Sunday, June 27, 2010

இதயத்தை பாதுகாக்க யோசனைகள்

இதயத்தை பாதுகாக்க யோசனைகள்



***********
1. மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள். சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதை நிறுத்தி விட்டால் நலம்.

2. உண்ணாமல் டயட்டில் இருப்பது உங்களை எரிச்சல் படுத்தவே செய்யும். சில நேரங்களில் டயட்டில் இருப்பது போதிய சத்து உடலில் சேராமல் தீங்கு விளைவிக்கும்.

3. உடல் எடை குறைவு - சரியான உடற் பயிற்சி மூலம் தான் அடைய முடியும். குறிப்பாக எடை குறைவு நீண்ட நாள் நீடிக்க உடற் பயிற்சி அவசியம்.

4. நீங்கள் விரும்பும் உணவு எதையும் முழுவதுமாக தவிர்க்க வேண்டாம். அவற்றை குறைவாக, அவ்வபோது சாப்பிடுங்கள்.

5. மீனில் சில நல்ல அமிலங்கள் இருப்பதால், மீன் சாப்பிடுவது நம் இதயத்துக்கு நல்லது.

6. பிரஷ் ஆக உள்ள காய் & பழங்கள் தினம் சாப்பிடுங்கள். ப்ரிட்ஜில் வைக்கப்படும் காய் - பழங்கள் 50 முதல் 60 % வரை சத்துக்களை இழக்கின்றன.

7. பிரஷ் ஆக உள்ள காய் & பழங்கள் தினம் சாப்பிடுவது புற்று நோய் மற்றும் இருதய நோயிலிருந்து நம்மை காப்பாற்றும்.

8.உபயோகபடுத்திய சமையல் எண்ணைகளை மீண்டும் உபயோகபடுதாதீர்கள்.

9.புகை பிடிப்பதும் அதிக எடையுடன் இருப்பதும் இதயத்துக்கு அதிக தீங்கை விளைவிக்கும்.

10. தக்காளி, வெங்காயம், பூண்டு, எலுமிச்சை, கேரட் ஆகியவை கொலஸ்ட்ரால் குறைக்க உதவும்.

11. சாப்பிடும் நேரம் டென்சன் ஆகாமல் அமைதியாய் இருங்கள்.

12. மிக சிறிய , உபயோகம் இல்லாத விஷயங்களால் தான் பெரும்பாலும் (90 %) நமக்கு மனச்சுமை (Stress) வருகிறது.

13. மனச்சுமை ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது.

14. எல்லா விஷயங்களும் மிக சரியாக (perfect ) இருக்க வேண்டும் என எதிர் பார்க்காதீர்கள். நீங்கள் perfect ஆன மனிதர் இல்லை என்பதை உணருங்கள். இது உங்கள் ரத்த அழுத்தம் மற்றும் மனச்சுமை குறைய உதவும்.

15. சில வேலைகளை பிறரிடம் கொடுத்து செய்ய சொல்லுங்கள் ( Delegate ).

16.கோபம், வருத்தம், மகிழ்ச்சி உள்ளிட்ட உணர்ச்சிகளை வெளி காட்டி விடுங்கள். அவற்றை அடக்குவதன் மூலம் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகமாகும் என்பதை உணருங்கள்.


17. அடிக்கடி ஊழியர்களை வேலையை விட்டு அனுப்புபவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம். வேலையை விட்டு செல்பவர்களை விட, அவர்களை வேலையை விட்டு அனுப்பும் நபர் மனதளவில் அதிகம் பாதிக்கபடுகிறார் !

18. குளிர் காலத்தில் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம்.

19. உங்கள் படுக்கை அறையில் தொலை காட்சி, கணினி, வளர்ப்பு பிராணிகள் இவற்றை அனுமதிக்காதீர்கள்.

20. உடல் எடை கூடுவதற்கு தொலை காட்சி ஒரு முக்கிய காரணம் ஆகும்

21. உங்கள் அலை பேசியை உங்கள் பார்ட்னர் ஆக்கி கொள்ளாதீர்கள்; அது மோசமான பழக்கம்; மேலும் மனச்சுமையை கூட்டும்.

22. மகிழ்ச்சியுடனும், பொறுமையுடனும் இருப்பவர்களை இதய நோய்கள் அதிகம் தொந்தரவு செய்வதில்லை.

23. சிரிப்பு ( Laugh therapy) புற்று நோய், இதய நோய், மன சுமை போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது என அறிவியல் ரீதியாக நிரூபிக்க பட்டுள்ளது.

24. தவறு செய்தால் அதனை ஒப்பு கொள்வது உங்கள் தன்னம்பிக்கையை அதிகபடுத்த உதவும்

25. உங்கள் பிரச்சனைகளை முடிந்த வரை பேசி தீர்க்க பாருங்கள்.

26. நேர் மறை எண்ணங்களையே மனதில் முடிந்த வரை கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என ( Optimist ) நம்புங்கள்.

27. மகிழ்வாக வாழும் கணவன்- மனைவிக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் குறைவு. தனியே வாழ்வோருக்கு வாய்ப்புகள் அதிகம்.

28. நம்பிக்கையும் நேர் மறை சிந்தனைகளுமே புற்று நோய் மற்றும் இதய நோய்களிலிருந்து மீள உதவும்

29. வருடத்திற்கு ஒரு முறை உடல் நல பரிசோதனை மிக மிக அவசியம்.

30. பழைய நட்புகளை விடாது தொடருங்கள். புது நட்புகளும் உருவாக்கி கொள்ளுங்கள். நிறைய நண்பர்கள் இருந்தால் உங்கள் உடல் நலனும் நன்றாக இருக்கும்.

கலிபோர்னியாவில் பெண்கள் பயான்

கலிபோர்னியாவில் பெண்கள் பயான் ஒன்றுக்கு ஏற்பாடு

செய்யப்பட்டுள்ளது.தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில்
ரிச்மாண்ட் என்ற ஊரில் உள்ள பெரிய மர்கசில் வெள்ளி,சனி,ஞாயிறு என
தொடர்ந்து தப்லீக் ஜமாஅத் இஜ்திமா நடைபெற்று வருகிறது.

அதுபோது,அமெர்க்கா,கனடா மற்றும் உலகின் பல முனைகளிலிருந்தும் பலர்
கலந்துகொண்டுள்ளனர்.அதுபோல இந்தியாவின் பல மாநிலங்கள்,தமிழகம் போன்ற
இடங்களிலிருந்தும் மார்க்க அறிஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழகம் சார்பாக குறிப்பாக புரொபசர் அப்துல் ரஹ்மான்(70) அவர்கள்
கலந்துகொண்டுள்ளனர்.


