிருக்கும். இதில் வலைப்பதிவுவுலகம் பெரும் வீழ்ச்சியைச்
சந்தித்தது என்றே சொல்வேன். ஒருவகையில் இந்தத் திரட்டிகள் தொடக்கத்தில்
வலைப்பதிவுக்களுக்கு புத்துணர்ச்சியைத் தந்தாலும், அதன் எதிர்வினையாக ஒரு பெரிய
சரிவையும் தந்துவிட்டன என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இன்றைக்கு இந்தத்
திரட்டிகளின் தேவையை நிராகரிக்கவே முடியாது என்பதையும் சொல்கிறேன். இந்தத்
திரட்டிகள் இல்லாவிட்டால் எங்கிருந்தோ யாராலோ எழுதப்படும் எழுத்தை ஒரு வாசகன்
நினைத்த நேரத்தில் சென்றடையமுடியாது. ஆனால் எத்தனை தூரம் இந்தத் திரட்டிகளின்
தேவை மிக மிக முக்கியமானதொன்றாக இருக்கிறதோ, அத்தனை தூரம் அது வலைப்பதிவுகில்
ஆரோக்கியமற்ற போட்டியையும் உருவாக்கி விட்டது. இது வலைப்பதிவர்களின்
தனிப்பட்ட மனோபாவத்தால்தான் நிகழ்கிறது என்றாலும் பொதுக்காரணியாக இந்தத்
திரட்டிகளே விளங்குகின்றன.

தொழில்நுட்பம் தரும் வசதிகளை அனுபவிக்கும்போது தொடர்ந்து அது தரும்
இன்னல்களிலிருந்து மீளமுடியாத அதே நிலையை இந்தத் திரட்டிகளுக்கு ஒப்பிடலாம்.
பின்னூட்டங்கள் திரட்டப்பட்டதைத் தொடர்ந்து வலைப்பதிவுலகில் முதன்மை பெற்றவை
விவாதங்கள். பெரும் விவாதங்களெல்லாம் நிகழ்ந்திருக்கின்றன. ஒரு விவாதத்தின்
மூலம் பொதுக்கருத்தை எட்டிவிடவே முடியாது. அதற்கான வரலாறே நம்மிடம் கிடையாது.
உண்மையில் இதுவே சாத்தியமானதும் கூட. இதை உணர்ந்தவர்கள் குறைவாகவும், நம்
கருத்தே பொதுக்கருத்து என்னும் ஆரம்பநிலை எழுத்துகளை
பிரதிநிலைப்படுத்துபவர்கள் அதிகமாகவும் சேர, விவாதங்கள் அதைமீறிய தாக்குதல்
நிலையையும், அதைத் தொடர்ந்து விவாதித்தவர்கள் மீதான முன்முடிவையும்
ஏற்படுத்தின. ஒரு அச்சு ஊடகத்தில் நிகழும் உள்ளரசியலுக்கு இணையான, அதை மிஞ்சும்
பெரும் அரசியல் இன்றைய நிலையில் வலைப்பதிவுலகில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
ஒருவரின் ஜாதி மற்றும் மதத்தைச் சார்ந்த விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் ஒருவரால்
இணையத்தில் எழுதவே முடியாது. பெண்கள் என்றால் இருக்கவே இருக்கிறது கற்பு பற்றிய
சொல்லாடல்கள். இதையும் மீறி விவாதம் செய்யும் பெண்களை விரல்விட்டு
எண்ணிவிடலாம். அல்லது எளிதாக இல்லை என்றே சொல்லிவிடலாம்.

வலைப்பதிவுவுலகின் இன்னொரு முக்கிய பின்னடைவு Anonimity. யார் என்கிற விவரம்
இல்லாமல், எங்கிருந்து எழுதுகிறீர்கள் என்கிற விவரம் தெரியாமல் நீங்கள் ஒரு
வலைப்பதிவை நடத்தலாம், எல்லா வலைப்பதிவுகளிலும் பின்னூட்டம் செய்யலாம். அச்சு
ஊடகங்களில் இவை சாத்தியமல்ல. பிற ஊடகங்களில், நீதிமன்றங்கள், வழக்கு உள்ளிட்ட
விஷயங்கள் உங்களைக் கேள்விக்குட்படுத்தும். ஆனால் இணைய உலகில் இந்தக் கட்டுகள்
இல்லாத சுதந்திரம் இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சுதந்திரம் நம்மால் எப்படிப்
பயன்படுத்தப்படும் என்பது நாம் அறிந்ததே. அதுவே நிகழ்ந்தது. தனக்குத் தானே
வேறுவேறு பெயர்களில் போட்டுக்கொள்ளும் பின்னூட்டங்கள், பொதுவில்
வைக்கமுடியாத வாசகங்களைத் தாங்கிய பின்னூட்டங்கள், வசவுகள், கேள்வி கேட்பது
யாரென்பது தெரியாததால் தரும் சௌகரியங்கள் நிறைந்த கேள்விகள் என பின்னூட்டங்கள்
குவிந்தன. குவிகின்றன. சிலர் எக்கேள்வி என்றாலும் அதன் பொருளைப் பார்ப்பது
என்ற நிலையையும், சிலர் கேள்வியின் முகாந்திரத்தை அறியாமல் வெற்று வெளியுடன்
மோதிக்கொண்டிருக்கமுடியாது என்கிற நிலையையும் எடுத்தார்கள். உண்மையில் அவரவர்
வசதிக்கேற்பவே இந்நிலையை எடுத்தார்கள் என்றே நான் வரையறுக்கிறேன். யார்
எழுதுகிறார்கள் என்று தெரியாமல் வலைவிரிக்கப்படும் ஒரு விஷயமாகத்தான்
இப்படிப்பட்ட அனானிகளை வகைப்படுத்தமுடிகிறது. இயல்பாகவே ஒரு மனிதனுக்குள்
உறைந்து கிடக்கும் அறியாத ஒன்றைத் தேடும் எண்ணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி,
யார் எழுதுகிறார் என்று தெரியாமலேயே நிறைய வருடங்கள் இயங்கும் வலைப்பதிவுகளும்
உண்டு. யார் என்று தெரியாது என்பதே ஒரு identityயாக மாறிவிடும் வலைப்பதிவுகளும்
உண்டு. இவர் யார் என்கிற விவரம் தரும் வலைப்பதிவு கும்மிகள் இதில் அதிகம்
சுவாரஸ்யம் பெற்றதாகவும் ஹிட்டுகள் பெற்றதாகவும் ஆகிவிடுவது அடிக்கடி நடக்கும்.
வலைப்பதிவுகளை ஒருவகையில் இன்றைய கணினி சார்ந்த மக்களின் மனவியல் பதிவாகவும்
கொள்ளமுடியும். அனானிமிட்டி தரும் சுதந்திரம் முகம் சுளிக்க வைத்தாலும் அதில்
நிலவும் உளவியலைப் படிக்கக் கற்றுக்கொண்டால், அது நிகழ்ந்துகொண்டிருக்கும்
காலத்தின் ஆகச் சிறந்த பதிவாக அமையும் என்பதையும் சொல்லவேண்டும்.

வலைப்பதிவு எழுத்தாளர்களின் எழுத்துகளை ஆராய்ந்தால் அவர்களில் சுஜாதா
ஏற்படுத்திய பாதிப்பு விளங்கும். சுஜாதாவின் எழுத்துகளை முன்மாதிரியாக வைத்தே
இன்று எழுதும் பல வலைப்பதிவு எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். சுஜாதாவின்
முறையைத் தாங்கள் பயன்படுத்தும்போது அது ஒரு செயற்கைத் தன்மை
வாய்ந்ததாகிவிடுகிறது என்பதை இவர்கள் உணர்வதில்லை. அப்படி உணர்ந்தால் அவர்கள்
நகரும் புள்ளி, அதற்கு மிகவும் எதிர்த்தன்மை கொண்ட, விளங்கிக்கொள்ள முடியாத
எழுத்துகளாகி விடுகிறது. ஒவ்வொரு எழுத்தாளருக்கும் இருக்கும் தனித்தன்மையைக்
கண்டெடுத்து அதை வளர்க்கும் திறன் நிறைந்தவர்கள் மிகக்குறைந்த நிலையில்
எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும்.

அதுபோல துறை சார்ந்த எழுத்துகள் என்கிற பிரிவை எடுத்துக்கொண்டால், அதில் ஒரு
மிகப்பெரிய தேக்க நிலையையே இன்றைய வலைப்பதிவுகள் கொண்டிருக்கின்றன. அச்சு
ஊடமும் இதே நிலையை சமாளிக்க பெரும் போராட்டங்களை மேற்கொள்ளும்போது,
வலைப்பதிவுக்களை அதிகம் குறை சொல்வதற்கில்லை. ஒன்றிரண்டு முயற்சிகள்
நடந்தாலும், தொடர்ந்து வலைப்பதிவுகளின் உலகம் விரிவடையும்போது இவை
தீவிரமடையலாம். துறை சார்ந்த எழுத்துகளில் ஏற்படும் மறுமலர்ச்சிக்கு
வலைப்பதிவுகள் ஒரு முக்கிய காரணமாக விளங்கமுடியும். ஆனால் அது எப்போது
நிறைவேறும் என்பதை கணிப்பது சவாலானது. பெரும் வெள்ளம் போல
விழுந்தடித்துக்கொண்டு ஓடிவரும் நீரில் கலந்திருக்கும் கசடுகள் போலவே இன்றைய
பெரும்பாலான வலைப்பதிவுகள் தோன்றுகின்றன. நிஜமாகவே புதிய திறப்பில் ஏற்படும்
வெள்ளவேகம் எதிர்பார்க்கக்கூடியதே. அதுவே இன்றைய வலைப்பதிவு உலகில்
நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எதிர்வரும் மிகப்பெரிய காலத்தை மனதில் கொண்டு,
இச்சிறிய காலகட்டத்தைக் கணக்கிட்டால், வலைப்பதிவுகள் சிறப்பான ஒரு மாற்று ஊடமாக
செயல்படமுடியும் என்கிற நம்பிக்கையை வைக்கலாம். அதற்கு அச்சு ஊடகங்களில்
சிறுபத்திரிகை இயக்கங்கள் செய்த வேலையை வலைப்பதிவுகளில் சிறுபத்திரிகையைச்
சேர்ந்த எழுத்தாளர்கள் செய்ய முன்வரவேண்டும். இணைய உலகம், அச்சு உலகம் என்கிற
பிரிவுகளுக்கிடையேயான இடைவெளி சுருங்கி, எல்லா எழுத்தாளர்களும் எங்கும் எழுதும்
நிலை வந்தால் வலைப்பதிவுகளில் நிலவி வரும் விபத்துகள் நாளாவட்டத்தில்
சீரடையலாம்.

வலைப்பதிவுக்களின் சாதனையாகச் சொல்லவேண்டுமானால், உலகம் அடைந்த குறுக்கத்தை
அதிவிரைவுபடுத்தியவை இந்த வலைப்பதிவுகள். எங்கோ நிகழும் ஒரு விஷயத்தில்
பல்வேறு கோணங்களை, முக்கியமான முக்கியமற்ற, தரமான தரமற்ற, இலக்கிய ரீதியிலான
வெகுஜன ரீதியிலான என பல்வேறு முகங்களை நாம் நிமிடங்களில் அடையமுடியும்.
இரண்டாவது, எதைக் குறித்த தகவலும் தேடி அடையலாம். உலகத்தின் ஏதோ ஒரு மூலையில்
யாரோ ஒருவர் நீங்கள் தேடும் விஷயத்தைப் பற்றி நிச்சயம் ஒரு வரியாவது
எழுதியிருப்பார். அது எவ்வளவு உங்களுக்குப் பயன்படும் என்பது வேறு விஷயம்.
மூன்றாவது, எல்லையற்ற எண்ணங்களை எழுதிச் செல்வது. பக்கங்களின் கட்டுப்பாடு
இல்லையென்பதால் நீங்கள் எழுத நினைப்பவற்றை எவ்விதத் தடங்கலும் இல்லாமல் எழுதிச்
செல்லலாம். இது ஒருவகையில் மனவெழுச்சி சார்ந்த எழுத்துகளை
வளர்த்தெடுத்திருக்கவேண்டும். ஆனால் அது நிகழவில்லை. மீண்டும் மீண்டும்
குறிப்புகள் போன்ற விஷயங்களே காணக் கிடைக்கின்றன. இந்த தேக்க நிலை மறைந்து,
தமிழ் அச்சு ஊடகங்களில் சிறுபத்திரிகைகள் நிகழ்த்திய பெரும் மாற்றத்தை,
பாய்ச்சலை உண்டாக்கக்கூடிய எல்லா வசதிகளும் இணைய உலகம் பெற்றிருக்கிறது. அது
முழுமையாக, செறிவாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதே விஷயம். சுஜாதா ஒருமுறை
வலைப்பதிவுக்களை '15 நிமிடப் புகழுக்கு எழுதப்படும் டைரிக் குறிப்புகள்' என்று
சொன்னார். இது பெரும் கொந்தளிப்பை வலைப்பதிவர்களிடையே ஏற்படுத்தினாலும்,
அதிலிருக்கும் உண்மையை அவர்கள் உணரத் தலைப்பட்டால், பிச்சை
எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு யானையின் அவலம் நமக்குப் புரியலாம். அப்போது
'செய்தி ஊடகம்' என்று மட்டுமே இப்போது வரையறுக்கமுடியக்கூடிய வலைப்பதிவுலகம்
மாற்று ஊடகம் என்கிற நிலையை அடையலாம். அடையவேண்டும் என்று ஒரு வலைபதிவுலக
எழுத்தாளனாக பெரிதும் விரும்புகிறேன்.

*சில திரட்டிகள் (அலெக்ஸா ரேட்டிங் அடிப்படையில். இதைச் சொல்லவில்லை என்றால்
பெரிய வெட்டுக்குத்து நடக்கும் வாய்ப்புண்டு.)*

http://www.thamizmanam.com/
http://www.thenkoodu.com
http://tamilblogs.com/a/index.php
http://www.tamilveli.com/
http://www.thamizhbharathi.com/

*பரவலான இணைய உலக பயன்பாடுகள்*

கும்மிப் பதிவுகள்
மொக்கை பதிவுகள்
ஆணி பிடுங்குதல்
பொட்டி தட்டுதல்
பின்னூட்டாங்கள்
அனானி
எலிக்குட்டி சோதனை
உள்குத்து
முதுகு சொறிதல்
சுய சொறிதல்
சுட்டி
உரல்
ஓடை
டிஸ்கி

*இணைய உலகில் பயன்படும் நகைப்புக்குறிகள்*

அரட்டை (Chat) அடிக்கும்போது பயன்படுத்தப்படும் நகைப்புக்குறிகள் (Smileys)
வலைப்பதிவுலகிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்திக்கொண்டிருக்கின்றன. நீங்கள்
வலைப்பதிவுலகில் அடிக்கடி :) :)) :P :> :( :(( X-( :D போன்ற குறியீடுகளைச்
சாதாரணமாகப் பார்க்க நேரிடலாம். இது தமிழ் எழுத்துலகம் பெற்றிருக்கும் இன்னொரு
விஷயம்! இனி வரும் காலத்தில் எந்த எழுத்திலும் இந்த நகைப்புக்குறிகள்
இடம்பெறும் அளவிற்கு அசுர வளர்ச்சி அரும் அடைந்துவரும் இவற்றின் பயன்பாடுகளை
அறிய இணையத்தில் மேயவும்.

நன்றி: தமிழினி மாத இதழ், ஜனவரி 2008.

--
Thanks and regards,
Haranprasanna
vhprasanna@gmail.com

Visit:http://www.anyindian.com/ - To Purchase books online.
Visit: http://www.nizhalkal.blogspot.com/ - To read my postings.