புரொபசர் அப்துல் ரஹ்மான் அவர்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.அவர்
சொன்னார்,"அட அதிராம்பட்டினமா?நம்ம அப்துல் காதர் ஆலிம்சா
ஊராச்சே.தங்கமான மனிதரைக் கொண்ட ஊரல்லவா அது?"என்றார்.மேலும்
கூறுகையில்,சில மாதங்கள் முன்பு ஆஸ்திரேலியா சென்றோம்.அங்கு அதிரையை
சேர்ந்த சகோதரர்களை சந்தித்தோம்.அவர்கள் பெண்கள் பயானுக்கு ஏற்பாடு
செய்து,அது மூலம் பலர் பயன்பெற்றனர்.இங்கும் நீங்கள் ஏற்பாடு
செய்தால்,பேசுவோமே?என்றாகள்.



இன்ஷா அல்லாஹ் - அல்லாஹ் நாடினால் செய்வோம் என்று சொல்லி விடை பெற்றோம்.

அல்லாஹ்வின் கிருபையினால்,அதிரையை சேர்ந்த சகோதரர் ஷிப்லி அவர்கள் தங்கள்
வீட்டில்( சாக்ரமண்டோ )பயானை வைத்துக்கொள்ளலாம் என மனமுவந்து
ஒத்துக்கொண்டார்கள்.

எனவே இன்ஷா அல்லாஹ்,ஞாயிறு (06.27.10)அன்று சாக்ரமண்டோ மஸ்ஜித் அந்நூர்
பள்ளிவாசலில் அசர் தொழுகை முடிந்தவுடன்,சகோ ஷிப்லி அவர்களின் வீட்டில்
பயான் தொடங்கி,மக்ரிப் நேரம் வரை நடை பெரும்.

எனவே அதிரையை சேர்ந்த சகோதரர்கள் மட்டுமின்றி தமிழ் மொழி பேசும் எல்லா
ஆண்களும்,பெண்களும் வந்து பயன்பெற வேண்டுமாய் அன்புடன்
வேண்டுகிறோம்.மேலும் உருது,ஆங்கிலம் இரண்டிலும் மொழிபெயர்ப்பு ஏற்பாடும்
செய்யப்பட்டுள்ளது.


இடம் மற்றும் ரூட் போன்ற விவரங்கள் அறிய சகோ ஷிப்லி அவர்களை தொடர்பு கொள்ளவும்.

BROTHER SHIBLI 916 473 3593

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர் பாவங்களையும் மன்னிப்பானாக.ஆமீன்

நிகழ்ச்சி ஏற்பாடு மதுரை சலீம்,அதிரை ஷிப்லி

நேர்முக தேர்வி(Interview)ல் வெற்றி பெற தேவையான முக்கிய அம்சங்கள்

நேர்முக தேர்வி(Interview)ல் வெற்றி பெற தேவையான முக்கிய அம்சங்கள்

அரசு அல்லது தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளை பெற எழுத்துதேர்வு மட்டுமன்றி Interview நேர்முக தேர்வு மற்றும் Group Discussion குழு விவாதம் ஆகியவற்றையும் சந்தித்தாக வேண்டும். வேலை வாய்ப்புகளுக்கு மட்டுமின்றி M.B.A போன்ற உயர் கல்வி படிப்பில் சேரவும் நேர்முக தேர்வு மற்றும் குழு விவாதம் தேவைபடுகிறது.
நவீன நிறுவனங்கள், தங்களது தேர்வு அமைப்பைப் பயன்படுத்தி தேவையான பணியாளர்களை தேர்வு செய்வது அல்லது இதற்கெனவே இருக்கும் தனியார் அமைப்புகளிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்து விடுவது. இதில் எந்த முறையானாலும் தகுதியான, திறமையான பணியாளர்களை தேர்வு செய்ய கீழ்காணும் நான்கு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
1. கல்வி தகுதி
2. எழுத்துத் தேர்வு
3. குழுவிவாதம்
4. நேர்முகத் தேர்வு
முதல் கட்டம்: விண்ணப்பதாரரின் கல்வி தகுதி, அவர் விண்ணப்பம் அனுப்பி இருக்கும் முறை, அதில் பயன் படுத்தியிருக்கும் வார்த்தைகள், கடித வாசகங்களை எழுதி இருக்கும் முறை, கல்வி தவிர முன் அனுபவம், மற்றும் பிற துறைகளில் இருக்கும் திறமை போன்றவைகளை அடிப்படையாக வைத்து அந்த நபரின் விண்ணப்பத்தை தேர்வு செய்வது.

இரண்டாவது கட்டமான எழுத்து தேர்வில் விண்ணப்பதாரின் கல்வித்திறன் சோதித்து அறியப்படுகிறது.

முன்றாவதாக குழுவிவாதம் மூலம் அந்த நபரின் அறிவுத்திறன், குழுவாக செயல்படும் திறன், சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு ஏற்ப பேசுதல் செயல்படுதல் போன்ற திறன்கள் மதிப்பிடப்படுகின்றன.

இறுதிக் கட்டமான நேர்முகத் தேர்வு விண்ணப்பதாரரின் பிற குணங்களை அறிய உதவுகிறது.
நேர்முகத்தேர்வின் போது பொதுவாக ஐந்து முக்கிய அம்சங்களை தேர்வாளர்கள் மதிப்பீடு செய்வார்கள். அவை 1.தனித்திறமைகள் 2. தலைமைப் பண்பு திறமை 3.தொழில்நுட்பம், கல்வி மற்றும் பணித்திறன் 4. பொது விஷயங்களில் ஆர்வம் 5.தனிப்பட்ட குணாதிசயங்கள்
இந்த ஐந்து அம்சங்களும் நிறைந்தவரை தங்கள் நிறுவனத்திற்கு தேர்வு செய்ய வேண்டும் என்பதே தேர்வாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். இந்த குணங்களும் திறமைகளும் ஒருவருக்கு இருக்கிறதா என்பதை அவரிடம் கேள்விகள் கேட்பதன் மூலமும், பொதுவான விபரங்கள் குறித்து பேசுவதன் மூலமும்தான் அறிய முடியும். இந்த வழி முறையைப் பின்பற்றித்தான் ஒருவரிடம் என்ன திறமைகள் இருக்கின்றது என்பதை தேர்வாளர்கள் அறிந்து கொள்ள முயற்சி செய்வார்கள்.