ஆசிரியர் இல்லாத வகுப்பில் கும்மாளமடிக்கும் குழந்தைகள் போலவே நாம்
இணையத்தை பயன்படுத்துகிறோம். கண்டிப்பாக இன்னும் ஐந்து வருடங்கள்
வலைப்பதிவுகள் பெரிய கவனத்தையும், பிரபலமாகவும் ஆகும். அப்போது பழைய
வலைப்பதிவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களின் பங்கு என்பது என்னவென்றே
அவர்களே விளங்கிக் கொள்ளமுடியாத தோற்றத்தையும் தலைக்குனிவையும்
தரும். நமக்கு ஒரு எழுத்தாளரை பிடித்து விட்டதென்றால் அவரின் பழைய
படைப்புக்களை எங்கெல்லாமோ தேடுவோம். இதுவரை வலைப்பதிவுகளின்
அந்த தாக்கம் எனக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில்தான் அமைந்திருக்கிறது.
யாரும் பழையதை கிண்ட போவதில்லை, இன்று நான்கு பேர் கைகட்டி நகைக்க
சமைக்கப்படும் உப்புமாக்கள் அதிகம். மேலும் இணையத்தில் எழுதுபவர்கள்
பெரும்பாலானோர் பரவலான வாசிப்பனுபம் அற்றவர்களாக இருப்பதுவும் காரணம்.
அப்படி இருப்பவர்கள் வீண் கும்மிகளில் கவனத்தை திருப்ப மாட்டார்கள்.
கிடைத்த சொற்ப நேரத்தில் பதிவிடுபர்களும், கிடைக்கும் சொற்ப இடைவெளியில்
பணியை செய்பவரும் நிறைந்த உலகம் இந்த வலைப்பதிவுலகம். தொழில்முறை
எழுத்தாளர்களுக்குரிய பொறுப்புணர்ச்சி அற்ற சமுகத்தில் வேறென்ன
எதிர்பார்க்கிறீர்கள்?
என்பது போன்ற கேள்விகள்தான் மனதில் எழுகின்றன.

உங்களுக்கு தோன்றிய பெரும்பாலான கருத்துக்கள் அனைவர் மனதிலும் இருக்ககூடியதே
ஆனாலும் செயல்பட அல்லது தற்"போதைய" இருப்பை விட்டு வெளிவர
விருப்பம் இல்லாதவர்களாகவே இருக்கிறோம், எதிர்காலத்தைப் பற்றி எங்களுக்கென்ன
கவலை? எங்கள் பதிவுகளை நாங்களே மீள்வாசிப்பு செய்வதில்லை!

நல்ல அலசல் ப்ரசன்னா! உங்கள் எதிர்கால இணையம் மற்றும் தமிழ் இணைய
வரலாற்றில் வலைப்பதிவுகளின் பகுதி பற்றிய சிந்தனை ஒவ்வொருவரும் உணர்ந்து
கொள்ள வேண்டியது அவசியம்.

-கதிர்-

flashkathir@gmail.com
Maraththadi@yahoogroups.com

Saturday, January 19, 2008

எல்லாப் புகழும் இறைவனுக்கே !

எல்லாப் புகழும் இறைவனுக்கே !


இந்தி நட்சத்திரம் அமீர் கானின் இயக்கத்தில் வெளிவந்துள்ள "தாரே ஸ்மீன் பர்" இந்தியாவையே கலக்கிக்
கொண்டிருக்கிறது. அத்வானியே பார்த்து, உணர்ச்சி வச்ப்பட்டு கண் கலங்கினார் என்றால் மற்றவற்றை நாம்
ஊகித்துக் கொள்ளலாம். ஒரு பிஞ்சு உள்ளத்தின் எண்ணத்தை துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது
இந்தப் ப்டம்.

இந்தப் படத்தை இரண்டு முறை பார்த்துள்ள என் பேரன் (உண்மையில் என் 'பெயரனும்' கூட) அந்த இளம்
கதாநாயகனின் அணுகுமுறையை தனதாகவே ஆக்கிக் கொண்டு, நெஞ்சில் அறைகிறார் போல் முன் வைத்த
கேள்வி, "பெற்றோருக்கு பந்தயத்தில் ஆசை என்றால் குதிரைகளை வளர்க்க வேண்டியது தானே அல்லாமல்
ஏன் ' மார்க்' ' மார்க்' என்று குழந்தைகளின் உயிரை எடுக்கிறார்கள்?

இப்போது அல்லாமா இக்பால் எழுதிய ஒரு கவிதையின் ஆங்கிலப் படிவத்தை எனக்கு அனுப்பி இருக்கிறான். குழந்தைகள் எவ்வாறெல்லாம் சிந்திக்கிறார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம். இதோ
அதன் தமிழ் மொழிபெயர்ப்பு -- என்னால் முடிந்த வரை.

என் உள்ளத்தின் ஆழத்தில் ஊறிக்கிடக்கும் சிந்தனைகள் தான் என் உதட்டின் மேற்பரப்புக்கு வருகின்றன.
இறைவா ! என் வாழ்க்கையே ஓர் ஒளி விளக்காய் ஒளிர வேண்டும்; இருளே சூழ்ந்து வீடக் கூடாது.

உலகின் ஒட்டு மொத்த இருளும் என் முன்பிலிருந்து மறைந்து போகட்டும்
என்னுடைய ஒளிமயமான பிரசன்னத்தில் எல்லாமே 'தக்-தக' வென்று மின்னட்டும்.

தனித்து நிற்கும் ஒவ்வொரு மலரும் கூட ஒட்டு மொத்த பூங்காவுக்கும் அழகு சேர்க்கிறது
அதுபோல ஞானத்தின் இருப்பிடமாய் என் வாழ்வு மலர்ந்து மனித சமூகத்துக்கு பெருமை சேர்க்கட்டும்

வெளிச்சத்தை நாடி ஓடித் திரியும் நல்ல உள்ளங்கள் என்னைச்சுற்றி வலம் வரட்டும்.
அத்தகைய ஒளி மிக்கதாய் என் வாழ்க்கை மலரட்டும் - வளரட்டும்

இறைவா ! அறிவை வளர்த்துக் கொள்ளும் ஆசையை என்னில் தொடர்ந்து கொழுந்து விட்டு எரிய விடு.
நீ தந்த சக்தியின் பயனாய் ஞானத்தை - அறிவை தொடர்ந்து தேடும் வல்ல்மையை எனக்குக் கொடு.

வாழ்வு தேடி, ஆனால் வறுமையில் சிக்கித் தவிக்கும் அத்தனை பேருக்காகவும் என் வாழ்க்கையை
அர்ப்பணிக்கும் மனத் திண்மையைக் கொடு. ஏழை - எளியோர் - இயலாதோர் - பசி முதலான அத்தனை
பிணிகளிலும் அல்லல் படுவோருக்கு கடைசிவரை நான் துணை நிற்க நீ எனக்கு கிருபை செய்.

இறைவா ! நீ ஆயிரமாயிரம் சந்தர்ப்பங்களை எங்களுக்குத் தந்துள்ளாய் அவற்றை நாங்கள் தவறாகப்
பயன்படுத்தி விடாமல் எங்களைக் காப்பாற்று. நல்ல வழிகளிலேயே செல்ல கருணை செய்.எல்லோருக்கும்
நன்மையே செய்ய அருளாசி தா.

அல்லாமா இக்பால் மகத்தான கவிஞர். அதில் தர்க்கமில்ல. ஆனால் அந்தக் கவிதையை இந்தப் பிஞ்சு
உள்ளம் தேர்ந்து எடுத்து இருக்கிறது பாருங்கள் அதுதான் என்னை மிகவும் நெகிழ வைக்கிறது.

என் பேரன் அப்துல் ஜப்பார் (செல்லமாக "அபி") என் மூத்த மகன் ஆசிஃப் மீரானின் மூத்த மகன். எல்லாப்
புகழும் இறைவனுக்கே !

அன்புடன் - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

Real life in GULF

Real life in GULF

* Local calls are free
* Petrol is cheaper than water, Payment for drainage too
* Any building construction finishes in 3 months
* Unqualified get more salary than Qualified
* Show-off matters more than real quality & performance
* Laborers are paid less than what they can earn back in their own country
* Companies can kick out their employees without any reason
* Wastas (recommendation) are more powerful than money
* Cleaners have more Wasta than officers
* Watchman has more Rights than the Building Owner
* Office boy & Drivers have more influence on Boss than Manager.......
* Gulf climate changes so fast, in one hour u can see raining, dust storm, hot / humid / chilling weather
* Gulf is located in desert, still u find greenery everywhere
* If u can't earn money in the Gulf, u can earn anywhere in the world
* In Gulf, time goes very fast, Friday to Friday comes u never know, its so fast
* Every bachelor has a dream of getting married and buying a house in India
* U love your parents, friends, relatives 100 times more than when you were together
* Being at home is more painful than being at work
* Theatres are full of Arab nationals whenever there is a movie of Salman / Sharukh
* Gulf girls sing Hindi songs but don't understand anything
* Dance Bars and Pubs more than that in Bangalore
* A ladies hair saloon every 5 meters
* Food/Grocery delivery to the car
* A Starbucks every 10 meters
* Hard Rock Cafe with no alcohol
* In one single flat sharing with 5 families
* In one single room sharing with 5 bachelors.
* A Shopping Mall located every 2 km
* Highway lanes differentiated for slow & fast drivers
* Getting a license is more difficult than buying a car
* Smashed cars are more than bugs
* Parking charge: 2 Dirham for 1 hour - 5 Dirham for 2 hours & so on
* No Queues for women
* Medical is very poor
* Everybody is looking for their annual vacation.
* U can find healthy food in everywhere.
TRAFFIC SIGNAL IN GULF:
* GREEN: Signal to go for Indians,Americans & Europeans
* YELLOW: Signal to go for Egyptians and Pakistanis,
* RED : Signal to go for Kuwaitis, Saudis , Palestinians & Lebanese
Last but not least.
There is no PEACEFUL LIFE


Don't be afraid that your life will end, be afraid that it will never begin

Thanks & Brgds
Adam.Arifin
Ras Al Khaimah
UAE
THOPPUTHURAI@gmail.com

அது ஒரு பொற்காலம்

அது ஒரு பொற்காலம்
(அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா )

கடந்த காலத்தை,அதிலும் குறிப்பாகப் பள்ளிக் கூட வாழ்க்கையை மலரும் நினைவுகளாக மனதில் அசை போட்டுப் பார்ப்பதில் கிடைக்கும் இன்பம் அலாதியானது. சொந்த ஊரில் உள்ள பள்ளிக் கூடங்களில் படித்த மாணவர்களுக்குக் கிடைக்கும் இன்பத்தை விட வெளியூரில் விடுதியில் தங்கிப் படித்த மாணவர்களுக்குக் கிடைக்கும் இன்பமே தனி. அந்த இன்பத்தை அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத் தான் தெரியும். ஒருவருக்கொருவர் மனம் விட்டுப்பழகிய பழக்கம், குடும்ப விஷயங்கள் வரை பகிர்ந்துக் கொண்டு தேடிய ஆறதல், இறுதியாகப் பள்ளிப் படிப்பை நிறைவு செய்து பிரிந்து சென்ற சோகம், ஆகிய இவற்றில் எதைத்தான் மறக்க முடியும்?

1970 ஆம் ஆண்டு ஆக்கூர் ஓரியண்டலில் அடியெடுத்து வைத்து ஆறு ஆண்டுக்காலம் அற்புதமான கல்வியைக் கற்று 1976 ஆம் ஆண்டு நூறு சதவிகிதத் தேர்ச்சியைப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த நாங்கள் இன்றளவும் எங்களால் மறக்க முடியாத அந்த நற்காலத்தை மனதால் அசைபோடுகிறோம். ஆம் அது ஒரு பொற்காலம்.
தாய் நாட்டிலும் வெளிநாடுகளிலும் பரவி வாழ்ந்துக் கொண்டிருக்கும் முன்னாள் மாணவர்களாகிய எங்கள் இதயத்தில் நீங்கா இடம் பிடித்த 'ஆக்கூர் ஓரயண்டல் அரபி மேல் நிலைப் பள்ளி' இன்று பொன் விழா காண்பதை அறிந்து எங்கள் உள்ளமெல்லாம் குளிருகிறது.

பள்ளி வாழ்க்கையை முடித்து நாங்கள் வெளியேறினாலும் எங்களில் சிலர் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் வந்து எங்களை உருவாக்கிய எங்கள் பள்ளியை பார்வையிட்டிருக்கிறோம். இடையில் சில காலம் பள்ளியின் வளர்ச்சியில் சற்று தளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும் தற்போதைய தாளாளர் கண்ணியத்திற்குரிய அல்ஹாஜ் A.முஹம்மது இக்பால் அவர்கள் நிர்வாகப் பொறுப்பை ஏற்றது முதல், முன்னேற்றப் பாதையில் எங்கள் பள்ளி பீடு நடை போடத் தொடங்கியிருப்பதை காணும் போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
உள்ளம் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள உணவுக் கூடம், மனதைக் கொள்ளைக் கொண்ட புதிய மாணவர் விடுதி,அதி நவீன வசதிகளுடன் கூடிய அழகான வகுப்பறைகள்,எழில் மிகுந்த இறையில்லம்,ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் எண்ணிக்கை, சுவையான உணவு, சுத்தமான சுற்றுப் புறச்சூழல், ஆகா! மெய்மறந்து நின்றோம். மாணவனாக ஆறாம் வகுப்பில் சேர்ந்து மறுபடியும் படிக்கத் தொடங்குவோமா! என்று உள்ளம் ஏங்கியது. சாத்தியமில்லாத கற்பனைகள் கூட சில சமயம் மனதுக்கு மகிழ்ச்சியைத் தருவதுண்டு.

இது வரை இப் பள்ளி அடைந்திருக்கும் அசுர வளர்ச்சியைக் காணும் போது, இன்ஷா அல்லாஹ் இனியும் அடையப் போகும் அபரிமிதமான வளர்ச்;சி இதோ நம் கண் முன்னே தெரிகிறது.இப்போது நடைபெறும் பொன் விழா நிகழ்ச்சிகள் அதற்குக் கட்டியம் கூறுகின்றன. பொன் விழா காணும் இந்தப் பொன்னான 'ஓரியண்டல் அரபி மேல் நிலைப்பள்ளி' என்னும் மாபெரும் கல்விக் கடலில் நாங்களும் ஒரு காலத்தில் மூழ்கி முத்தெடுத்தவர்கள் என்பதை நினைக்கும்போது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது.

இந்த ஆக்கூர் ஓரியண்டல் எங்களுக்கு அறிவைத் தந்தது, ஆற்றலைத் தந்தது, அனுபவங்களைத் தந்தது, அநேக நண்பர்களைத் தந்தது, மனப்பக்குவத்தைத் தந்தது, மார்க்க ஞானத்தைத் தந்தது, காலமெல்லாம் நேர் வழி நடக்க எங்கள் கரம் பிடித்து நடை பழக்கியது.
இம்மை மறுமை ஈருலகக் கல்வியையும் ஒர சேரப் பயில எங்களுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு, தொழுகை நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளில் இன்றளவும் நாங்கள் நின்றொழுக எங்களுக்குக் கிடைத்த அருமையானப் பயிற்சி, நல்லொழுக்கத்துடன் நாங்கள் வாழ எங்களுக்கு விதிக்கப்பட்ட நியாயமான கட்டுப்பாடுகள், ஆகிய இவை தான் இன்று நாங்கள் தூயவர்களாக வாழ்வதற்குத் துணை நின்றவை என்றால் அதற்கு மூல முதற்காரணமாக அமைந்த எங்கள் ஆக்கூர் ஓரியண்டலை நாங்கள் எப்படி மறக்கமுடியும்?
பள்ளி இறுதி வகுப்பை இனிதே நிறைவு செய்து உயர் கல்வி கற்பதற்காக நாங்கள் உயர் கல்வி நிறுவனங்களுக்குச் சென்ற போது தான் நாங்கள் கல்வி பயின்ற ஆக்கூர் ஓரியண்டலின் மகிமையைப் புரிந்துக் கொண்டோம். பிற கல்வி நிறுவனங்களிலிருந்து வந்து சேர்ந்த மாணவர்களை விட நாங்கள் உயர்வாக மதிக்கப்பட்டோம். அந்த அளவுக்கு எங்கள் கல்வியின் தரமும் ஒழுக்கத்தின் தரமும் உயர்வானதாக இருந்தது. எங்களுக்குப் பெருமையாகவும் இருந்தது. இந்தப் பெருமையும் புகழும், உயர்;ந்த கல்வியையும் உன்னத நல்லொழுக்கத்தையும் எங்களுக்குப் போதித்து, எங்களை நல்வழிப்படுத்திய எங்கள் ஆசிரியப் பெருந்தகைகளையும், எங்களின் உயர்வுக்குக் காரணமாகிய ஆக்கூர் ஓரியண்டல் என்னும் இந்த அற்புத நிறுவனத்தையுமே சாரும்.

எங்களுக்கு நற்கல்வியையும் நல்லொழுக்கத்தையும் போதித்த நல்லாசிரியர்களில் யாரை நாங்கள் மறக்க முடியும்? அவர்களில் சிலர் மறைந்து விட்டனர். பலர் ஓய்வு பெற்று விட்டனர். ஆனால் எங்கள் நெஞ்சங்களில் என்றென்றும் நிறைந்து வாழ்கின்றனர். அறிஞர் பெருமக்களையும் ஆன்றோர்களiயும் சான்றோர்களையும் உருவாக்கிய ஆசிரியர்களாகிய அந்த அறிவு ஜீவிகள் ஒவ்வொருவரைப்பற்றியும் ஓராயிரம் வரிகள் எழுதலாம். எவ்வளவு எழுதினாலும் அந்த நல்லாசிரியர்கள் எங்களுக்குப் போதித்த நற்கல்விக்கும்

நல்லொழுக்கத்திற்கும் அவை போதுமான நன்றிக் கடன் ஆகாது. இன்றளவும் சக நண்பர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது அந்த அறிஞர் பெருமக்களை நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.

பல்வேறு கால கட்டங்களிலும் எண்ணற்ற சிரமங்களுக்கு மத்தியில் விடுதி நிர்வாகத்தை திறம்பட நடத்திச் சென்ற, இறையடி சேர்ந்து விட்ட முன்னாள் தாளாளர்களின் மறுமைப் பேற்றுக்காக மனமாற இறைவனை இறைஞ்சுகிறோம். தன்னலம் கருதாது பாடுபட்ட அந்த தயாள உள்ளங்களை என்றென்றும் நினைவில் வைத்திருப்போம்.

தத்தம் இல்லங்களில் நடைபெற்ற விருந்து வைபவங்களின் போது எங்களையும் தங்கள் குடும்பத்தினர்களாக எண்ணி அத்துனை பேருக்கும் அறுசுவை விருந்தளித்து கௌரவப்படுத்திய ஆக்கூர் வாழ் மக்களை எப்படி மறக்க முடியும்? எங்களை கௌரவித்த அந்தக் கொடை வள்ளல்களை, இம்மையிலும் மறுமையிலும் இறைவன் கௌரவிப்பானாக!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து ஆக்கூரில் சங்கமித்தோம். காலமெல்லாம் பயன் தரும் கல்வியை திறம்படக் கற்பதில் கவனம் செலுத்தினோம். கள்ளம் கபடமில்லாமல் பழகினோம். ஒன்றாக உண்டோம், உறங்கினோம்,ஓடி விளையாடினோம். ஒருவருக்கொருவர் உதவியாய் ஒத்தாசையாய் இருந்து கவலை மறந்து காலம் கழித்தோம். பள்ளி வாழ்க்கை நிறைவடைந்த போது ஆரத்தழுவி கண்ணீர் மல்க பிரியா விடை பெற்றோம். இனி எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ?

ஆக்கூர் ஓரியண்டலில் நாங்கள் வாழ்ந்த அற்புத வாழ்க்கை 30 ஆண்டுகளுக்கு முன் நிறைவடைந்து விட்டது.ஆனால் அந்தப் பசுமையான நினைவுகள் மட்டும் பசுமரத்தாணிபோல் இன்றும் எங்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்று விட்டது. ஆம் அது ஒரு பொற்காலம்.
நாங்கள் இருந்து பயின்ற வகுப்பறைகள் அதி நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடிக் கட்டடங்களாகிவிட்டன. நாங்கள் கட்டாந்தரையில் அமர்ந்து உண்ட, ஓலை வேயப்பட்ட உணவுக் கூடம் இப்போது கண்ணைக் கவரும் உணவுக் கூடமாக மிளிர்கிறது. நெரிசலுடன் நாங்கள் தங்கியிருந்த மாணவர் விடுதி இன்று விசாலமான விடுதியாகப் பரிணமித்துள்ளது. வகுப்பறையை தொழுகைக் கூடமாக்கி நாங்கள் தொழுகை நடத்தியது அந்தக் காலம். இப்போது எழில்மிகுந்த இறையில்லம் கம்பீரமாகக் காட்சி தருகிறது. உயர் நிலைப் பள்ளியாக இருந்தது இப்போது மேல் நிலைப் பள்ளியாக உயர்வு பெற்றுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு எங்கள் பள்ளி அடைந்து வரும் முன்னேற்றத்தைக் கண்டு நாங்கள் பூரிப்படைகிறோம். வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.

இந்தக் கல்விக் கூடத்திலிருந்து உருவான எண்ணற்ற தாரகைகள் சமுதாய வானில் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. இன்னும் ஆயிரமாயிரம் அறிவு ஜீவிகளை உருவாக்க இந்த 'ஆக்கூர் ஓரியண்டல் அரபி மேல் நிலைப் பள்ளி' தன் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்கிறது.

masdookaa@yahoo.com

Friday, January 18, 2008

indian union muslim league Political Members Details

indian union muslim league Political Members Details

MP - 2 (E.Ahamed and K.M. Kader Mohideen)
Rajya Sabha MP - Abdul Wahab ( Kerala )
MLA - 2 (Abdul Basid and Kalilur Rahman)

Ma Nagaratchi (City Corporation) Members

Nellai - 3
Kovai - 2
Salem - 2
Chennai - 1
Madurai - 1

Corporation (Nagaratchi)

Kayal pattinam -12
Tenkasi -6
Kadayanallur -6
Puliangkudi- 6
Vellur- 2
Ambur -7
Vaniyambadi -6
Thiruppur -2
and also
Manparai, tuticorin, ramanathapuram, mudukulathur, kilakarai, pudukottai, aranthangi, seerkalai, villupuram, chinnasalem, ulundurpet, thiyagathuruvom, thiruvannamalai, saiyaru, melvizaram, nagapattinam, coodalur, kunnoor, muthupet are 1 members

Panchayath board

coodalur - above 43

Peruratchi
pallapatti, laalpet, pallikondan, athiyuthu, annavasal, -1
oneriyam

Enamkulathur, Papanasam, -1


Message from

muba rasvi
Marumalarchi

துபாயில் மேலும் ஒரு இஸ்லாமிய வங்கி

துபாயில் மேலும் ஒரு இஸ்லாமிய வங்கி

துபாயில் ஷரிஅத் அடிப்படையில் செயல்படும் ஆறாவது இஸ்லாமிய வங்கியான நூர் இஸ்லாமிய வங்கி" ஞாயிற்றுக்கிழமை துவங்கப்பட்டுள்ளது.

நூர் இஸ்லாமிய வங்கி ஒரு பில்லியன் டாலர் மூலதனத்துடன் துபாயில் ஆறு கிளைகள் உட்பட அமீரகத்தில் பத்து கிளைகளைக் கொண்டதாக துவங்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டுக்குள் இந்த கிளைகள் இருபதாக விரிவடையும்.
நூர் இஸ்லாமிய வங்கி பல்வேறு முஸ்லிம் நாடுகளிலும் தனது சேவையை துவங்க ஆவல் கொண்டுள்ளது.

துபாய் இஸ்லாமிய வங்கி, அபுதாபி இஸ்லாமிய வங்கி, எமிரேட்ஸ் இஸ்லாமிய வங்கி,ஷார்ஜா இஸ்லாமிய வங்கி, துபாய் வங்கி ஆகியவை ஏற்கனவே அமீரகத்தில் ஷரிஅத் அடிப்படையில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய வங்கிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமையல் குறிப்புகளை அறிய உதவும் இணையத்தளம்

சமையல் குறிப்புகளை அறிய உதவும் இணையத்தளம்

இன்றைய அறிவியல் யுகத்தில் இணையத்தளம் ஒரு தவிர்க்க இயலாததாகி விட்டது. பல்வேறு தரப்பினருக்கும் ஏற்றவகையில் பல்வேறு தகவல்கள் இணையத்தில் உலாவருகிறது.
சமையல் குறிப்புகளைக் கொண்டு www.tamilkudumbam.com எனும் இணையத்தளம் பெண்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருந்து வருகிறது.

நீங்களும் இவ்விணையத்தளத்தில் உங்களது சமையல் குறிப்புகளை பதிவு செய்யலாம்.

சிறுபான்மை மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு

சிறுபான்மை மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு
கல்வி உதவி தொகை

+1 முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப் பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ/மாணவியருக்கு 2007 - 2008 முதல் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தினை மத்திய அரசின் சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 2876 மாணவர்களுக்கு, இவ்வுதவிகள் கிடைக்கும். அதில் 1372 முஸ்லிம் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக மேலும் விவரங்களுக்கு, விண்ணப்பங்களுக்கும் தொடர்பு கொள்க:

http://www.minorityaffairs.gov.in/

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ( K-Tic ) ஏற்பாடு செய்யும்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ( K-Tic ) ஏற்பாடு செய்யும்
'' நபிமொழி (ஹதீஸ்) வகுப்புகளின் 75 வது வார சிறப்பு நிகழ்ச்சி ''

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 18-01-2008 வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகை யைத் தொடர்ந்து குவைத் , ஹவல்லி (ஸாதிக் ரவுண்டானா மற்றும் ஷுவூன் அலுவலகம் அருகில் அமைந்துள்ள) மஸ்ஜித் அஷ்-ஷைக்கா அஷ்-ஷபீக்கா பள்ளிவாசல் வளாகத்தில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ( K-Tic) ஹவல்லி கிளை ஏற்பாடு செய்யும் '' நபிமொழி (ஹதீஸ்) வகுப்புகளின் 75 வது வார சிறப்பு நிகழ்ச்சி '' நடைபெற இருக்கின்றது. (இப்பள்ளிவாசலில் கடந்த 75 வாரங்களாக ஒவ்வொரு வாரமும் ஜும்ஆ தொழுகை முடிந்தவுடன் கண்ணியமிக்க உலமா பெருமக்கள் மூலமாக தமிழில் நபிமொழி (ஹதீஸ்) வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது).

சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லானா மவ்லவீ அஷ்ஷைக் M.S. முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் உலமாக்கள் குழு உறுப்பினர் பேராசிரியர் மவ்லவீ அஷ்ஷைக் A. அப்துஸ் ஸலாம் தாவூதி ஹழ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றுகின்றார்.

இச்சிறப்பு மிகு நிகழ்வில் குவைத் வாழ் இந்திய , இலங்கையைச் சார்ந்த தமிழ் இஸ்லாமியர்கள் அனைவரும் தங்கள் நண்பர்கள் மற்றும் சகோதரர்களுடன் பங்கேற்று பயனடையுமாறு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் ஹவல்லி கிளை நிர்வாகிகள் , உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.k-tic.com லும் நிகழ்ச்சி குறித்த செய்தியையும், (பேரூந்து என்களுடன்) நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் வரைபடத்தையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் , மேலதிக விபரங்களுக்கு q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ மற்றும் 9430786 , 7872482, 7738420, 7302747, 7684739, 7841399 , 5088149, 9383812 , 7243382, 7585914 போன்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளும்படியும் சங்க செய்தி அறிக்கை தெரிவிக்கின்றது.

செய்தி :
தகவல் தொடர்பு பிரிவு,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ( K-Tic )
இணையதளம் : www.k-tic.com
மின்னஞ்சல் : q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
யாஹூ குழுமம் : http://groups.yahoo.com/group/K-Tic-group


குறிப்பு :

இந்தச் செய்தியை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியை காண வாய்ப்பு

2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியை காண வாய்ப்பு

29 வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற உள்ளது.
இப்போட்டியை நேரில் காணும் வாய்ப்பை சீன வானொலி நிலையம் ஏற்படுத்தியுள்ளது. இவ்வானொலி நிலையம் நடத்தும் போட்டியில் கலந்து கொள்வதன் மூலம் போட்டியை நேரடியாகக் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் பல்வேறு சிறப்புப் பரிசுகளையும் பெறும் வாய்ப்புள்ளது.

சீன வானொலியில் தமிழ் ஒலிபரப்பு தினமும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை ஒலிபரப்பாகிவருகிறது.
மேலும் விபரங்களுக்கு

http://tamil.cri.cn/other/contest2008/

கான் பாகவி இல்ல மணவிழா

ரஹ்மத் அறக்கட்டளையின் தலைமை மொழீபெயர்ப்பாளர் ஹஸ்ரத் முகம்மது கான் பாகாவியின் மகனின் திரு
மண வைபவம் தேனீயில் நடைபெற்றது. தமிழக முஸ்லிம் சமூக-கலாச்சார-இலக்கியப் பிரமுகர்கள் பலர்
வருகை தந்திருந்தனர். விழா அராங்கம் மவுலவிகள் மாநாடு போலவே கட்சியளித்தது சிறப்பு

அன்று மாலை உத்தமபாளையம் ஹாஜி கறுத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி வளாகத்தில், கல்லூரியின்
தாளாளரும் செயலருமான ஹாஜீ தர்வேஷ் மொஹிதீன், தலைவர் ஹாஜி ஷேக் மொஹிதீன் தலைமையில்
தேனீ மாவட்டத்தைச் சேர்ந்த 65 ஜமா'அத்துகளின் கூட்டமைப்புக் கூட்டம் நடைபெற்றது.

கவிக்கோ அப்துர்ரஹுமான், எஸ்.எம்.,ஹிதாயத்துல்லாஹ் மற்றும் நான்,சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து
கொண்டோம். பேராசிரியர் அப்துல் சமது வரவேற்றார். அமைப்பின் செயலர் ஜனாப் பொன்ராஜ் கொந்தாளம்
செயல் திட்டங்களை விரித்துரைத்தார்.

கவிகோவும், ஹிதாயத்துல்லாவும் மத்திய - மாநில அரசுகள் எத்தகைய நலத் திட்டங்களை அறிவித்துள்ளன.
அறியாமை காரணமாக நாம் எதையெல்லாம் தவற விட்டு விட்டோம். இனி எவ்வாறு விழிப்புடனிருந்து
இவற்றின் பயன் பாட்டை முழு அளவில் எப்படிப் பெற்றுக் கொள்வது என்பன பற்றியெல்லாம் எடுத்துச்
சொன்னார்கள் - தன்களது நீண்ட, உணர்ச்சி மிகு உரைகளில் !.

உடனடியாக, அரசின் இட ஒதுக்கீடு காரணமாக, வரும் கல்வியாண்டில் ச்மார் 70 மருத்துவப் படிப்பு இடங்களும் சுமார் 700 பொறியியல் படிப்பு இடங்களும் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
ஆனால் இந்தச் சலுகைகளைப் பெற்றுக் கொள்ள முஸ்லிம் சமூகம் எந்த அளவுக்குத் தயார் என்பது
கேள்விக்குறியாகவே உள்ளது.

இருட்டை சபிப்பதை விட ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது உத்தமம் என்ற கூற்றுக்கு ஏற்ப,
தமிழகமெங்கும் இதுவரை ஏழு மாவட்டங்களில் PLUS-2 மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்
பட்டுள்ளன. தேனீ மாவட்டத்தில் மட்டும், கம்பம், போடி, தேனி, உத்தமபாளையம்,சின்னமனூர் ஆகிய
ஊர்களில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இவை பள்ளி வளாகங்களில் வைத்து நடத்தப்
படுகின்றன. ஆகவே நம் மக்கள் மாத்திரமே வருகிறார்கள். எல்லோருமே தொழும் வழக்கத்தையும்,
பெண்கள் புர்கா அணிவதையும் கடைப்பிடிக்கிறாகள். அல்ஹம்துலில்லாஹ். நல்ல் ஏற்பாடு.

PLUS-2 பரீட்சைக்கு ஏறக்குறைய இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. இந்த்க் கால. அளவு போதுமா
என்பது சந்தேகமே. என்றாலும் ஒன்றை ஆரம்பித்து வைத்து விட்டால் இந்த ஆண்டில் இல்லாவிட்டாலும்
இனி வரும் காலங்கள் இவை சிறப்பாக்ச் செயல் பட ஏதுவுண்டு.