எனவே அதற்கு ஏற்ப நேர்முக தேர்வில் கலந்து கொள்பவர்களும் செயல்பட்டு தங்களது அனைத்துத் திறமைகளையும் தேர்வாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் செயல் படுவது மிக அவசியம். கேள்விகளுக்கு சரியாக பதில் அளிப்பது மட்டுமே வெற்றியைத் தந்து விடாது, நமது உற்சாகமான மன நிலையும், கலகலப்பானப் பேச்சுத் திறமையும், நமது கண்ணியமான உடல் அசைவுகளும் நம்மைப் பற்றிய உயர்ந்த எண்ணத்தை தேர்வாளர்கள் மனதில் தேற்றுவிக்க வேண்டும். அப்போது தான் ஏராளமான போட்டியாளர்கள் மத்தியில் நாம் தனித்து தெரிவோம். இதன் மூலம் வெற்றியும் நம்மைத் தேடி வரும்.


A.Kader Mohideen,
Director
CSC Computer Education
MUDUKULATHUR
Email : kader.cworld@gmail.com Phone : 9443443834

informative site

informative site


http://infoplus.co.in

DIABETIC?

DIABETIC?
FINALLY GOOD NEWS FOR ALL DIABETICS

A woman (65) was diabetic for the last 20+ years and was taking insulin twice a day,
she used the enclosed homemade medicine for a fortnight and now
she is absolutely free of diabetes and taking all her food as normal including sweets ............ ......... .......

The doctors have advised her to stop insulin and any other blood sugar controlling drugs.
I request you all please circulate the email below to as many people as you can and
let them take the maximum benefit from it.


AS RECEIVED :


DR. TONY ALMEIDA ( Bombay Kidney Speciality expert ) made the extensive
experiments with perseverance and patience and discovered a successful treatment for diabetes.
Now a days a lot of people, old men & women in particular suffer a lot due to Diabetes.

Ingredients:
1 - Wheat flour 100 gm
2 - Gum(of tree) (gondh) 100 gm
3 - Barley 100 gm
4 - Black Seeds (kalunji) 100 gm

Method of Preparation Put all the above ingredients in 5 cups of water.
Boil it for 10 minutes and put off the fire. Allow it to cool down by itself.
When it has become cold, filter out the seeds and preserve the water in a glass jug or bottle.

How to use it?
Take one small cup of this water every day early morning when your stomach is empty.
Continue this for 7 days. Next week repeat the same but on alternate days. With these 2 weeks of treatment you
will wonder to see that you have become normal and can eat normal food without problem.

Europe Speaks Arabic

Europe Speaks Arabic

Reviewed by U MUHAMMAD IQBAL
Title of the book: Europe Speaks Arabic
Author’s name : Dr V Abdur Rahim
Publishers : Institute of the Language of the Quran Inc.
3077 Weston Road, Suite# 1912
Toronto ON Canada M9M 3A1
Price : Rs. 150

Reviewed by U MUHAMMAD IQBAL

Dr. S. Radhakrishnan once said that if Sir Isaac Newton had not discovered the theory of gravitation, somebody else would have discovered it sooner or later, and that if Columbus had not discovered America, the country was there to be reached one day or the other, but, if Shakespeare had not written Hamlet, nobody else could have produced the literary masterpiece and the world would have been all the poorer for it. In my humble opinion, the book under review Europe speaks Arabic is as much a creative work of the highest quality as any one can think of. If Dr. V. Abdur Rahim had not written it, nobody else would have had the credit for producing it.

The title of the book is startling and is meant to startle. The impact of Arabic on European languages had been so vast, so wide-ranging and so enduring and yet subjected to such indifference and had been taken for granted so frustratingly that it needed a scholar of titanic proportions like Dr. V. Abdur Rahim to make the present-day Europeans realize how much they should be indebted to Arabic. In a sentence like, “Check the sugar in your coffee, Admiral”, all the nouns and the verb have Arabic origin. Eric, a character in the book, acknowledges that “These words are so many and so important that one may almost say that we in Europe speak Arabic.”

The title of the book echoes Eric’s observation and at the same time reflects a marketing strategy. On reading the title it will be difficult for the reader to not satisfy his curiosity. He will go all out to find out how the thesis is fully worked out. The title reflects a very important fact that Arabic, nay any language for that matter, is primarily a spoken medium. The verb in the title draws our attention to it. The title cover of the book carries a photograph of a bridge in London, suggesting that Arabic is a bridge between East and West. It is a bridge between this world and the Hereafter too if the Arabic Qur’ān is adopted as a manual of guidance.

Arabic is spoken as the first language by both Arab Muslims and Arab Christians and so the book avoids the religious overtones, as though in response to an explicit instruction of Eric, who says, “I do not want you to mention words like fatwa, intifada, jihad, sunnah, shia, sharia, fedayeen, etc.” I am amazed at Eric’s knowledge of the vocabulary associated with Islam and the Muslims! Ahmed, the protagonist of the book, the alter ego of the author, follows the instruction scrupulously and religiously throughout the book!

This ensures the non-controversial nature of the book and attracts a wider readership. The author says, “Only words recognized by European linguists as borrowings from Arabic, and mentioned in reputed dictionaries, are included in this book.” This line of abundant caution makes the book authoritative and authentic. In India if someone says that a particular Tamil word has been borrowed from Sanskrit, the claim would be contested in a scholarly vein. Such a controversy is thoughtfully avoided by the author as he prefers to depend upon the verdict of the European linguists and the reputed dictionaries with regard to the Arabic origin of the words.

The words selected for this book pertain to Alchemy, Amenities, Amusement and Entertainment, Animal Kingdom, Astronomy, Clothing, Drinks, Fruit and Vegetables, History, Mathematics, Science, Seasonings, Sweets, Trade, Utensils, and Miscellaneous Items.

The genre of the book is history and etymology. The quality of the book can be summed up in two phrases taken from the book itself – concentrated erudition, (p.14) and excellent exposition (p.175). The standard of scholarship is such that the author finds fault with Oxford English Dictionary on pages 5, 14, 18, 43, 67, 108, 118, 129 and 161.

All European languages are mentioned but English, French, Spanish and Portuguese are given greater prominence in the book.

The strategy adopted to introduce Arabic words having a bearing upon the European life-style and habits is in the form of a dialogue. Plato’s Dialogues may have given the author the inspiration. Dr V. Abdur Rahim has made use of two characters. To champion the cause of Arabic, a character with an Arabic name is projected. Ahmed is suggestive because he praises Arabic. I don’t know why the name Eric has been selected. He is a Christian and is representatively European. The two characters are not wooden pieces. The author has lent them realism. They agree, and they disagree. One evinces interest, the other satisfies curiosity. One appreciates and encourages the other. Eric objects that Chaucer is being quoted often and complains. “You seem to assign all good things to Arabic.” (P. 78) This will be a typical reaction of a European reader whom Eric represents. Ahmed is surprised at Eric’s knowledge of ‘bastard’ and ‘saffron’ (p.88) Eric’s remark, ‘We might say ‘an apkin’ instead of ‘a napkin’, (P. 81) underpins his individuality. The following extracts make the characters vivid and real.

Eric : Scarlet is a colour.
Ahmed: It was a fabric before it was a colour. (p. 64)
Eric: Are there any more fabrics of Arabic origin?
Ahmed: Let me think. .. Yes, there is ‘atlas’ (P. 69)

These exchanges are lively and show that Eric triggers the memory of Ahmed to recall more and more Arabic words. Eric asserts vigorously at one time that Ahmed is wrong (p. 47) but Ahmed with his superior scholarship makes Eric eat the humble pie. On p.52 Ahmed forgets about ‘tare’ and in this there is a touch of realism. The dialogue makes the transition from one topic to another smooth. Sometimes it is matter-of-fact like “What is your next word?” (p. 9) or ‘What next?’ (p. 10). Sometimes it is poetical. “We have been soaring high into the heavens for quite sometime. Shall we come down to earth now?” (p.16) “Shall we now move to another domain?” (p. 19) “Now let us get up from the quilted cushion and recline on a sofa.” (p. 22)

It is Eric who holds his head and suffers from headache (p.24). It is Eric who feels drowsy (p 101) and shows his love for Shakespeare by using his phrase ‘drowsy sleep’. The reader of the book will feel neither headache nor drowsiness because the book is so absorbing.

It is because Eric gets a cable and he has to leave, the book comes to a close.

The transition from chapter to chapter is well-managed through the device of the dialogue. Management of the dialogue, which lasts for two days, points to the potential of a playwright in the author. He presents a dictionary of a comparative vocabulary through the medium of a drama!

Some aspects of the book deserve special mention. The first aspect is that it is a highly informative book. Some pieces of information culled from the book are presented hereunder:

a) Europe adopted the Arabic system of enumeration in the 9th century.
b) Jiva (Sanskrit) refers to the chord of an arc.
c) Greek has no /sh/a voiceless palato – alveolar fricative
d) Musa is the botanical name of the banana.
e) A cat with a striped coat is called a tabby cat.
f) Qahwa meant loss of appetite.
g) Fulano, zutano mangano are Spanish substitutes for Tom, Dick and Harry
h) Scarlet was a fabric first and then it became a colour.
i) Alcohol meant a powder first and then it stood for a liquid.

The second aspect of the book is that it contains profoundly philosophical observations on language per se.

A few observations are given below:

a) Languages play with words and their meanings. And history is their playmate. (p. 25)
b) Language is a powerful instrument of change; it can make and mar words, elevate or debase their meanings, turn them beautiful or ugly. (p.52)
c) Language is a faithful record of human civilization. (p. 109)
d) Words are not born with their meanings inscribed on their foreheads. They are in constant change i.e. their forms, their sounds, their meanings. (p.115)

The third aspect of the book is the quotations which are found scattered throughout the book. The vast erudition of the author is reflected in them. Their appropriateness is a matter of marvel. The diversity of the branches of learning from which passages are taken out for illustration leaves the reader awe-struck. The learned doctor has drawn on the books he read as a student of the Intermediate class and of the BA (Hons.) Degree course. There are certain books quoted which are centuries old. The quotations are given in their original spelling without modernising them. A reflection on the scale of hard work put into the collection of the extracts and the number of years spent in the collection overwhelms a grateful reader and he is obliged to exclaim: Here is God’s plenty. Perhaps this is the fruit of knowledge blessed with a rich yield.

The fourth aspect is that information furnished in the book is spiced with pun, witticism, and a sense of humour. In Arabic ‘ban’ is the name of a tree; Eric wants to ban the ban. With regard to the relationship between ‘check’ and ‘chess’ the comment is ‘we may call them ‘Arabic twins’ in line with ‘Siamese twins’ (P. 30) The English looked at the bright side of ‘check’. The French on the other hard looked at the dark side of ‘check’ (p.31) The richness of English lies in its diversity.” (p. 137) One cannot help smiling to oneself while reading a sentence like, ‘I am going to San Khose in Khumino and coming back in Khulio’ which means , ‘I am going to San Jose in June and coming back in July.’ (p. 101) Eric says about ‘alfisfisah’, “It has shrunk considerably on arrival in Europe.” Ahmed agrees: May be due to the cold weather. (p 147)

The fifth aspect is that, even though the author hides himself behind the two characters – Ahmed and Eric – he has created, he unmasks himself here and there. “Fickleness, thy name is language.” (P. 52) “French is the great trimmer of words.” (p. 53, 92) While discussing the colours azure and crimson, the author waxes eloquent and grows lyrical.

A surprising but pleasant element in the book is the discussion on the etymology of ‘assassinate’. The author convincingly questions the veracity of the widely held view that the verb is derived from ‘hashish’. (pp 178-180) I read somewhere that the verb is derived from asas (alif-seen-alif-seen) – going back to basics or fundamentals. A fundamentalist who has lost his sense of balance will resort to such a fatal violence.

According to the author, the word ‘hazard’ is from Arabic al-zahr meaning dice. It became ‘azar in Spanish where it means unfortunate card or throw at dice, unforeseen disaster, accident, disappointment. The following extract questions this etymology.

F. T. Wood says, “The verb to hazard takes us back to the beleaguering of the castle of Hasart in the late 13th century. To while away the time they spent waiting for the fortress to surrender, the besieging troops invented a new game of chance which they called after the place itself – hazard. By a natural and inevitable extension of meaning a hazard came to signify a risk, and later a verb was formed from the same root.” (An outline History of the English Language, 2nd edition, p. 87)

Correctness seems to be the ideal of the author. The book is free from errors by and large. However, a few inadvertent errors or omissions detected are given below:

a) ‘Beyond a shadow of a doubt’ p. 2. The second ‘a’ is unnecessary
b) Russian term for ‘checkmate’ is given (p. 32) but the Russian term for ‘chess’ is not given.(p. 29)
c) Reference to the use of abariq in the Qur’ān is given (p. 24) Reference to the use of qintar is not given.
d) A French sentence on p. 47 does not have English translation.
e) On p. 64 the use of the words ‘later’ and ‘and’ creates confusion. Burke (1729-1797) came before Keats (1795-1821) but Shakespeare (1564-1616) came before Burke. Shakespeare’s use of ‘scarlet’ seems to go against the contention of ‘Ahmed.’
f) On p. 158, Mecca is used with a small ‘m’. Should it not be a capital ‘M’?
This is just petty cavilling. The book is monumental. The possession of this book will speak volumes about the level of literacy and the quality of literary taste of any person or place. It is a book on the civilizing influence of Arabic which India and the world need to know.