மத்திய - மாநில அரசுகளிடமிருந்து முஸ்லிம்கள் எத்தகைய சலூகைகளைப் பெறமுடியும் என்பதை பிறகு
எழுதுகிறேன். இப்போது உதாரணத்துக்கு ஒன்று:

Auto-rikshaw/ Taxi/ Van/ Mini-bus ஆகியவை வாங்க சில நிபந்தனைக்கு உட்பட்டு தகுதி அடிப்படையில் மத்திய
அரசு 85% ம் மாநில அரசு 10% ம் மான்யம் வழங்குகின்றன. நம் முதலீடு 5% தான். இந்த 5% ஐயும் கடனாகாத்
தர வங்கிகள் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சலுகைகளை முஸ்லிம்கள் படுத்தாததால் சென்ற ஆண்டு சுமார் 110 கோடி ரூபாய் மத்திய அரசுக்கே திரும்பஅனுப்பப் பட்டு விட்டதாக ஹிதாயத்துல்லாஹ் கூட்டத்திலேயே ஒரு தகவலைச் சொன்னார்.

ஒருவனுக்கு மீனைத் தின்னக் கொடுப்பதைவிட மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்தால் அவன் வாழ்நாள் முழுக்கப்
பிழைத்துக் கொள்வான் என்று ஒரு சொலவடை உண்டு. ஆகவே, வெளிநாடுகளில் வாழும் அன்பர்களுக்கு ஓர்
வேண்டுகோள்;

உங்கள் ஊர்களில் உள்ள ஏழைகளுக்கு இயன்றபோதெல்லாம் நீங்கள் உதவி வந்திருக்கக் கூடும். ஆனால்
அதை விட அவர்களுக்கு ஒரு வாழ்வு ஆதாரத்தைக் கை காட்டி விட்டீர்களென்றால் கியாமத் நாள் வரை
அது பயனுள்ளதாக - பலன் தருவதாக இருக்கும்.

விதவைகள் மற்றும் முதியோர் ஓய்வு ஊதியம் மாதம் 400/- ஓய்வு பெற்ற உலமாக்களுக்கு மதம் 750/-
பிரசவ உதவி 6,000/- திருமண உதவி 15,000/- இப்படி எத்தனையோ. இதில் சோகம் என்னவென்றால்
சம்பந்தப் பட்டவர்களுக்கே இப்படி சில இருப்பது தெரியாது

எனவே, உங்கள் ஊர்களில் சில அமைப்புகளை ஏற்படுத்துங்கள். அருகதைப் பட்டவர்களைத் தேடிப் பிடியுங்கள்
அவர்களுக்கு இந்த உதவிகள் கிடைப்பதற்கான ஆவன செய்யுங்கள். ஆண்டவன் உங்கள் தலைமுறை -
தலைமுறைக்கும் நல் அருள் பாலிப்பான்.

வஸ்ஸலாம். ஹுதா ஹாஃபிஸ். சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.
abjabin@gmail.com

கணினியில் தமிழில் எழுத ...........

http://software.nhm.in/writer.html இறக்கி நிறுவினீங்கன்னா தானா உங்கள் கணினியில் தமிழ் unicode முடுக்கப்படும்.

அப்புறம் நேரடியா எங்க வேணா எழுதலாம்

Latest version (v1.2 beta) of w3Tamil Web Keyboard has released on 15th January, 2008 with its new features after one year period of gap. Now it supports for the Tamil99 Keyboard standard.

URL: http://wk.w3tamil. com

This little web keyboard will help you to write Tamil texts in Tamil Unicode encoding when you are away from your own Tamil Unicode enabled computer - for example in an Internet cafe in a foreign country. Also for users who are not familiar with the Tamil99 keyboard layout, w3TamilWK provides Virtual/onscreen keyboard interface to directly enter the Tamil Unicode text into the text area by clicking mouse on the Web Keyboard.

Also you can use it as a typing tutor to practice the Tamil99 Keyboard Layout Typing without installing any additional software in your computer.

Regards.

S.M. Arif Maricar
http://arifmaricar.blogspot.com

Wednesday, January 16, 2008

இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

இலவசப் பொறியியல் கல்வியினை தானிஷ் அஹ்மத் பொறியியல் கல்லூரி வழங்குகிறது.
ஜுன் 2008 ஆம் ஆண்டிற்கான பொறியியல் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தானிஷ் அஹ்மத் பொறியியல் கல்லூரியும், அகில இந்திய இஸ்லாமியக் கல்வி நிறுவன குழுமமும் இணைந்து பிளஸ் டூ படிக்கும் ஏழை மாணவர்களின் உயர் கல்வி படிப்பினை கருத்தில் கொண்டு 10 மாணவர்களுக்கு இலவச சேர்க்கை வழங்குகிறது எனபதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மாணவர்களின் உயர்கல்விக்காக ஆண்டு தோறும் அனைத்து மாவட்டங்களிலும் நேரடித் தகுதித் தேர்வு நடத்தியும், மாணவர்களுக்கு அவர்களின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டும் இந்த இலவச சேர்க்கையை வழங்கி வருகிறோம்.

இவ்வாண்டு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் தகுதித் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் அதற்குண்டான படிவத்தினை அந்தந்த மாவட்டப் பள்ளிகளிலும் பள்ளிவாசல்களிலும் நாங்கள் நியமித்துள்ள முக்கிய நபர்களிடமும் பெற்று பூர்த்தி செய்து அவர்களிடம் நேரடியாகவும் கொடுக்கலாம். அல்லது எங்கள் கல்லூரி முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் விபரங்ளுக்கும் விதிமுறைகளுக்கும் உடன் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
தானிஷ் அஹ்மது பொறியியல் கல்லூரி
நெ 166 முடிச்சூர் ரோடு
( பதிவு அலுவலகம் எதிரில் )
மேற்கு தாம்பரம்
சென்னை 600 045
தொலைபேசி : 9382377788/044 32918452 / 9380586462

நன்றி : சமரசம் மாதமிருமுறை ஜனவரி 2008
www.samarasam.com

சிறு குழந்தைகள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள எளிய நடைமுறை - பத்துக் கட்டளைகள்

சிறு குழந்தைகள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள எளிய நடைமுறை - பத்துக் கட்டளைகள்

1) தயவுசெய்து சிறுகுழந்தைகளுக்கு ஏ,பி,சி,டி..என எழுத்துக்களை முதலில் சொல்லிக்கொடுக்காதீர்கள்.

2) அதேபோல இளம்சிறார்களை நோட்டு, பேனா,பென்சில், புத்தகம் முதலியவற்றின் பக்கமே அண்டவிடாதீர்கள்.

3) எழுத்துக்களை கற்றுத் தருவதை தடைசெய்யவேண்டும்.

4) நாம் குழந்தையாக இருக்கும்போது நமது அம்மா, அப்பா, அண்டை வீட்டாரிடம் முதலில் தமிழ் பேசத்தானே கற்றுக்கொண்டோம். எழுதப்படிக்க பிறகுதானே கற்றுக்கொண்டோம்.

5) சிறுவர்களுக்கு அம்மா என்றால் மம்மி யில் ஆரம்பித்து - அவர்களிடம் சின்னச்சின்ன வார்த்தைகளாக தமிழிலும் ஆங்கிலத்திலும் இணையாகப் பேசமட்டும் கற்றுக்கொடுக்கவும்.

6) சிறார்கள் எப்போதும் இது என்ன - இந்தப் பொருளை எப்படி ஆங்கிலத்தில் அழைப்பது - என்று நச்சரித்தார்கள் - என்றால் அது குறித்து நீங்கள் பெருமகிழ்ச்சி அடைந்தே தீரவேண்டும். அவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து உங்களுக்குத் தெரியாததை அவர்கள் விடாப்பிடியாகக் கேட்டார்கள் என்றாலும் அதற்கான ஆங்கிலப் பதத்தை அர்த்தத்தை நீங்கள் அகராதியில் - இணையத்தில் திரட்டி அவர்களுக்குப் புரியும்படி எளிமையாகச் சொல்லிக்கொடுங்கள்.

7) இளம்குழந்தைகள் அதுஎன்ன - அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்கும் அழகே தனிதான். அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வது நமது கடமை.

8) நாம் எப்படி எழுத்துக்களை அறிவதற்கு முன்னரே தமிழில் பேசக் கற்றுக்கொண்டோமோ - அதே மாதிரி நமது குழந்தைகளை ஆங்கில எழுத்துக்களை சொல்லித் தருவதற்கு முன்னால் ஆங்கிலத்தைப் பேசக் கற்றுத்தந்தே ஆகவேண்டும்.

9) அவர்கள் சில நாட்களுக்குப் பிறகு - சிறிய சிறிய வாக்கியங்களாகப் பேச ஆரம்பிப்பார்கள். அதற்குள்ளாகவே அவர்கள் பல்லாயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்தவர்களாக இருப்பார்கள். இதுவரைக்கும் கூட நாம் எழுத்துக்களை வாசிக்கக் கற்றுக்கொடுக்கக் கூடாது.

10) ஏராளமான வார்த்தைகளையும், புதுப்புது வாக்கியங்களையும் பேச ஆரம்பித்தபிறகு மட்டுமே ஆங்கிலத்தை எழுதப்படிக்க கற்றுக்கொடுக்கவேண்டும். நாமும் முதலில் தமிழில் பேசிவிட்டு அதுவும் நன்றாக அரட்டை அடிக்கும் அளவுக்குத் தமிழ் தெரிந்த பிறகுதானே எழுதப்படிக்கத் தெரிந்துகொண்டோம்.

ஆனால் இந்த சமுதாயத்தில் ஆங்கிலம் மட்டும் எழுத்திலிருந்து ஆரம்பித்து கடைசி வரையில் பேசத்தெரியாமல் எத்துணை மக்கள் மனப்புழுக்கத்துடன் வாழ்கிறார்கள்.

Mujibur Rahman (Sr. Programmer)

தகவல் அறியும் சட்டம்-பயன்படுத்துவது எப்படி?

தகவல் அறியும் சட்டம்-பயன்படுத்துவது எப்படி?

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எந்த ஒரு அரசு நிறுவனம், அரசு உதவி பெறும் நிறுவனம், தன்னாட்சி நிறுவனம் உள்ளிட்ட எந்த ஒரு பொது அலுவலகத்திலும் குடிமகன்கள் எந்தத் தகவலையும் கேட்டு அறியலாம்.

பொது மக்கள் எவ்வாறு தகவல் பெறலாம், அதற்கு உரிய வழிமுறைகள் என்ன என்பது குறித்து விளக்கும் செய்திக் கட்டுரை இது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் 11.05.2005ல் நிறைவேற்றப்பட்டது.
ஊழலை தடுத்து நிறுத்துவதற்கும், ஆளப்படுகிறவர்களுக்கு பொறுப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், நிர்வாகத்தின் ஒளிவு மறைவின்மையை வெளிப்படுத்துவதற்காகவும் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த சட்டத்தின்படி அனைத்து குடிமகன்களும் தகவல் பெறும் உரிமை உடையவராவர். எந்த குடிமகன்களும் தகவல் கேட்கலாம். காரணங்கள் கூறத் தேவையில்லை.

எந்த ஒரு பொது அலுவலகத்திலும் கேட்கலாம். அரசு நிறுவனங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

இந்த சட்டத்தின் பிரிவு 8ல் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் மட்டும் மறுக்கப்படலாம். உதாரணத்திற்கு நாட்டின் இறையாண்மை, வெளிநாட்டு உறவைப் பாதிப்பவை போன்றவை.

இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் அலுவலகம் முதல், மத்திய, மாநில அரசு அலுவலகங்ளில் ஒரு பொது தகவல் அதிகாரி உள்ளார்.

தகவல் பெற விரும்புவோர் அவருக்கு முகவரியிட்டு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மனு கொடுக்க வேண்டும். அரசு நிர்வாகத்தின் எந்த வகையான புள்ளி விவரங்களையும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது போன்ற விவரங்களை கேட்கலாம்.

இதற்காக தனியாக ஏதும் படிவம் இல்லை. ஒரு வெள்ளை தாளில் பெயர் மற்றும் விலாசம் ஆகியவற்றை தெளிவாக தெரிவித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், கீழ்கண்ட தகவல் வேண்டுகிறேன் என தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

ஒரு மனுவில் எத்தனை கேள்விள் வேண்டும் என்றாலும் கேட்கலாம். ஒவ்வொரு மனுவுடன் ரூ. 10 கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த கட்டணத்தை நீதிமன்ற கட்டண வில்லை ஒட்டியோ, வங்கி வரைவோலையை இணைத்தோ, அஞ்சல் ஆணையை இணைத்தோ, அரசு கருவூலத்தில் சலான் மூலமாகவோ செலுத்தலாம்.

எந்த காரணம் கொண்டும் தபாலிலோ அல்லது மணியாடர் மூலமாகவோ கட்டண தொகையை அனுப்பக்கூடாது.

சரியான அலுவலகத்தில் மனுவை அளிக்க வேண்டும்.

இவ்வாறு தகவல் கேட்கும் உங்களுக்கு 30 நாட்களுக்குள் தகவல் அளிக்கப்பட்டாக வேண்டும்.
தகவல் அளிக்கத் தவறும் அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ 250 வீதம் ரூ 25,000 வரை அபராதம் விதிக்க தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.

தவறான அலுவலகத்திற்கு மனு அளிக்கப்பட்டால் அவ்வலுவலக தகவல் அதிகாரியே சரியான அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும். இதற்கு 5 நாட்கள் கால தாமதம் ஆகும்.

தகவல் 30 நாட்களில் கிடைக்காவிட்டால் அதே அலுவலகத்தில் உள்ள மேல் முறையீட்டு அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அவரும் 30 நாட்களுக்குள் சரியான தகவல்கள் அளிக்காவிட்டால் தமிழக தகவல் ஆணையத்திற்கு மேல் முறையீடு செய்து தகவல் பெறலாம்.

தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முகவரி:

தலைமை ஆணையர்,
தமிழ்நாடு தகவல் ஆணையம்,
எண் 375,
முதல் தளம்,
காமதேனு கூட்டுறவு சிறப்பு அங்காடி கட்டிடம் ,
தேனாம்பேட்டை,
அண்ணாசாலை ,
சென்னை- 18.

தொலைபேசி எண் 044-24357580

மத்திய தகவல் ஆணையத்தின் முகவரி:

மத்திய தகவல் ஆணையர்.
மத்திய தகவல் ஆணையம்,
ஆகஸ்ட் கிராந்திபவன்
2 வது தளம், பி-பிரிவு.
நியு பிகாஜி காமா பேலஸ்
டெல்லி-110056

தொலைபேசி எண்கள் 011-26717353, 26761137

-வடிவேல் (knvadivel@gmail.com)

www.thatstamil.com

Monday, December 17, 2007

தியாகத் திருநாள்!

தியாகத் திருநாள்!
எண்ணற்ற
தியாகங்கள்
இவ்வையத்தில்
வரலாற்றிலும்
வாழ்விலும்!

நாட்டுக்காக
மொழிக்காக
உறவுக்காக
நட்புக்காக
காதலுக்காகவென!

உயிர்
உறவுகள்
உடமைகள்
சொத்துக்கள்
சுகங்களெனப்
பலவற்றின் தியாகம்!

ஆயினும்
ஆயிரமாயிரம்
ஆண்டுகளாய்ப்
போற்றப்பட்டு வரும்
ஒரே தியாகம்
இப்ராஹீம்(அலை)நபி
அவர்களுடையது தான்!

தள்ளாத முதுமையில்
தனக்குப் பிறந்த
ஒரே மகனை
இறைவனின் ஆணையேற்றுப்
பலிப்பீடம் ஏற்றியது!

சுய நலமே சூழ்ந்திருக்கும்
இவ்வுலகில் நாம்
தியாக உணர்வு
பெற்றிட
உணர்த்தும் நாளே
தியாகத் திருநாள்
பக்ரீத்!!

-இமாம்.கவுஸ் மொய்தீன்
drimamgm@hotmail.com

Monday, December 3, 2007

இறுதியில்.. இறை இல்லத்தில்...

இறுதியில்.. இறை இல்லத்தில்...
- இப்னு ஹம்துன்
முதல் ஆலயம் நீ!
முதல்வனின் ஆலயம் நீ!

கஃபாவே - உன்னைக்காண
கண்ணுக்குள் ஒரு ஆவல்
கனன்றுக்கொண்டேயிருக்கிறது.