Radiance Viewsweekly, Monday 6th Jul 2009

http://www.radianceweekly.com/163/3924/CIRCUMCISION-OR-ATTEMPT-TO-MURDER/2009-06-21/Book-Review/Story-Detail/Europe-Speaks-Arabic.html

எஸ்.எஸ்.எல்.சி. / மெட்ரிக் தேர்வு முடிவுகள் 2010

எஸ்.எஸ்.எல்.சி. / மெட்ரிக் தேர்வு முடிவுகள் 2010


மெட்ரிக்


அரபி


ஹாஜரா,
கிரசெண்ட் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
நாகூர் ( 96 )

சி.எம். முகமது ஆதில்
சேது மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
குற்றாலம் ( 96 )

எஸ்.ஏ.கே. சித்தீக் முஷ்பிகா (96)
செண்டிரல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
காயல்பட்டினம்


உர்தூ

வி. நஜீனா மெரீன் ( 97 )
அல் அமீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
திருப்பத்தூர்

ஏ ஷாமா அப்ரோஷ்
ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளி
வாணியம்பாடி
திருப்பத்தூர் ( 97 )

வி. முஹம்மது இனாமுல்லா
டி.அப்துல் வாகித் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
ஆம்பூர் ( 96 )


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள்

1. மேலப்பள்ளிவாசல் மகளிர் மேல்நிலைப்பள்ளி
இளையான்குடி

மெட்ரிக் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்

1. ஆசாத் மெட்ரிக் பள்ளி
காரைக்குடி

Saturday, June 26, 2010

சங்கத்தமிழ் அனைத்தும் தா !

சங்கத்தமிழ் அனைத்தும் தா !
1. எங்கள் தமிழ் தங்கத் தமிழ் சங்கைத் தமிழைச் சங்கத் தமிழால் அளக்கவா ?
2. பொங்கும் புகழ் தங்கும் எழில் மங்காதிலங்கும் மங்கைத் தமிழை விளக்கவா ?
3. ஆண்டவன்தன் ஆளுமையை அறிவிக்க வேண்டி
4. மானுடத்தைப் புவியிதனில் படைத்துவிட்டு, மொழிவதற்கு
5. நாமணக்கும் தேமதுரத் தீந்தமிழைத் தோற்றுவித்து
6. மாந்திரினம் மாந்துதற்குப் பொழிந்து உவந்தான் !
7. இறைமூலமாய் நிறைமூலமாக வந்த தமிழமிழ்தை முதல் மனிதர் மொழிந்து உவந்தார் !
8. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே உயர் தமிழ்ச் செம்மொழியைக்
9. கற்பனை தாண்டிக் கருவாய்ப் படைத்த பேரிறைவா !
10. முதல் தாய் தாலசைத்து இசைத்த தாலாட்டு எங்ஙனம் இருந்தது?
11. முதல் தாய் பால் குடித்து வளர்ந்த மழலைகள் எம்மொழி மொழிந்தனர் ?
12. அன்றலர்ந்து நின்று வளர்ந்து மறைந்துபோன குறையில்லாச் செல்வங்களை எடுத்துத் தா !
13. முந்தைத் தமிழ் மொத்தமும் தா ! சங்கத்தமிழ் அனைத்தும் தா !
14. சேதுக்கரையோரம் சுந்தரர் ஷீது நபி சிறு நடையிட்ட போதில்
15. செழுந்தமிழில் சிந்திய எண்ணச் சிதறல்கள் சலித்து எடுத்துத்தா !
16. ஏதோ நடந்த பிழையின் ஏதுவாய், தீதறுத்த பிரளய நேரம்
17. ஏந்தலர் நூஹூ நபி எனும் முதல் கப்பலோட்டிய தமிழர் தம் நாவாயில்
18. எடுத்துச் சென்ற இணையில்லா இலக்கியக் குவியலை மீட்டெடுத்துத்தா !
19. இலக்கணத் தந்தை தொல்காப்பியர் கற்றுணர்ந்த இலக்கியங்கள்;
20. குமரிக்கண்டம் அழிவோடு எடுத்துச் சென்ற அறிவுக் கருவூலங்கள்;
21. இந்துமாக்கடலின் ஆழத்தில், ஆணிமுத்தும் வலம்புரிச் சங்கும் பவளமும்
22. சங்கமித்துப் பதிந்து கிடக்கும் – அதை அள்ளி வந்து தா !
23. சிந்துவெளி பரப்பினிலே எதிரொலித்த தீந்தமிழ்ப் பாடல்கள்;
24. முத்தமிழில் சிறந்திருந்த நாடகத்தமிழ் ஆவணங்கள்; மறைந்ததெங்கே ?
25. மொத்தமாக அழிந்துபோன கருவூலத்தைச் சிந்தாமல் திருப்பித்தா !
26. சமயம் எல்லாம் படைத்தளித்த அலங்கார அணிகலன்கள்;
27. சமயம் தாண்டிய விரல்கள் சமைத்தளித்த ஒயில் நகைகள்;
28. அணிந்த அவள் எழில் கூட்டும் வளமைக்கிங்கே இணையே இல்லை.
29. சல்லி வேராய்ப் பன்மொழிகள்; அதைத்தாங்கும் ஆணிவேர் அன்னைத் தமிழ்மொழி !
30. எம்மொழிக்கும் தமிழே அன்னை; எம்மொழிக்கும் எம்மொழியே மேன்மை !
31. கிடைத்தளவே உயர் தனிச் செம்மொழித் தகுதி கொடுத்திடின்,
32. படைத்துள யாவும் கிடைத்திடின் அன்னைத் தமிழுக்கு என்ன பெயரிடுவோம் !
- ஆலிம் செல்வன் .

முகவரி :
S.N.M. AHAMED SAMSUDEEN,
P.O.BOX NO : 1349,
DEIRA, DUBAI, U.A.E.
EMAIL :asdjf73@gmail.com

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கனிவான பார்வைக்கு

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கனிவான பார்வைக்கு

செம்மொழி மாநாட்டுப் பாடல் கேட்டேன். மிக இனிமையாக அமைந்துள்ளது.