அருள் நிரம்பிய உன்
அழைப்புக்கு செவியேற்போர்
அதிருஷ்ட சாலிகள்.
ஆன்ம தேகத்தில் திரண்ட
பாவ அழுக்குகளை
'ஜம் ஜம்' நீரால் கழுவி
மூமின் என்று முத்திரைப் பெறுகிறார்கள்
கழுவப்பட்ட அழுக்குகளுக்கு
கதிரொளியே பகரமாகிறது!

இறுதிக்கடமையே....!
இறக்கிவைக்க, இறக்கி வைக்க
எல்லா சுமைகளையும் நீ
ஏற்றுக்கொள்வதால் தானோ
இந்த மனிதர்கள்
உலகின் எல்லா இடங்களிலும்
பாவங்களைப் பொறுக்குகிறார்கள்?

கருவறைத் தொடங்கி
கல்லறை வரை
காலடித் தொடரும் ஷைத்தான்
உன்னிடத்தில் வரும்போது
கற்தூணாகி விடுகிறான்
ஆனாலும் தப்ப முடியாமல்
கல்லெறிந்து கொல்லப்படுகிறான்.

ஏ! மனிதா..!
இறை அளித்த வாழ்வுநெறியை
வெட்டியும் தைத்தும் உடுத்துவதால்
நீதான் கிழிந்துப்போகிறாய்.
வெட்டாமல் தைக்காமல்
அப்படியே அணிந்துக்கொள்.
இஹ்ராம் போலொரு இலக்கணம்
இதமாய் உணர்த்துகிறாய்.

அரசர்களாய் வந்தவர்கள்
அதிகாரிகளாய் வந்தவர்கள்
'தான்' கரைந்தபின்
தெரிந்துகொள்கிறார்கள்
வான் மறையோனவன் வல்லமையை.

இறைத்தோழர் இபுறாஹிம்
உணர்த்திய வழியில்
இறுதியில் ஒரு குர்பானீ!
மனோஇச்சையை அறுத்து.
'வந்து விட்டேன்..... இதோ வந்துவிட்டேன்...!'

(90'களின் தொடக்கத்தில் 'மணிச்சுடர்' நாளிதழில் பிரசுரமான கவிதை)
(நினைவில் தங்கிய வரிகள்)

--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953
www.ezuthovian.blogspot.com

Thursday, November 22, 2007

iPro Technologies

iPro Technologies., is a Research and Development
based consulting firm involved in IT and
Bioinformatics related services. Mainly in the areas
of Software Development, Data Warehousing, Data Mining
Networking, Bioinformatics application, Biomedical
applications, Microcontroller based applications and
Training.

iPro is going to arrange for a free counselling
services for +2 students (along with their parents).

Please contact for more details:
iPro Technologies
30 & 30 A, Jeeva Street, Chennai bye pass road,
TVS Tollgate, Tiruchirappalli-620020, Tamilnadu,
India.
Tel: 0431 2333220 Mob: 98425 48616, 98429 92945, 98429
92946
www.ipro.net.in / ipro@vsnl.net / iprotechnologies@yahoo.com

Tuesday, November 20, 2007

நாகூர் ரூமி எழுதிய இரண்டு நூல்களை ......

தமிழ் எழுத்தாளரும் ஆங்கிலப்பேராசிரியருமான நாகூர் ரூமி எழுதிய இரண்டு நூல்களை நண்பர் ஒருவரிடமிருந்து பல முயற்சிகளுக்குப்பின்
வாங்கி வந்தேன்.
1). அடுத்த விநாடி
2). இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம்.

என்நூலகத்தில் வாங்கிச் சேர்க்க நான் கண்வைத்த இரண்டு புத்தகங்கள் அவை.
முதலில் 'அடுத்த விநாடி' யை சில விநாடிகள் மேலோட்டமாகப் புரட்ட நினைத்த என்னை முழுதுமாக அது ஈர்த்ததில், மற்ற வேலைகளை மறந்து அப்படியே உட்கார்ந்து விட்டேன்,

சுய முன்னேற்ற நூல்கள் பொதுவாக 'எழுதியவருக்கே' அதிகம் உதவுவதாக இதுவரையில் கேள்விப்பட்டுள்ள எனக்கு, இந்நூல் உண்மையில் நல்ல ஆச்சரியமளித்தது.

தொடக்கம் முதலே பிசிறு தட்டாத, ஈர்க்கும் நடை ரூமிக்கே உரிய கலை.

முதல் அத்தியாயத்தில் 'ஒரு ரகசியம்' சொல்லித்தொடங்குகிற இந்நூல் வெற்றிக்குரிய 'பயிற்சியை' மேற்கொள்பவர்களாக வாசகர்களை இறுதியில் ஆக்கிவிடுகிறது

எதிர்மறையான எண்ணங்களையும் உணர்வுகளையும்,பழக்கங்களையும் விடாதவரை வெற்றியும் நமக்கு எதிர்மறையாகவே இருக்கும்.

வெற்றிக்கு மாலையிட விரும்பும் யாரும் தன்னைத்தானே தோற்கடிக்கிற மனப்பாங்கை (Self Defeating Behaviour) விட்டும் கட்டாயம் மீள வேண்டும் என்பதை வலியுறுத்தும் முதல் அத்தியாயத்தில் வருகிற பொன்மொழியிது:
"சிந்திப்பவர்கள் சாவதில்லை, சிந்திக்காதவர்கள் ஏற்கனவே செத்துப்போனவர்கள்"
வெற்றி என்பது பணம் புகழ் சம்பாதிப்பதோ, சொத்து சேர்ப்பதோ அல்ல. இவையெல்லாம் வெற்றியைக் குறிக்கலாம்.வெற்றியின் எத்தனையோ அடையாளங்களில் இவை ஒன்று அவ்வளவு தான்
'தோல்வி, அவமானம், ஏமாற்றம் எனப்பலப் பெயர்களில் வெற்றி தொடக்கத்தில் வருவதுண்டு' என வெற்றியின் பல முகங்களை இரண்டாம் அத்தியாயம் பேசுகிறது.
உதாரணங்களாக, பத்தாயிரம் தடவை தோற்றிருந்தாலும், இன்று ஒரு மாபெரும் வெற்றியாளராக அறியப்படும் விஞ்ஞானி எடிசனும், பலப்பல தோல்விகளுக்குப் பின்னரே வெற்றிக்கொடி கட்டிய ஆபிரஹாம் லிங்கனையும் ஆசிரியர் சுட்டுகிறார்.
நம்பிக்கை என்கிற அற்புத விளக்கைப் பற்றி பேசும் போது, தெளிவில்லாமல் குழப்பமாக இருந்தால் எந்த நம்பிக்கையாலும் பயன் இல்லை, உணர்ச்சியோடும், தெளிவான நம்பிக்கையோடும் ஆழ்மனத்துக்கு அனுப்பப்படும்
எண்ணங்கள் மட்டுமே வெற்றியாக நமக்குத் திரும்பி வரும்' என்கிறார்.
ஆசை என்னும் பிரார்த்தனை பற்றி பேசும்போது, குறிக்கோளுடன் கூடிய ஆசையை ஆசிரியர் வலியுறுத்துகிறார்.

'எந்த ஒரு காரியத்திலும் வெற்றி பெற வெற்றியின் விதிகளைப் பின்பற்றுவதுடன் தோல்வியின் எந்தவிதியையும் பின்பற்றாதிருக்க வேண்டும் என்பதையும் ஒரு விதியாக உணர்த்துகிறார்.
'தோல்வியின் விதிகளில் ஒன்று பதட்டம் (Tension) அடைவது'
நம்முடைய நாம், மற்றவருடைய நாம், உண்மையான நாம் என்று ஒவ்வொருவருள்ளும் இருக்கிற மூவரை வெளிப்படுத்தி அவரவர் வாழ்க்கை அவரவருக்கானதாக, உண்மையானதாக இருக்கவேண்டும் என்பதும் விளக்கப்பட்டிருக்கிறது.
வசதியற்றிருந்தாலும், செல்வமனநிலை கொண்டவர்களே வெற்றிக்குத் தகுதியானவர்கள் என்று விவரிக்கிற இந்நூல் பெரிய காரியங்களுக்கு வித்திடும் சிறிய அம்சங்களையும் நுண்ணோக்கிப்பார்வையில் கண்டு அவற்றின் முக்கியத்துவம் உணர்த்துகிறது.
தேவையற்றஎண்ணங்கள் எதையும் போட்டு குழப்பிக்கொள்ளாமல் குப்பைக்கூடையில் போட்டு விடும் அளவுக்கு நல்ல ஞாபகசக்தி வேண்டும் என்கிறார்.
அடுத்தவர் மீது பழி போடுவது, எதையும் நியாயப்படுத்த முயல்வது, கோபம், (பொருந்தாப்)பேச்சு என்கிற சுய சிறைகளிலிருந்து வெற்றிபெற விரும்புபவர்கள் வெளியேற விரும்பினால், இந்நூல் அதற்கு ஐயமின்றி உதவுகிறது.
முடிவெடுப்பதில் மதில்மேல் பூனையாக இருக்கக்கூடாது என்கிற கருத்து 'எண்ணித்துணிக கருமம்.." என்கிற குறளை நினைவுபடுத்துகிறது.

உடல்மொழி குறித்து சொல்லவரும்போது, உடல் என்பது சூட்சுமமான முறையில் மனது தான் என்கிறார்.

இறுதியாக, எளிய பயிற்சிகளாக 1) மூச்சுப்பயிற்சி, 2). கண் பயிற்சி 3). ரிலாக்சேஷன் 4). ஆல்ஃபா பயிற்சி 5) நினைவாற்றல் பயிற்சி 6). நினைத்தது நடக்க பயிற்சி 7). மன ஒருமைப்பாட்டுக்கான பயிற்சி ஆகிய பயிற்சிகளைத் தந்திருப்பதன் மூலம் இந்நூல் மேலும் சிறப்புடையதாகிறது.

முன்னேற்றத்தில் விருப்பமுடைய அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல்.



--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953
www.ezuthovian.blogspot.com

"People are not disturbed by things, but by the view they take of them."

Scholarship from Ministry of Overseas Indian Affairs

The Ministry of Overseas Indian Affairs, Government of India has introduced a Scholarship Programme for Diaspora Children (SPDC) for the children of PIOs/NRIs to pursue undergraduate programmes for Professional and General courses in Higher and Technical Institutions in India. The Educational Consultants India Limited ( Ed.CIL), a Government of India Enterprise, has been designated as the Nodal Agency for implementation of the SPDC. Assistance on merit basis is provided to the children of Diaspora (Persons of Indian Origin {(PIOs) and Non-Resident Indians (NRIs)} under the SPDC for the academic year 2007-2008.

Under this Scheme, 100 admission-cum-scholarships shall be offered for Undergraduate courses in Engineering/Technology, Humanities/Liberal Arts, Commerce, Management, Journalism, Hotel Management, Agriculture/Animal Husbandry, Science, etc to partially fund the tuition fees.

The scholarships will be offered on merit on the basis of a Common Written Examination to be held in Kuwait on Sunday, May 6, 2007. A detailed booklet prepared by Ed.CIL covering the guidelines, application forms and other details regarding the programme is attached. (Contact details of Educational Consultants India Limited : Ed.CIL House, 18A Sector 16A, Noida – 201 303 (Uttar Pradesh). Phone: 91-120-2515281 / 2512001; Fax: 0091-120-2515372; E-mail: placement@edcil.co.in; placement@edcil.emet.in ; Web: www.edcil.co.in, www.educationindia4u.nic.in.
The broad guidelines of the SPDC are as follows:

i) Children of Overseas Indians from 39 countries (list attached) covering Africa, Asia, Gulf and the Caribbean will be covered under the SPDC Scheme;

ii) Minimum age limit is 17 years and maximum age limit is 21 years as on October 1, 2007. Children of NRIs studying abroad for a minimum of 5 years with XI and XII schooling abroad will be covered under the SPDC scheme;

iii) The scholarship will be a partial scholarship to fund the tuitionfees for the course concerned;

iv) Eligibility for scholarships will be based on the basis of qualifyingmarks of 60% in Class XII and score in the entrance test to be managed by EDCIL. Candidates who have scored 60% aggregate marks in their XIIth grade will be eligible to appear in the entrance test. Students who are appearing for XIIth grade examination this year will also be eligible to appear in the test, but their selection will be confirmed subject to their fulfilling the eligibility criteria of 60% marks in XII;

v) The proposed entrance test will be of objective type of two hour duration comprising English language proficiency, Reasoning Ability/Quantitative Abilities and General Awareness. The examination will be conducted in Kuwait by the Embassy. The general standard of the examination will be that of 12th Standard of Indian educational system.

vi) Original Application Form (Hard copies only), complete in all respects are to be submitted to the Project Manager (MOIA), Educational Consultants India Limited, Ed.CIL House 18-A, Sector 16-A, NOIDA-201301 (India) latest by 23 rd March 2007.

vii) The last date for receiving the original application form in Ed.CIL is March 23, 2007;

______________________________________
SPDC -2007-08 INFORMATION BOOKLET AND APPLICATION FORM
http://www.educationindia4u.nic.in/shared/downloaditems/Img74.pdf

Thursday, November 15, 2007

குழந்தைகளும் தொலைக்காட்சியும்

குழந்தைகளும் தொலைக்காட்சியும்

பெற்றோர்களே! உண்மையில் நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது அக்கறையுள்ளவர்களா? … படியுங்கள்.

குழந்தையிடம் தொலைக்காட்சியின் ஆதிக்கம் மற்றும் விபரீதம் பற்றிய ஒரு ஆய்வு புகழ்பெற்ற மிச்சிங்காம் பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்டது.
மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்களை அது வெளியிட்டுள்ளது.


1. சாதாரணக் குழந்தை பள்ளியில் செலவழிக்கும் நேரத்தைக் காட்டிலும் தொலைக்காட்சியில் அதிக நேரம் செலவழிக்கிறது.
2. சராசரியாக ஒருவாரத்திற்கு 20 மணிநேரம் தொலைகாட்சியில் செலவழிக்கிறது.
இது மற்ற எல்லா செயல்களைக் காட்டிலும் அதிகமாகும். (தூங்குவதைத்தவிர).
3. சராசரியாக 70 வயது நிரம்பிய மனிதன் 7 முதல் 10 ஆண்டுகள் வரை நேரத்தை தொலைக்காட்சியில் செலவு செய்கிறான்.
4. விளம்பரங்கள் குழந்தைகளை இலக்காக வைத்து தயாரிக்கப்படுகின்றன.
மாதந்தோறும் ஆயிரக்கணக்கான வியாபார விளம்பரங்கள் தயார் செய்யப்படுகின்றன.
5. ஒருவருடத்திற்கு 1000 முதல் 2000 வரையிலான போதை சம்பந்தப்பட்ட விளம்பரங்களை குழந்தைகள் பார்f;கின்றன.

குழந்தைகளின் வாழ்வும் தொலைக்காட்சியும்:


1. தொலைக்காட்சி மூளை வளர்ச்சியை பாதிக்கிறது.
2. பெற்றோர் நினைப்பது போல் குழந்தை நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பதில்லை. அவை விளம்பர நோக்கத்திற்காகத் தயார் செய்யப்படுகின்றன.
3. தொலைக்காட்சி பார்ப்பது குழந்தைகளின் மற்ற செயல்களை அதாவது விளையாடுவது, பழகுவது, வீட்டுப்; பாடம் படிப்பது, பெற்றோருடன் நேரத்தை செலவிடுவது, சுகாதாரமான காற்றோட்டத்தை சுவாசிப்பது போன்றவற்றை நிர்மூலமாக்குகிறது.
4. குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதினால் பசியின்மை, தூக்கமின்மை, மந்தபுத்த, சகவாசமின்மை, முரட்டுத்தனம், பார்வைப் பாதிப்பு ஆகிய பின்விளைவுகளைப் பெறுகின்றன.