இதுவரை யாராவது இதனை முதல்வரின் பார்வைக்கு எடுத்து வைத்திருக்கலாம். இல்லையெனில், என் மனதில்பட்ட ஒரு சிறு மாற்றத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற சொற்றொடர் ’யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என ஒலிக்கிறது.

இது மாற்றியமைக்கப்பெறின், காலப்பெட்டகமாகப்போகும் கலைஞரின் இந்த பாடல் மேலும் மிளிரும் என எண்ணுகிறேன்.

அன்புடன்
அப்துல் கதீம்
(யு.ஏ.இ. துபையிலிருந்து)

வலிகளை அகற்றும் உணவு முறை

வலிகளை அகற்றும் உணவு முறை
(சித்த மருத்துவம்)



மூட்டு வலி நீங்க...

(முழங்கை, முழங்கால், கணுக்கால்)

முடக்கத்தான் கீரையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். ஆரம்பம் என்றால் உடனே குணம் கிடைக்கும். நாள்பட்ட வலி என்றால் கண்டிப்பாக 40 நாட்கள் சாப்பிட வேண்டும். வலியிலிருந்து விடுபடுவது உறுதி.

சாப்பிடும் விதம்

முடக்கத்தான் கீரையில் உள்ள காய், இலைகளைப் பறித்து நன்கு சுத்தம் செய்து, கழுவி அரைத்து வைத்துக் கொள்ளலாம். பிரிஜ்ஜில் வைத்துக் கொண்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி சாப்பிடலாம்.

சுத்தம் செய்தபின் தண்­ர் வடியும் வரை நிழலில் விரித்து காய வைத்து, மிக்ஸ’யில் நைஸாக அடித்து சலித்துக் கொள்ளவும். இதை பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவும். தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குணமாகும்.
நன்றாக குணமான பிறகு, வாரம் 3 முறை முடக்கத்தான் கீரையை உட்கொண்டால் மீண்டும் வலி வராது.

தோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். நம் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 நாட்கள் முடக்கத்தான் கீரை தோசை சாப்பிடுவார்கள். நாமும் அதைக் கடைப்பிடித்தால் நமக்கு மூட்டு வலிகள் வராது.

குறுக்கு வலி நீங்க ...

நல்லெண்ணெய்யை வலிக்கும் இடத்தில் தேய்த்து விட்டால் குறுக்கு வலி குணமாகும்.

யோகாசனங்களில் தனுராசனம் என்ற ஆசனம் இருக்கிறது. இந்த தனுராசனம் செய்யும் பயிற்சியை பழகிக் கொள்ள வேண்டும். இது குறுக்கு வலியை குணப்படுத்தும்.

நல்லெண்ணெய்யை காய வைத்து, சூடேறியதும் இதில் 10 பல் பூண்டுகளைப் போட்டு, பூண்டுகள் சிவந்ததும் இறக்கி ஆற வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெய்யை வலிக்கின்ற இடத்தில் நன்றாக தேய்த்துவிட வேண்டும். 3 மணி நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்க வேண்டும். இவ்விதம் 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் குறுக்கு வலி குணமாகும்.

சாப்பிடும் விதம்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 பூண்டுகளை சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

எலுமிச்சைச் சாற்றில் சிறிது உப்பு போட்டு தினமும் குடித்து வந்தால் குணமாகும்.

பச்சை உருளைக்கிழங்கை சாப்பிட்டு வர வேண்டும். வலிக்கும் இடத்தில் பச்சை உருளைக் கிழங்கை அரைத்துப் பற்று போடவேண்டும்.

குறுக்கு வலி அதிகமாக இருக்கும் நேரத்தில் கொழுப்புச்சத்துள்ள உணவுகளை தவிர்த்து, பச்சைக் காய்கறிகள், சாலட் சாப்பிடலாம். எண்ணெய் சேர்க்காமல் வேக வைத்த காய்கறிகளையும் சாப்பிடலாம்.

முழங்கால் வலி நீங்க ...

நல்லெண்ணெய்யை வலிக்கும் இடத்தில் தேய்த்து விட்டால் முழங்கால் வலி குணமாகும்.

சாப்பிடும் விதம்

பச்சை உருளைக்கிழங்கை 4 விரல்கள் அளவு சாப்பிடலாம்.

ஒரு சிறிய உருளைக்கிழங்கை கழுவி மிக்ஸ’யில் போட்டு சாறு எடுத்துக் குடிக்கலாம்.

ஒரு உருளைக்கிழங்கை சாலட் செய்து சாப்பிடலாம்.

லச்சக்கொட்டைக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி, குறுக்கு வலி குணமாகும்.
இந்தக்கீரையை கழுவி, நறுக்கி, பருப்பு போட்டு பொரியல் செய்து சாப்பிடலாம். பொடியாக நறுக்கி கொத்துக்கறியுடன் போட்டு சமைத்துச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

மூட்டு வலிக்கு முட்டைக்கோஸ் சாற்றை அருந்தலாம். வலி ஏற்பட்டுள்ள மூட்டுக்களில் புதிய முட்டைக்கோஸ் இலைகளை அரைத்துப் பற்றுப் போடலாம்.

தலைவலி நீங்க ...

பாத்திரத்தில் தண்­ர் கொதிக்க வைத்து அரை தேக்கரண்டி விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சன் போட்டு, பெட்ஷ“ட்டால் மூடி ஆவி பிடித்தால் தலைவலி பறந்துவிடும்.

சாப்பிடும் விதம்

அரை டம்ளர் வெந்நீரில், அரை எலுமிச்சம்பழம் பிழிந்து 2 கல் உப்பு போட்டு குடித்தால் தலைவலி குணமாகும்.
காய்ச்சலும் தலைவலியும் சேர்த்து வந்தால் கடுகை அரைத்து உள்ளங்காலில் பற்றுப் போட்டால் தலைவலி, காய்ச்சல் நீங்கி விடும்.

நீண்ட நாட்களாக ஒற்றைத் தலைவலி தொல்லை இருந்தால் தினமும் 1 அவுன்ஸ் திராட்சை பழரசம் (50 மில்லி) குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.

நொச்சி இலையை வதக்கி அதில் சிறிதளவு உப்பைத் தூவி இளஞ்சூட்டில் நெற்றியில் பற்றுப் போட்டால் குணமாகும்.

காலில் வீக்கம் நீங்க ...

நல்லெண்ணெய்யை வலிக்கும் இடத்தில் தேய்த்து விட்டால் காலில் வீக்கம் குணமாகும்.

சாப்பிடும் விதம்

தூதுவளை இலைகளையும், நற்சுங்கள் இலைகளையும் எடுத்து, சிறிது தண்­ர் விட்டு அரைத்து அரைத்த விழுதை எடுத்து சுண்டக்காய் அளவில் மாத்திரை போல் செய்து நிழலில் உலர்த்தி ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும். 3 மாத்திரைகளை 1 டம்ளர் பசும்பாலில் கரைத்து, இத்துடன் கற்கண்டு சேர்த்து 1 வாரம் வரை 2 வேளைகள் குடிக்க வேண்டும். இவ்விதம் செய்தால் கால் வீக்கம் குணமாகும்.

அமிரகம்/வளைகுடாவிருந்து குறைந்த செலவில் இந்திய தொலைபேசிக்கு பேச

அமிரகம்/வளைகுடாவிருந்து குறைந்த செலவில் இந்திய தொலைபேசிக்கு பேச ஓர் காலிங்கார்டு உள்ளது. இது Mobileக்கு 10மணி நேரமும், Landlineக்கு 6மணி நேரமும் பேசலாம். 40திரஹம் மட்டுமே.


தொடர்புக்கு - 056 1434481

E-Mail - tbcgroup@hotmail.com

Friday, June 25, 2010

எங்கள் பேரன்பிற்குரிய தமிழகத் துணை முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு,

எங்கள் பேரன்பிற்குரிய தமிழகத் துணை முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு,

உங்கள் சமூகப் பணி மென்மேலும் சிறக்க எங்கள் வாழ்த்துக்கள்.

கடந்த பல ஆண்டுகளாக வெளி நாட்டில் பணி புரிந்து, வாழ்ந்து வரும் J. Iqbal Ahmed குவைத்திலிருந்து விடுக்கும் கோரிக்கை:

ஐயா, லட்சக் கணக்கான தமிழர்கள் தங்கள் குடும்பத்தை பிரிந்து வளைகுடா நாடுகளில் பணி புரிந்து வருகிறார்கள். இவர்களில் கணிசமானவர்கள் (வீட்டு டிரைவர், வீட்டு வேலை, கட்டிட வேலை) சொற்ப வருவாய் பெற்று, பல இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். கடந்த ஏப்ரல் 22 அன்று குவைத்தில் உள்ள இந்திய தூதரக வாசலில் வைத்து மயிலாடுதுறையைச் சேர்ந்த மாரியப்பன் என்ற இளைஞரை அவரது குவைத் முதலாளி ( இரும்பு கம்பியால்) அடித்து, போலிஸில் பிடித்துக் கொடுத்துள்ளார். இந்த செய்தி அரப் டைம்ஸ் என்ற நாளிதழில் (23.4.2010) வந்துள்ளது. அவரது நிலை இன்று வரை சரியாகத் தெரியவில்லை. இதை, போல் ஏராளமான சம்பவங்கள் அன்றாடம் நடக்கின்றன. இந்த oடுக்கப் பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை நிலை நாட்டிட, அவர்களின் நலனுக்காக தமிழக அரசு தனி அமைச்சகம் அமைத்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.(கேரளா மாநில அரசு வெளிநாடு வாழ் கேரள மக்களுக்காக தனி அமைச்சகம் அமைத்து பல ஆண்டுகளாக பணி ஆற்றி வருகிறது)

இதை கோவையில் நடக்கும் செம்மொழி மாநாட்டில் முதலமைச்சரிடம் Oப்புதல் பெற்று தாங்கள் அறிவிக்க வேண்டும் என்று இந்த நல்ல நேரத்தில் கேட்டுக் கொள்கிறோம்.

DeputyCM web link

இப்படிக்கு, வெளிநாடு வாழ் தமிழன்.
J. Iqbal Ahmed
Kuwait
Mobile +965 97823446

நம் மொழி தமிழ்!

நம் மொழி தமிழ்!

-சுதா அறிவழகன்

திராவிட மொழிக் குடும்பத்தின் மூல மொழி தமிழ். திராவிடக் குடும்பத்தின் முதன்மையான மொழி, மூத்த மொழி, திராவிட மொழிகளின் தாய் மொழி - நம் மொழியாம் தமிழ்.

இந்த மொழிக் கூட்டத்தில் மொத்தம் 26 மொழிகள். அத்தனைக்கும் மூல மொழியாக நம் தாய் மொழியான தமிழ் இருப்பது பெருமைக்குரிய ஒன்று. இவை தவிர 35 சிறு மொழிக் கூட்டத்திற்கும் தமிழே மூல மொழியாக இருப்பது வியப்புக்குரியது.

இன்று தனிச் சிறப்புடன் கூடிய ஒரு மொழியாக திகழும் மலையாளம், 9வது நூற்றாண்டு வரை தமிழின் ஒரு 'டயலக்ட்' ஆகத்தான் இருந்து வந்தது -அதாவது மதுரைத் தமிழ், கொங்குத் தமிழ், நெல்லைத் தமிழ் போல. தமிழிலிலிருந்து நேரடியாக பிரிந்த ஒரு மொழிதான் மலையாளம்.

தமிழை மூன்று காலங்களாக ஆய்வாளர்கள் பிரிக்கின்றனர். கி.மு. 300க்கும், 700க்கும் இடைப்பட்ட காலம் பழந்தமிழ்க் காலம் என்றும், 700க்கும், 1600க்கும் இடைப்பட்ட காலத்தை இடைக்காலத் தமிழ் என்றும், 1600 முதல் இன்று வரையிலான காலத்தை நவீன தமிழ் காலம் என்றும் ஆய்வாளர்கள்
வகைப்படுத்துகின்றனர்.

தமிழ் என்ற பெயர் எப்போது முதல் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு தெளிவான ஆதாரம் இல்லை. இருப்பினும் கி.மு. முதலாம் நூற்றாண்டில் தமிழ் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதாக செய்திகள் உள்ளன.

செம்மொழித் தமிழ்...

உலகச் செம்மொழிகளில் ஒன்றாக தமிழ் திகழ்கிறது. செம்மொழி என்பது ஒரு அடையாளம் அல்ல, மாறாக அது ஒரு மொழியின் செம்மையை, சீரை, சிறப்பை, செழுமையை வெளிச்சம் போட்டுக் காட்ட உதவுகிறது.

மிகப் பாரம்பரியமான, பழமையான இலக்கியத்தைக் கொண்ட மொழியாக இருக்க வேண்டும். சுயம் இருக்க வேண்டும், வேறொரு பாரம்பரியத்தின் நிழல் அந்த மொழியின் மீது படிந்திருக்கக் கூடாது. அப்படிப்பட்ட மொழியே செம்மொழி என கூறுகிறார் மொழியியல் வல்லுநர் ஜார்ஜ் ஹார்ட்.