வன்முறையும் தொலைக்காட்சியும்


1. குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளில் ஐந்து முதல் ஆறு மடங்கு பெரியவர்களுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளைக் காட்டிலும் வன்முறை நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படுகின்றன.
2. சனி, ஞாயிறுகளில் 20 முதல் 25 வரை வன்முறைக்காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.
3. 8000 கொலைகளை பள்ளிப்படிப்பை முடிக்குமுன் குழந்தைகள் பார்க்கின்றன.
4. 10,000 கற்பழிப்புகள், அடிதடிகள், கொலைகள் ஓவ்வொருவருடமும் பார்க்கின்றன.அவற்றைப் பார்த்தது போல் வன்முறையில் ஈடுபட முனைகின்றன.
5. பள்ளியில் சேருமுனனரே (Adults) பார்க்கும் நிகழ்ச்சிகள் குழந்தைகளை மிகவும் பாதிக்கின்றன.
6. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மிகக் கெட்ட நடத்தைகளை வளர்க்கின்றன.
7. நினைப்பதை அடைய வன்முறை தான் தீர்வு என்று காண்பிக்கப்படுகின்றன.
8. நிறைய நிகழ்ச்சிகள் வன்முறை நிகழ்ச்சிகளுக்கு தண்டனையில்லாமல் காண்பிக்கப்படுகின்றன அவை கேலிக்குரியதாகவும் காண்பிக்கப்டுகின்றன.
9. நல்வர்கள் கெட்டவர்களை அடிப்பது நல்லது போலவும் அது சாதாரணமானது போலவும் சித்தரிக்கப்படுகிறது. விளையாட்டுகளில் இது போன்று நிரூபிக்க குழந்தைகள் முயலுகின்றன.
10. தொலைக்காட்சியில் வரும் (Fast food )உணவு ,இனிப்பு பதார்த்தங்களில் மட்டுமே ஆரோக்யமும் சத்தும் இருப்பது போல் குழந்தைகள் நினைக்கின்றன.
ஆனால், உண்மையில் அவ்வாறில்லை.


தொலைக்காட்சி பார்க்கும் நேரங்களை எப்படித் தீர்மானிப்பது ?:


1. எந்த நேரத்தில் பார்க்க அனுமதிப்பது? எந்த நேரத்தில் அனுமதிக்க கூடாது என்று வரையரை செய்யுங்கள். அதாவது வீட்டுப் பாடம் படிக்கும் முன் , எழுதும் நேரத்திற்கு முன,. சாப்பிடும் நேரம், பெற்றோர் அருகாமையில் இல்லாத நேரம் ஆகியவற்றில் கண்டிப்பாய் அனுமதிக்கக்கூடாது.
2. ஒரு நாளைக்கு ஒன்று அல்லது அதிக பட்சம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அனுமதிக்கக்கூடாது.
3. பள்ளி நாட்களில் இரவில் ஒரு மணிநேரமும், வார நாட்களில் 3 மணிநேரமும் அனுமதிக்கலாம்.
4. அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகளை சில நேரங்கள் அதிகமாக அனுமதிக்கலாம்.
5. படிப்பில் குறைவாக உள்ள குழந்தைகளை ஒரு நாளைக்கு அரை மணிநேரம் மட்டுமே அனுமதிக்கவேண்டும் அல்லது முற்றிலும் தவிர்க்கலாம். வார நாட்களில் 2 மணிநேரம் அனுமதிக்கலாம்.
6. வீட்டுப் பாடம் (Home work) இருக்கும் போது கண்டிப்பாய் டிவி பார்க்க அனுமதிக்காதீர்கள். குழந்தையின் விரும்பிய நிகழ்ச்சியாயிருப்பின் பதிவு செய்து பிறகு காண்பிக்கலாம்.
7. வார நாட்களில் டிவியை உபயோகிக்காமல் இருப்பதும் வார இறுதி நாட்களில் குறிப்பிட்ட அளவு பார்ப்பதும் மிகவும் நன்று. இது வீட்டுப் பாடம் படிக்க வேகப்படுத்துவதை தடுக்கும். குடும்பத்திலுள்ளவர்களுடன் உறவாட உதவும்.
டிவிமுன் நிறுத்திவிட்டு சமையல் செய்வதைக்காட்டிலும் சமையலுக்கு உதவ குழந்தையைத் தூண்டவேண்டும்.
இந்தியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெண்களை கீழ்த்தரமாகவும், கொச்சைப் படுத்தியும் டிவி தொடர்கள் காண்பிக்கப்படுகின்றன என்று கூறுகிறது.
'குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள் (குழந்தைகளின்) மழலைச் சொல் கேளாதார்' என்கிறார் வள்ளுவர். வருடக்கணக்கில் டிவி தொடர்கள் பார்ப்பதை விடுத்து குழந்தையுடன் கொஞ்சி விளையாடுங்கள் தொலைக்காட்சிகளில் பொழுதைக் கழித்து குழந்தைகளின் பாசத்தை இழந்து விடாதீர்கள்!

ஆபத்து! ஆபத்து!! மிகவும் ஆபத்து!!! உஷார்!


பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளை அழித்து விடாதீர்கள்!
இரண்டு மூன்று வயதுடைய குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பது மிகவும் ஆபத்தாகும். அந்த வயதில் தான் குழந்தைகளின் மூளை வளர்ச்சி அடைகிறது.
அப்போது தொலைக் காட்சி பார்ப்பதால் மூளை வளர்ச்சி பாதிப்பு அடையும்.
நாலாபுறமும் பார்க்க வேண்டிய கண்கள் ஒரே இடத்தில் நிலை குத்தி நின்று விடுவதே இதற்குக் காரணம்.
மூளை வளர்ச்சி பாதிக்கப்படுவதால், பள்ளிக்குச் செல்லும் போது பாடத்தில் கவனம் இருப்பதில்லை. சிந்தனை ஆற்றல் குறைகிறது. செயலாற்றலும் பாதிக்கப்படுகிறது. சுறுசுறுப்பாக ஓடி ஆடி விளையாடவேண்டிய வயதில் வயோதிகர்களைப் போல் இயக்கமில்லாமல் இருப்பார்கள்.
ஓடியாடாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து தொலைக் காட்சி பார்ப்பதால் குழந்தைகளின் உடலில் கொழுப்புச் சத்து சேருகிறது. இது எதிர்காலத்தில் குழந்தையின் உடல் நலனைப் பாதிக்கும். அதோடு இக்குழந்தைகள் முரட்டுக் குழந்தையாகளாகவும் இருப்பார்கள்.
அமெரிக்காவில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் இத்தனையும் தெரிய வந்திருக்கிறது.
(ரீடர்ஸ் டைஜஸ்ட்லிருந்து)


பெற்றோர்களே! உஷார்!!


பெற்றோர்களே! இன்று நமது பிள்ளைகளின் நிலையைப் பார்த்தீர்களா ?
சதாவும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் தான் உட்கார்ந் திருக்கிறார்கள். சன் டிவியின் 'சுட்டி' போன்ற சேனல்கள்; வந்த பிறகு பிள்ளைகள் எங்கும் செல்வதில்லை. விளையாடுவதற்குக் கூட வெளியே போவதில்லை.
பக்கத்து வீடுகளுக்கோ, உறவினர் வீடுகளுக்கோ அழைத்தால் கூட போவதில்லை.ஏன் வீட்டைவிட்டே வெளியே வருவதில்லை.

சிலைகளாக


பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் உடையைக்கூட மாற்றாமல் அதன் முன் சிலைகளாக அமர்ந்துவிடுகிறார்கள். தேனீர், சாப்பாடு எல்லாம் அதன் முன்னால் தான்.உட்கார்ந்து உட்கார்ந்து அவர்கள் களைத்துப் போய் படுத்துக் கொண்டே தொலைக்காட்சியை இமை கொட்டாது பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
விளைவு? அவர்களின் உடல் ஆரோக்கியம் குன்றி வலுவிழந்து விடுகிறார்கள்.
கண்பார்வை போய் முதியவர்களை விட கனமான கண் கண்ணாடிகளை அணியவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டி ருக்கிறார்கள். நடக்கவும் ஓடவும் செய்யாமல் சற்று தூரத்திற்கு நடப்பதற்கே இயலாது கால் வலிக்கிறது என்று கூறுகிறார்கள்.
குழந்தைகளின் நிலைமை எங்கோ சென்று விட்டது பார்த்தீர்களா?


குழந்தைகளின் எதிர்காலம்?


இப்படிப் போனால் குழந்தைகளின் எதிர்காலம் என்னாவது? என்று சற்றேனும் சிந்தித்தீர்களா? அவர்களைப்பற்றி நீங்கள் கவலைப்படவில்லையா?
உடல் வலுவிழந்து,மூளைத்திறன் குன்றி,சிந்திக்கும் ஆற்றல் இன்றி, செயலாற்றும் அனைத்து அபார ஆற்றல்களையும் இழந்து பரிதவிக்கும் நிலைக்கு படுவேகமாக அதல பாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
எதிர்காலத்தில் இவர்களெல்லாம் பொறியியல், மருத்துவம், தொழில் நுட்பம், அறிவியல் போன்ற உயர்தரப் படிப்பிற்குரிய எவ்விதத் தகுதியையும் பெறாது போய் விடுவார்கள்.
அப்படிப்பட்ட நிலைக்கு ஆளாகிவிடாது இப்போதே குழந்தைகளைப் பேணி வளர்க்கவேண்டியதும், அதற்கான ஆவனைகள் செய்து அவர்களின் உடலும், உள்ளமும் வலுவும் ஆரோக்கியம் பெற்று கல்வியிலும் ஒழுக்கத்திலும் மேம்பட்டு உயாந்தோங்குவதற்கும் ஒவ்வொரு பெற்றோரும் விழிப்போடு செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.


அலட்சியம் காட்டாதீர்!

இதிலே அலட்சியம் காட்டும் பெற்றோர் எதிர்காலத்தில் ஒளிவீச வேண்டிய தமது ஆற்றல் மிக்க சந்ததிகளை இப்போதே கண்களைக் கட்டி இருட்டிலே விட்டு அவர்களின் வாழ்வைப் பாழாக்குகிறார்கள்; என்பது தான் பொருள்.
எனவே! பேற்றோர்களே!குழந்தைகளை கருத்தூன்றி கண்காணியுங்கள்.
தொலைக்காட்சிப் பெட்டிகளை சிறிதுமூடிவையுங்கள். அவர்களுக்குரிய பயனுள்ள நிகழ்ச்சிகளை குறித்த நேரங்களில் பார்ப்பதற்கு ஆவனை செய்யுங்கள். கண்ட நேரங்களிலெல்லாம் டி.வி நிகழ்ச்சிகளையும், தொடர்களையும்,சினிமா படங்களையும் நீங்களும் பார்க்காமல் அவர்களுக்காக தியாகம் செய்யுங்கள்.
அவர்களை தொலை நோக்காகக் கொண்டே உங்கள் எல்லாச் செயல்களும் அமையவேண்டும்.
இது தான் அறிவார்ந்த பெற்றோர்கள் செய்யவேண்டிய கடமை. இதுவே அவர்களுக்கு அழகு.
குழந்தைகளை தூங்கவைப்பதற்கும், உணவூட்டுவதற்கும்,நாம் ஓய்வெடுப்பதற்கும் அவர்களை தொலைக்காட்சி முன் உட்கார வைத்து தாலாட்டி விட்டு நீங்கள் ஒதுங்கி விடாதீர்கள். அது அவர்களை பாழாக்கும் செயல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இறைவன் நமது சமுதாயத்தை காத்தருள்வானாக!

From: seeniali@eta.com.sa

குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ( KIUML) ஏற்பாடு செய்த

குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ( KIUML) ஏற்பாடு செய்த
''அரசியலின்றி சமுதாயப் பணிகள் சாத்தியமா ?'' சிறப்பு கருத்தரங்கம்‚

குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ( KIUML) சார்பில் 09-11-2007 வெள்ளிக்கிழமை இரவு 8:30 மணியளவில் குவைத் சிட்டி, மிர்காப் பகுதியில் உள்ள தஞ்சை உணவகம் , கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அரங்கில் ''அரசியலின்றி சமுதாயப் பணிகள் சாத்தியமா?'' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கருத்தரங்க நிகழ்ச்சிக்கு முஹம்மதுபந்தர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ( IUML ) தலைவரும், குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை( TMCA )யின் முன்னாள் தலைவருமான ஆர்.எம். முஹம்மது ஃபாரூக் அவர்கள் தலைமையேற்க, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க(K-Tic )த்தின் உலமாக்கள் குழு உறுப்பினர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது ஷரீஃப் மன்பயீ அவர்கள் கிராஅத் (இறைமறை திருக்குர்ஆன் வசனங்கள்) ஓத, குவைத் தமிழ் டாட் காம் மாத இதழின் உதவியாசிரியர் எம்.ஒய். முபாரக் ரஜ்வி அவர்கள் வரவேற்புரையாற்ற நிகழ்ச்சி இனிதே துவங்கியது.
தலைவரின் தலைமையுரைக்கு பின் , குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க( K-Tic)த்தின் துணைத் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ அவர்கள் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து கருத்தரங்க தொடக்கவுரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து... குவைத் தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவை( TISA )யின் தலைவர் க. ரஹ்மத்துல்லாஹ், எழுச்சிப் பாவலர் சமுதாயக் கவிஞர் விழுப்புரம் ஷாஜி , குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க( K-Tic )த்தின் உலமாக்கள் குழு உறுப்பினர் பேராசிரியர் மவ்லவீ ஏ. அப்துஸ் ஸலாம் தாவூதி, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க( K-Tic )த்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முன்னோடிகள் ஏபிஸி. நஜீர் மற்றும் கம்பளி பஷீர் ஆகியோர் ''அரசியலின்றி சமுதாயப் பணிகள் சாத்தியமா ?'' என்ற தலைப்பில் சிறந்த முறையில் தங்கள் கருத்துக்களை கருத்தரங்கில் எடுத்துரைத்தனர்.
குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ( KIUML டு) அமைப்பாளரும், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க( K-Tic )த்தின் துணைத் தலைவருமான திருப்பத்தூர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா அவர்கள் கருத்தரங்க நிறைவுரையாற்ற, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க(K-Tic )த்தின் இணைப் பொருளாளர் எச். முஹம்மது நாஸர் நன்றி கூறினார். துஆவுடனும், இரவு உணவுடனும் நள்ளிரவு 12 மணிக்கு கருத்தரங்கம் இனிதே நிறைவுற்றது.
இச்சிறப்பு கருத்தரங்கில் குவைத்தின் பல பகுதிகளிலிருந்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(IUML )கர்கள், ஆர்வலர்கள் , அனுதாபிகள் , உலமாக்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள் , பணியாளர்கள் , பல்வேறு இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ( KIUML ), குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க ( K-Tic ) பொறுப்பாளர்கள் இணைந்து செய்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்...

செய்தி : குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (KIUML )

அலைபேசி : 7862316, 7302747, 7549025, 6948224 & 7872482
மின்னஞ்சல் : iumlkuwait@yahoo.com

Wednesday, November 14, 2007

இந்திய பொருளாதார வளர்ச்சியும் , வளைகுடா இந்தியர்களும்

இந்திய பொருளாதார வளர்ச்சியும் , வளைகுடா இந்தியர்களும்

இந்தியாவின் பொருளாதாரம் உச்சகட்டத்தை எட்டி விட்டது. பங்குச்சந்தைக் குறியீட்டு எண் 20,000 தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. உலகையே ஆட்டிப் படைத்த டாலர் வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டது. இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 39 ஆக மாறி விட்டது.உலகின் மிகப் பெரும் பணக்காரராக முகேஷ் அம்பானி மாறி விட்டார். இந்தியர்கள் பெருமிதம் அடைந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் வளர்ச்சியா, வீக்கமா என்று என்னுள் மாறுபட்ட கருத்துகள் எழுகின்றன. இது வளர்ச்சியாகவே இருக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம். நமது கட்டுரையின் நோக்கம் இதை ஆராய்வது அல்ல. வளைகுடாவில் இருக்கும் லடசக்கணக்கான இந்தியர்களுக்கும் , இந்த பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்வதே ஆகும்.

பொதுவாக வளைகுடா பிரதேசங்களில் இருக்கும் இந்தியர்கள் குறைவான சம்பளத்தில் வேலை செய்பவர்களே. அதிலும் தமிழர்கள் 350,450 திர்ஹமிற்கு லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை செய்கின்றனர். . சுருக்கமாகச் சொன்னால் 80 சதவீதம் பேர் 8000 ரூபாய்க்குள் வேலை செய்பவர்களே. காலை முதல் இரவு வரை கடுமையாக உழைத்து இந்த பணத்தைச் சம்பாதிக்கின்றனர்.

கடந்த ஓராண்டாக டாலரின் வீழ்ச்சிக்குப் பிறகு இவர்களின் நிலை திண்டாட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. 2002 ல் 750 திர்ஹம் இருந்தால் 10,000 ரூபாய் அனுப்பி விடலாம். (2002 மே 1000 ரூபாய் = 74.30)ஆனால் இப்போது 970 திர்ஹம் தேவைப்படுகிறது. 2007 மே கிட்டத்தட்ட 15 முதல் 20 சதம் வரை இழப்பு ஏற்படுகிறது.ஆனால் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி என்னதான் உயர்ந்தாலும் விலைவாசி குறைவதாய் இல்லை. அதற்கு அரசும் ஏதும் நடவடிக்கை எடுப்பது இல்லை. பாலின் விலையும் , அரிசி, பருப்பின் விலையும் ஏறிக் கொண்டே தான் இருக்கிறதே ஒழிய குறைவதே இல்லை.

5000 அனுப்பியவர்கள் இப்போது 4000 மட்டுமே அனுப்ப முடிகிறது. 5000 த்தில் துபாய் செல்ல வாங்கிய கடன், அதற்கு வட்டி, வட்டி போட்ட குட்டி என அனைத்தையும் அடைத்து குடும்பத்தையும் காப்பாற்றக் கஷ்டப்பட்டவர்கள் இப்போது 4.000 எனும் போது மேலும் முழி பிதுங்கி நிற்கின்றனர்.

வளைகுடாவில் சம்பள உயர்வு என்பது பெரும்பாலான நிறுவனங்களில் கானல் நீர்தான். அபி அப்பா குறிப்பிட்ட அந்த இரு பெரிய கிளினிங் கம்பெனிகளில் ஆண்டாண்டுகாலமாக 350 , 450 திர்ஹம் தான் சம்பளம். சம்பள உயர்வே கிடையாது.ஆனால் இந்தியாவில் எவையெல்ல்லாம் அத்தியாவசியத் தேவையோ அவையெல்லாம் விலை உயர்கின்றன. ஆடம்பரத் தேவை உள்ளவைகளின் விலை குறைகின்றன்.

இதனுடைய வெளிப்பாடு தான் சமீபகாலங்களில் துபாயில் நடக்கும் போராட்டங்கள் போன வாரம் 4000 பேர் கைது செய்யப் பட்டு நாடுகடத்தப்பட இருந்தனர். ஆனாலும் அதில் 100 பேர் மட்டுமே நாடு கடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வருகின்றன். 2 ஆண்டுகளுக்கு முன்பு துபாய் - அபுதாபி சாலையில் மறியல் செய்யப்பட்ட போது தொழிலாளர்களுக்கு சாதகமாக இருந்த அரசும் இப்போது தொழிலாளர்களுக்கு எதிராகத் திரும்பி உள்ளது.

வளைகுடா நாடுகள் அனைத்தும் அமெரிக்க ஆதரவு நாடுகள். எது நடந்தாலும் நாட்டாமை புஷ் என்ன சொல்கிறாரோ அதை மட்டுமே கேட்பவர்கள். டாலர் வீழ்ச்சியடைந்து வரும் போது அவர்களுடைய நாணய மதிப்பை அதிகரிப்பதில்லை. உண்மையில் அவர்களுக்கு அதற்கு உரிமையில்லை.

1. டாலருக்கு நிகரான தமது நாணய மதிப்பை வளைகுடா நாடுகள் உலகச் சந்தை நிலவரத்துக்கு ஏற்றவாறு மாற்றப் போவதில்லை.
2. வளைகுடா நாட்டில் உள்ள கம்பெனி முதலாளிகள் ( இந்தியர்கள் வேலை செய்யும் பல நிறுவன நிர்வாகிகள் இந்திய பண முதலைகள் என்பது வேதனை) தங்களது ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தப் போவதும் இல்லை.
3. இந்தியர்கள் வளைகுடாவை விட்டு 'போதும்பா சாமி ' என்று திரும்பப் போவதும் இல்லை.
4. வழக்கம் போல இந்தியாவில் விலைவாசி குறையப் போவதுமில்லை.
5. இந்திய வெளியுறவுத் துறையோ, தூதரங்களோ தொழிலாளர்கள் நன்மைக்காக எந்தத் துரும்பையும் கிள்ளிப் போடப் போவதில்லை.

அப்படியானால் இதற்கெல்லாம் தீர்வு?.எல்லாம் நம் தலையெழுத்து என்று கஷ்டப்பட்டு கண்ணீர் விட்டுக் கொண்டே வேலை பார்த்துக் காலத்தை ஓட்ட வேண்டியது தான்.

.
மைலில் அனுப்பியவர் : Mansoor Khan
--
Adam.Arifin
http://www.geocities.com/adamarif

வேலை வாய்ப்பு பெற உதவும் இணையத்தளங்கள்

http://www.gulftalent.com

Friday, November 9, 2007

சங்கங்கள்

THAILAND TAMIL KAZHAGAM
G.P.O. Box No. 2233
149/28 Soiputtaosoth
Bangkok 10500
Thailand
Tel/Fax : 622 234 4382
Mobile : 6681 9373733 / 6487323
E mail : thailandtamil@gmail.com
Website : www.thailandtamilkazhagam.com


ALL INDIA MUSLIM FORUM
3,Sherwani Nagar, Opposite Lucknow University , Sitapur Road ,Lucknow.U.P. India
Phones: +91-522-2733715 : +91-9919777909 : +91-9935520782
Email: < drmksherwani@yahoo.co.in>

Dr. M. K. Sherwani, LL.D. Saeed Arshad Azmi
President General Secretary


இந்தியன் சோஷியல் கிளப்
மலையாளம், மஸ்கட்
24701347 / 99322910

தமிழ்ச் சங்கம்,மஸ்கட் tamilmct@yahoo.com

Wednesday, November 7, 2007

புகை பகைப்போம்

கலாச்சார நிலையம் ஏற்பாடு செய்திருந்த மதினா பயணத்தில், ஒவ்வொருவரும் அடுத்தவரிடம் பகிர்ந்துக்கொள்வதற்காக சில விஷயங்களை எடுத்து வந்திருந்தார்கள். நான் இஸ்லாம் சம்பந்தமான சில கவிதைகளை எடுத்துவந்திருந்தேன். சிலர் திண்பண்டங்கள் எடுத்துவந்திருந்தனர். என் நண்பரின் மாமனார் அவரும் படிப்பதற்கு சிலவற்றை எடுத்துவந்திருந்தார். நான் கவிதை தொகுப்புகளை அவரிடம் நீட்டியபோது
பதிலுக்கு ஒரு பிரசுரத்தை என்னிடம் நீட்டினார். அதில் புகைத்தலுக்கு எதிரான எச்சரிக்கைகள் இடம்பெற்றிருந்தது. வெளியீடு: குளச்சல் ஏ.என். மீரான், ஜித்தா என்றிருந்தது. சரி யாரோ ஒருவர் எழுதியதை கொடுக்கிறார் என்றிருந்தேன். பிந்தைய நாட்களில்தான் தெரிந்தது அவர்தான் குளச்சல் மீரான் என்பதாக.

மாஷா அல்லாஹ், மனிதருக்கு முடி நரைத்திருந்தாலும் சிந்தனை நரைக்கவில்லை. அவரின் எழுத்தை உங்களுக்காக இங்கே பதிவு செய்திருக்கிறேன். புகைப்பவர்களுக்கு புத்தி சொல்லுங்கள். அல்லது இதனை பிரிண்ட் செய்தாவது அவர்களின் கையில் திணித்துவிடுங்கள்.

அன்புக்குரியவர்களே!
1) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களைச் சிறுக சாகடித்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

2) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களின் ஆயுளின் எட்டு நிமிடங்களை குறைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
3) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

4) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்கள் இதயத்தை எரித்துக்கரியாக்கி கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

5) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களின் பொருளாதார வீழ்ச்சிக்கு நீங்களே வைத்துக் கொள்ளும் கொள்ளி என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

6) நீங்கள் பொது இடங்களில் பிடிக்கும் புகையின் நெடி ஆறுமணி நேரம் அந்த இடத்தை விட்டு அகலாமல் அப்பாவி மக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

7) நீங்கள் உங்கள் பிள்ளைகளின் பார்வையில் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் அந்த இளம்பிஞ்சுகளுக்கு ஆரம்ப பாடமாக அமைகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

8) நீங்கள் புகைப்பிடிப்பதை உங்கள் மனைவி கூட விரும்பாமல் மனம் குமுறுவதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

9) நீங்கள் புகைப்பிடிக்கும்போது உங்கள் அருகில் இருக்கும் நண்பர்கள் கூட உங்களை வேண்டா வெருப்போடு பார்ப்பதை பற்றி நீங்கள் சிந்தித்தது உண்டா?

10) நீங்கள் புகைப்பிடித்து விட்டு வீசி எறியும் சிகரட் துண்டினால் எத்தனை குடிசைகளும், கிராமங்களும் எரிந்து சாம்பலாகியுள்ளது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

11) நீங்கள் புகைத்துக்கொண்டே உங்கள் செல்வக் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடி மகிழும் போது அந்த புகையின் நெடியால் உங்கள் பிஞ்சு மழலைகள் நஞ்சை உட்கொள்கிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

12) நீங்கள் புகைப்பதால் உங்களை நீங்களே அழித்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

13) புகைப்பிடித்து பாதிப்புக்கு உள்ளாகி ஆண்டுதோறும் லட்சக்கணக்காண மக்கள் மரணத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

14) நீங்கள் புகைக்கும் புகையிலுள்ள நச்சுப்பொருள்கள் உங்கள் இரத்தத்தோடு கலந்து இரத்த நாளங்களை அடைக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

15) இளமையில் புகைத்து, புகைத்து தள்ளிவிட்டு முதுமையில் குரைத்து, குரைத்து அவஸ்தை படுபவர்களை பார்த்து நீங்கள் சிந்தித்தது உண்டா?

16) புகைப்பதை நிறுத்த முடியவில்லையே என்று நொண்டிக்காரணங்களை கூறுபவர்களால் இந்த உலகத்தில் வேற என்னதான் சாதிக்க முடியும்? என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

17) புகைப்பிடிப்பது ஆபத்து என்று விளம்பரம் செய்துகொண்டே வளர்ந்து கொண்டிருக்கும் சிகரட் உற்பத்தியாளர்களையும், அதை புகைத்து, புகைத்து வீழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் எதிர்காலத்தை பற்றியும் நீங்கள் சிந்தித்தது உண்டா?

18) புகைப்பிடிப்பது நாகரிகம் என்ற நிலை மாறி, புகைப்பிடிப்பது அநாகரிகம் என்ற உணர்வுக்கு இளைஞர்கள் மாறி வருவதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

19) உலகில் முன்னேறிக்கொண்டிருக்கும் நாடுகள் பலவும் புகைப்பிடிப்பதற்கு தடைபோட்டு சட்டம் இயற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

20) புகைப்பிடிப்பதற்கும், விஷம் குடிப்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதை இப்போதாவது நீங்கள் சிந்தித்துப் பார்ப்பீர்களா?

உங்கள் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் ஐந்தே ஐந்து நிமிடம் சிந்தனை செய்து புகை எனும் அரக்கனிடமிருந்து விடுதலை பெறுங்கள்.


fakhrudeen.h@gmail.com
நன்றி: http://nihalvu.blogspot.com/2004/10/blog-post_28.html (அபூ உமர்)

Monday, November 5, 2007

ETA ZENATH MAY 2007

புகைப்படங்கள்

வானலை வளர்தமிழ் - சிவ் ஸ்டார் பவனில் 11 ஜுலை 2008 வெள்ளிக்கிழமை



தேரிழந்தூர் தாஜுத்தீன் உடன்

இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா !

இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா !

நூல் : இஸ்லாமியப் பெரியார் தாவூத் ஷா
ஆசிரியர் : முனைவர் அ அய்யூப்
பக்கங்கள் : 160
விலை : ரூ 90
வெளியீடு : நவமணி பதிப்பகம்
44 எல்டாம்ஸ் சாலை
சென்னை 600 018
தொலைபேசி : 2434 0523

மறக்கப்பட்ட ஒரு மனிதரை நினைவுபடுத்தி இருக்கிறார் முனைவர் அ. அய்யூப்.

கம்பராமாயண சாயபு, இஸ்லாமிய இதழியலாளர்களின் முன்னோடி, தென்னாட்டு ஜின்னா, தாருல் இஸ்லாம் பத்திரிகையின் பிதாமகன், காதியானி தாவூத் ஷா, நாச்சியார்கோவில் தாவூத் ஷா என்று பல பெயர்களால் அழைக்கப்பட்ட பன்முகத் தோற்றம் கொண்டவர் இலக்கியவாதி அறிஞர் பா. தாவூத் ஷா.

அவரைப் பற்றி மிகவும் பிரையாசைப்பட்டு பல இடங்களில் அலைந்து, தேடித்தேடி, பல பேரிடம் விசாரித்து, விஷயங்களை அவரவரது நினைவுப் பதிவேடுகளிலிருந்து பெயர்த்து தந்திருக்கிறார் அய்யூப். ஓர் ஆய்வு நூலுக்கு தேடுவதைப் போல விஷயங்களைத் தேடி கோர்த்திருக்கும் நேர்த்தி சுவையானது.

நூலிலிருந்து சுவையான சில பகுதிகள்

உலகப் புகழ்பெற்ற கணித மேதை இராமனுஜரும், தாவூத் ஷாவும் ஒரே வகுப்புத் தோழர்கள், நெருங்கிய நண்பர்கள். அவர்களது நட்புக்குக் காரணமாக இருந்தது தாவூத் ஷாவிடமிருந்த தமிழறிவு. இராமானுஜருக்கு தமிழ்ப் பாடம் சரியாக வராது. தாவூத் ஷாவிற்கு கணிதப் பாடம் வராது. எனவே இருவரும் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டனர்.

குர்ஆன் மொழிபெயர்ப்பு

குர் ஆன் முழுவதையும் பொருளுரையும் விரிவுரையும் சேர்த்து தமிழில் வெளியிட வேண்டும் என்பது தாவூத் ஷாவின் கனவு. தனது இறுதிக் காலத்துக்குள் திருக்குர் ஆன் முழுவதையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுவிட வேண்டும் என்ற ஆர்வம் அவரது நெஞ்சில் முள் போல் உறுத்திக்கொண்டிருந்தது. அவருக்கு 70 வயதானபோது தாருல் இஸ்லாமி’ இதழை நிறுத்திவிட்டு முழுமையாக குர் ஆன் மொழிபெயர்ப்பில் இறங்கினார்.

அன்றைய உலமாக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இதையும் மீறி அவர் அச்சேற்றினார்.

இது காதியானி மொழிபெயர்ப்பு, கா•பிர் மொழிபெயர்ப்பு, இதனை முஸ்லிம்கள் வாங்கக்கூடாது என்று அன்றைய உலமாக்கள் பிரச்சாரம் செய்தார்கள். இதனால் தொடர்ந்து தொகுதிகளை வெளியிட முட்டுக்கட்டை விழுந்தது. நான்காம் தொகுதிக்கு தைக்கா சுஐபு ஆலிம் அவருகள் 13,000 கொடுத்தார்கள்.

1967 இல் ஐந்தாம் தொகுதி வெளிவந்தது. இதற்குள் உலமாக்களின் தாக்குதல் அதிகமாயிற்று. தாவூத் ஷாவும் நோயில் படுத்துவிட்டார்.

சீர்திருத்தக் கருத்துக்கள்

பள்ளிவாசல்களில் குத்பா சொற்பொழிவுகள் தமிழில் நடத்தப்பட வேண்டும் என்றார் தாவூத் ஷா. தர்காக்களில் வணக்கம் கூடாது. முஸ்லிம்கள் மாந்திரீகத்ஹ்டில் மூழ்கக் கூடாது. வேப்பிலை அடிக்கக்கூடாது. கறுப்புக் கயிறு கட்டக்கூடாது. நாள், நட்சத்திரம் பார்க்கக் கூடாது. முஸ்லிம் பெண்களை படிக்க வைக்க வேண்டும்.

இதழியலாளர்

சமுதாயப் பணிக்கு ஓர் இதழ் தேவை என்று 1919 ஆம் ஆண்டு நாச்சியார்கோயிலில் தாருல் இஸ்லாம் பத்திரிகையைத் தொடங்கினார். 1923 இல் அந்த இதழ் சென்னைக்கு வந்தது. 1957 ஆம் ஆண்டு வரை 38 ஆண்டு காலம் அந்தப் பத்திரிகையை அவர் நடத்தி இருக்கிறார்.

இதழ் நடத்துவது என்பது நெருப்பு ஆற்றை நீந்திக் கடப்பது போல’ என்று ஆதித்தனார் கூறுவார். 38 ஆண்டுகாலம் அவர் நெருப்பாற்றில் நீந்தினார்.

கலைஞரைக் கவர்ந்த தாருல் இஸ்லாம்

அந்தக் காலத்தில் நான் பள்ளியில் பயிலும் போது ஒரு கையிலே குடி அரசு ஏடு, இன்னொரு கையிலே தாருல் இஸ்லாம் என்கிற முஸ்லிம் லீக்கிற்காகப் பிரசாரம் செய்கிற நாளேடு. இவைதான் எங்கள் கைகளை அலங்கரிக்கும் என்கிறார் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி.

நன்றி :

நம்பிக்கை
மாத இதழ், மலேசியா
அக்டோபர் 2007

NAMBIKKAI
YPI Publication
29B JALAN PJS 10/24
Bandar Sri Subang
46000 Petaling Jaya
Selangor Darul Ehsan
Malaysia
Tel : 603 5631 4802
Fax : 603 5632 8025
E mail : nambikkai@gmail.com

Sunday, November 4, 2007

BANK

HDFC Bank Ltd - NRI Services
TNT International Mail
P O BOX No. 15321
Dubai - UAE
SAFI 050 9778460

படித்ததில் பிடித்த சிலகவிதைகள்

படித்ததில் பிடித்த சிலகவிதைகள்
- முடிந்து போன துவக்கங்கள் -
கடந்த காலத்தில்தோல்விகள் பல,
நல்லவேளை வெல்லவில்லை என்றுசொல்ல வைக்கின்றன.
கிடைக்காத நுழைவுத் தேர்வு ஒன்று
என் எதிர்காலத்தை வெளிச்சப்படுத்தியிருக்கிறது.க
ிடைக்காதவேலை ஒன்று தந்திருக்கிறதுகிடைத்தற்கரிய வேலையை.
துரோகமிழைத்த நண்பன் கற்றுத் தந்திருக்கிறான்தாங்கும் வலிமையை.
ஏமாற்றிய நண்பன்பெற்றுத் தந்திருக்கிறான்ஏமாறாத மனதை.
தோற்றுப் போன காதல் பரிசளித்திருக்கிறது
அன்பான மனைவியையும்அழகான குழந்தையையும்.
ஒவ்வோர் தோல்விக்கும் பின்னும்கடவுள் இருக்கிறார்.கவனித்துக் கொண்டே

படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது
SOFTWARE ENGINEER LIFE!
நண்பர்கள் மறப்பாய். .
உணவு குறைப்பாய். .
தூக்கம் தொலைப்பாய். .
கண்ணாடி அணிவாய். .
இமெயிலில் வாழ்வாய். .
தாய்மொழி மறப்பாய். .
புத்தகக் கடையில் version கேட்ப்பாய். .
கனவிலும் logic பேசுவாய். .
கணிப்பொரியய் பாடல்களால் நிரப்புவாய்.
பின்னிரவில் தொலைக்காட்சி ரசிப்பாய். .
அவ்வப்போது அபூர்வமாய் சிரிப்பாய். .
நேரத்தைவிட வேகமாகிப்போகும்வாழ்க்கையை விட்டு
வெளியேவரத்தெரியாமல்கணிப்பொறிக்குள்சிக்கி தொலைந்துபோவாய்!

கவிஞர் வைரமுத்துவின் தண்ணீர் தேசத்திலிருந்து .......

கவிஞர் வைரமுத்துவின் தண்ணீர் தேசத்திலிருந்து கண்டெடுத்தவை!!

உனக்கு நானோ எனக்கு நீயோ சுமையாகிப் போகாமல்
துணையாகிப் போவோம் வா !
தேவைதானா என்று கேட்டிருந்தால்
தீயை அறிந்திருக்க முடியுமா ?
குரங்கிலிருந்து மனிதன் குதித்திருக்க முடியுமா ?
தூரத்தைநெருங்கியிருக்க முடியுமா ?
நேரத்தைசுருக்கியிருக்க முடியுமா ?
தேவை தான்முட்டைக்குள் இருக்கும் உயிரை மூச்சு விடவைக்கிறது
அனுபவங்களின் தொகுப்புத்தான் வாழ்க்கை
நம் வாழ்க்கை முறை தீர்மானிக்கப்பட்ட அனுபவங்களையே
நம்மீது திணித்தது
யாருக்கோ நேர்ந்த அனுபவங்களை ஒப்புக் கொள்ளுமாறு
நம்மீது துப்பியது
ஆகவே தாத்தாக்களின் நகல்களாகவே
தமிழன் தயாரிக்கப்பட்டான்
சாதிக்கும் முளையிருந்தும்
சோதிக்கும் முயற்சியில்லை--------வைரமுத்து

குஜராத் பயங்கரம்: தெகல்கா-இந்தியா டுடேவின் அதிர்ச்சி வீடியோ

குஜராத் பயங்கரம்: தெகல்கா-இந்தியா டுடேவின் அதிர்ச்சி வீடியோ

குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் ஆசிர்வாதத்தோடும், உதவியோடும் தான் மதக் கலவரத்தை நடத்தியதாக பாஜக, விஎச்பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாக கூறியுள்ளனர்.

இதை தெகல்கா இதழ் ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது. இந்தியா டுடே மற்றும் தெகல்கா ஆகியவை இணைந்து நடத்திய இந்த ரகசிய ஆபரேசனில் குஜராத் மதக் கலவரத்தின் இன்னொரு பக்கம் வெளியே வந்துள்ளது.

குஜராத்தில் வன்முறை வெடிக்கக் காரணமாக இருந்தது கோத்ரா ரயில் தீ விபத்து. சுமார் 50க்கும் மேற்பட்ட அப்பாவி ராம பக்தர்கள் பலியான இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தான் வன்முறை தொடங்கியது.

கோத்ரா தொகுதியின் பாஜக எம்எல்ஏவான ஹரேஷ் பட் பஜ்ரங் தள் அமைப்பின் தேசிய துணைத் தலைவராகவும் உள்ளார். இவரையும் குஜராத் வன்முறையில் நேரடியாகப் பங்கு கொண்ட 7 பேரையும், மோடிக்கு மிக நெருக்கமான அரசு வழக்கறிஞரையும் மேலும் 5 பேரையும் தெகல்கா நிருபர்கள் குழு ரகசியமாய் நெருங்கியது.

அவர்களிடம் குஜராத் வன்முறை குறித்து பேசியது. அப்போது அதை ரகசியமாய் கேமராக்களில் படம் பிடித்தது.

ஆனால், தாங்கள் படம் பிடிக்கப்படுவது தெரியாமல் எப்படியெல்லாம் வன்முறையை நடத்தினோம், எப்படி ஒரு கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்துப் போட்டு வெட்டினோம் என்பதையெல்லாம் இவர்கள் பேசியுள்ளனர்.

தெகல்கா நடத்திய இந்த ஆபரேசனுக்கு தலைமை வகித்தவர் அதன் நிருபரான ஆஷிஷ் கெய்தான். அவர் 'விஎச்பியும் இந்துத்துவாவும்' என்ற புத்தகம் எழுதப் போகிறேன். அதற்காக கருத்துக்கள், விவரங்களைத் திரட்டி வருகிறேன் என்று கூறித்தான் இவர்களை நெருங்கியுள்ளார்.

கிட்டத்தட்ட 6 மாத காலமாக இவர்களிடம் பேசி, அதை ரகசியமாக வீடியோ எடுத்து வந்துள்ளார் கெய்தான்.

இந்த வீடியோவில் அவர்கள் பேசியுள்ளது மிக பயங்கரமாக உள்ளது.

வன்முறைக்கு டைம் கொடுத்த மோடி..

கோத்ரா எம்எல்ஏவான பட் கூறுகையில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன் மோடி தலைமையில் பாஜக பிரமுகர்கள், பஜ்ரங் தள், விஎச்பி, ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் கூட்டம் நடந்தது. அதில் நான் உங்களுக்கு 3 நாட்கள் நேரம் தருகிறேன். அதற்குள் என்ன வேண்டுமானாலும் (வன்முறை, கொலை, தாக்குதல்) செய்து கொள்ளுங்கள். ஆனால், 3 நாட்களுக்குப் பின் நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியாக வேண்டும் என்றார்.

மேலும் நரோடா பாட்டியாவில் பெரிய அளவில் கொலைகள் நடந்த பின்னர் அதற்காக எங்களை மோடி அழைத்துப் பாராட்டினார் என்று கூறியுள்ளார் பட்.

போலீஸ் உதவியோடு பாம் தயாரித்தோம்...

விஎச்பியைச் சேர்ந்த அனில் படேல், தாபல் ஜெயந்தி படேல் ஆகியோர் கூறுகையில், விஎச்பி தொண்டர்கள் எனது தொழிற்சாலையில் தான் குண்டுகளைத் தயாரித்தனர். ராக்கெட் லாஞ்சர்களைக் கூட தயாரித்து முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தினோம். இதற்கு போலீசாரும் எங்களுக்கு உதவியாக இருந்தனர்.

பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன்....
பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி கூறுகையில், நான் அந்த கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன். அதிலிருந்த சிசுவை எடுத்து வெளியே எரிந்து வெட்டினேன் என்று கூறியுள்ளார்.

மதன் சாவல் என்ற பாஜக தொண்டர் கூறுகையில், முன்னாள் காங்கிரஸ் எம்பி ஜாப்ரி தனது பகுதி முஸ்லீம்களை காப்பாற்ற முயன்றார். தனது வீட்டில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தார். இதையடுத்து நாங்கள் வாள்களுடன் அவரது வீட்டை முற்றுகையிட்டோம். அப்போது கை நிறைய பணத்தை அள்ளிக் கொண்டு வந்த ஜாப்ரி இதை வைத்துக் கொண்டு அனைவரையும் விட்டுவிடுமாறு கூறினார்.

நாங்கள் சரி என்றோம். பணத்தைக் கொடுத்த அவர் கதவைத் திறந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்து அவரைப் பிடித்தோம். இருவர் கையை பிடித்துக் கொள்ள நான் அவரது கைகளை வெட்டினேன் பின்னர் அவரது மர்ம உறுப்பை வெட்டி எரிந்தோம். பின்னர் அவரை துண்டு துண்டாக்கி எரித்துவிட்டோம். அவர் வைத்திருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டோம் என்று கூறியுள்ளார்.

இன்னொரு தொண்டர் கூறுகையில், நரேந்திர மோடியால் தான் நான் சிறையில் இருந்து வெளியே வந்தேன். அவர் நீதிபதிகளை இடமாற்றம் செய்து தனக்கு வேண்டியவர்களை நியமித்ததால் தப்பித்தேன் என்றார்.

இவை அனைத்தும் வீடியோவில் அப்பட்டமாக அப்படியே பதிவாகியுள்ளன.

குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வெளியாகியுள்ள இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரகாஷ் ரத்தோட் என்பவர் கூறுகையில், பாஜக எம்.எல்.ஏ மாயா பென் வீதி வீதியாக சென்று முஸ்லீம்களை விரைவாக கொல்லுங்கள், யாரையும் விடாதீர்கள் என்று வேகப்படுத்தினார் என்று கூறியுள்ளார்.

சுரேஷ் ரிச்சர்ட் என்பவர் கூறுகையில், போலீஸார் எங்களை அழைத்து சில இடங்களை சுட்டிக் காட்டி இங்கு முஸ்லீம்கள் சிலர் ஒளிந்துள்ளனர். அவர்களை விடாதீர்கள் என்று எங்களுக்கு வழி காட்டினர். நாங்கள் அந்த இடத்திற்குச் சென்று வெளியிலிருந்து கதவுகளை மூடி உள்ளேயே வைத்து அவர்களை எரித்துக் கொன்றோம் என்று தெரிவித்துள்ளார்.

விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த ரமேஷ் தவே கூறுகையில், இதை நாங்கள் இப்போது செய்யவில்லை. கடந்த 20, 25 வருடங்களாகவே எங்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் (முஸ்லீம்கள்) கொன்று குவித்துள்ளோம் என்று கூறியுள்ளார் தவே.

அரசு, நீதித்துறை, காவல்துறையின் கூட்டுச் சதி:

குஜராத் கலவரம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நானாவதி ஷா கமிஷன் முன்பு ஆஜரான அரசு வக்கீல் அரவிந்த் பாண்ட்யா கூறுகையில்,

கலவரத்தில் ஈடுபட்டோருக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டன. முதல்வர் நரேந்திர மோடி உயர் காவல்துறை அதிகாரிகளை அழைத்து இந்துக்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளுமாறு வாய் மொழியாக உத்தரவிட்டார்.

கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு மோடி மிகவும் அப்செட் ஆக இருந்தார். அகமதாபாத்தில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஜுஹபுரா பகுதியில் தானே குண்டு வீசத் தயாராக இருப்பதாக அவர் கூறி வந்தார். ஆனால் முதல்வர் பதவியில் இருந்ததால் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்பட்டார்.

முஸ்லீம்களைக் கொன்ற தினத்தை ஆண்டுதோறும் இந்துக்கள் பெரிய அளவில் கொண்டாட வேண்டும். அதே சமயம் அவர்களைக் கொல்வதை விட நசுக்குவதுதான் மிகவும் சிறந்தது. இதன் மூலம் முஸ்லீம்கள் காலம் பூராவும் இந்துக்களுக்குக் கட்டுப்பட்டு இருப்பார்கள்.

முஸ்லீம்களைக் கொல்வதைப் போல அவர்கள் மீது பொருளாதார நெருக்கடியைத் திணிக்க வேண்டும் என்று கூறியுள்ள பாண்ட்யா இதை விட பயங்கரமாக, இந்த சம்பவத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி நானாவதி ஷா கமிஷனையே விலைக்கு வாங்கிவிட்டன பாஜக மற்றும் அதன் கூட்டு அமைப்புகள் என்றும் தெரிவித்துள்ளார்.

அதுகுறித்து அவர் கூறுகையில், நீதிபதி நானாவதியுடன் கூட்டாக விசாரித்த கே.ஜி.ஷா (இவர்தான் கமிஷனின் தலைவர்) ஒரு பாஜக அனுதாபி என்றும் கூறியுள்ளார் பாண்ட்யா.

வி.எச்.பி. பொதுச் செயலாளர் திலீப் திரிவேதி கூறுகையில், மாநிலம் முழுவதும் உள்ள வக்கீல்கள் எங்களுக்கு சாதகமாக இருந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு சாதகமாக அவர்கள் வாதாடினர் என்றார்.

குஜராத் கலவரம் அதிர்ச்சியான உண்மைகள்.

குஜராத் கலவரம் அதிர்ச்சியான உண்மைகள்.
வீடியோ பதிவின் தமிழாக்கம்

http://www.youtube.com/tmmktv

அவர்கள் தங்களுக்குள்ளே சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லாஹ் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவற்றையும், உண்மையையும், குறிப்பட்ட தவணையையும் கொண்டல்லாமல் படைக்கவில்லை எனினும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் தங்கள் இறைவன் சந்திப்பை நிராகரிக்கிறார்கள். (அல்குர்ஆன் 30:8)

நடுநிலைமையே சிறந்தது

'நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது. இம்மார்க்கத்தை எவரும் (தமக்கு) சிரமமானதாக ஆக்கினால், அவரை அது மிகைத்துவிடும். எனவே, நடுநிலைமையையே மேற்கொள்ளுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்; காலையிலும் மாலையிலும் இரவில் சிறிது நேரமும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

M.Hussainghani [ஹூஸைன்கனி]
hussainghani@gmail.com
Sikkal - Ramnad Dist
Camp : Riyadh (KSA)