இன்று உலகளவில் ஆயிரக்கணக்கான மொழிக் கூட்டங்கள் இருந்தாலும் பேச்சளவிலும், எழுத்தளவிலும் உயிர்ப்புடன் இருப்பது சில நூறு மொழிகள் தான். அதிலும் பழமை வாய்ந்ததாக, பாரம்பரியம் வாய்ந்ததாக, சிறப்பு வாய்ந்ததாக, தங்களுக்கென்று சுயத்தைக் கொண்ட மொழிகள் வெகு சிலதான். அதில் ஒன்று நம் செம்மொழி தமிழ்.

இலக்கணத்திலும், இலக்கியத்திலும் சிறந்த மொழிகளுக்கே இந்த சிறப்பு கிடைக்கிறது. சுமேரிய மொழி, ஆதி எகிப்திய மொழி, ஆதி பாபிலோனிய மொழி, ஹீப்ரூ, சீன மொழி, கிரேக்கம், சமஸ்கிருதம், தமிழ், லத்தீன், மண்டாயிக், சிரியாக், ஆர்மீனியன், பெர்சியன் ஆகியவற்றை செம்மொழிகளாக உலகம் கண்டிருக்கிறது.

ஆனால் இந்த சிறிய மொழிக் கூட்டத்தில் இன்று உலக அளவில் வலுவான வரலாற்றுடன், மிக வீரியமான உயிர்ப்புடன் கூடிய ஒரே மொழியாக தமிழ் மட்டுமே திகழ்கிறது என்பது நிஜம், அது தமிழுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய பெருமை என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழ் தந்த தொல்காப்பியத்திற்கு ஈடு இணையே இல்லை என்பது பல்வேறு செம்மொழிகளை ஆய்வு செய்தவர்கள் அளித்துள்ள தீர்ப்பு.

செந்தமிழ் (செம்மொழியாகிய தமிழ்) எனுஞ்சொல் தமிழில் கிடைத்துள்ள மூலமுதல் நூலான, மூவாயிரம் ஆண்டுப் பழைய தொல்காப்பியத்திலேயே இடம் பெற்றுள்ளது.

தமிழ் எனும் சொல்லுக்குக் கிபி 10ஆம் நூற்றாண்டில் எழுந்த பிங்கல நிகண்டு, 'இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்' என்று பொருள் கூறுகிறது.

செந்தமிழ் என்பதற்குக் 'கலப்பற்ற தூயதமிழ்' என்று பொருள் தருகிறது தமிழ்ப் பேரகராதி.

செந்தமிழ் எனுஞ் சொல் உணர்வு நிலையில் இலக்கண வரம்பை வற்புறுத்துகிறது. செயல் நிலையில் செம்மொழி ஆக்கத்தை வற்புறுத்துகிறது. மதிப்பீட்டு நிலையில், இலக்கணத்தை வற்புறுத்தாவிடில் கிளைமொழிகள் தோன்றிப் புதுமொழிகளாக மாறும் என எச்சரிக்கிறது என்று மொழியியல் அறிஞர் செ.வை.சண்முகம் விளக்குகிறார்.

செம்மொழி எனுஞ் சொல்லை, அகநானூற்றின் 349 ஆம் பாடல் 'நடுநிலை தவறாத மொழி' எனும் பொருளில் ஆண்டுள்ளது.

தமிழ் எம்மொழிக்கும் தாழ்ந்து வளையாது தலைநிமிர்ந்து நின்று தன் தனித்தன்மையைக் காத்து, தன்னை அணைத்து அழிக்க வந்த வடமொழியையும் வலுவிழக்கச் செய்து வாழ்ந்து வளர்ந்துவரும் மொழியாகும். ஆங்கிலம் லத்தீன் மொழிக்குக் கடன்பட்டிருப்பது போலவே தமிழ்மொழியும் சமஸ்கிருதத்திற்குக் கடன்பட்டிருப்பதாகக் கருதுவது அறவே பொருந்தாது. பொருள் விளக்கத்தைச் சாகவிடாமல் சொற்களைக் கைவிடுவது ஆங்கிலத்திற்கு இயலாது. ஆனால், சமற்கிருதச் சொற்களுக்கு ஈடான சொற்செல்வங்களைத் தமிழ் அளவின்றிப் பெற்றுள்ளது. இது, முனைவர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் ஆய்வு முடிவு.

தென்னாட்டின்கண் சிறந்தொளிராநின்ற அமிழ்தினுமினிய தமிழ்மொழி, எவ்வாற்றான் ஆராய்ந்த வழியும், உயர்தனிச் செம்மொழியே ஆம் என்பது உறுதி. இவ்வளவு உயர்வும் சிறப்பும் வாய்ந்த அருமைத் தமிழ்மொழியை உள்நாட்டுப் புன்மொழிகளோடு ஒருங்கெண்ணுதல் தவிர்த்து, வடநாட்டு உயர்தனிச் செம்மொழி சமற்கிருதம் எனக் கொண்டாற்போலத் தென்னாட்டு உயர்தனிச் செம்மொழி தமிழெனக் கொண்டு புகுதலே ஏற்புடையதாம். இது, 1887இல், சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் அப்போதைய தமிழ்த் துறைப் பேராசிரியரும் வடமொழி வல்லுநருமாகிய வீ.கோ.சூரிய நாராயண சாத்திரி என்ற பரிதிமாற் கலைஞர் முடிவு.

பிறமொழியின் துணையின்றித் தனித்து இயங்கும் பேராற்றல் கொண்ட தமிழின் சிறப்பு வியப்பை அளிப்பதாகும். தமிழ், செய்யுள் வடிவிலும் உரைநடையிலும், கிரேக்க மொழிச் செய்யுள்களைக் காட்டிலும் தெளிவுடையதாகவும் திட்பமுடையதாகவும் கருத்தாழம் உடையதாகவும் விளங்குகிறது. தமிழ்மொழி நூல்மரபிலும் பேச்சு வழக்கிலும் இலத்தின் மொழியைக் காட்டிலும் மிகுந்த சொல்வளம் கொண்டது. இது, முனைவர் வின்சுலோ அவர்களின் முடிவு.

தமிழ்மொழியைச் செவ்வியல் மொழியாக உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் பழந்தமிழர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். அவர்களின் இம்முயற்சி, கிரேக்கர்களுடன் தமிழர்கள் தொடர்பு கொள்வதற்கு முன்னரே ஏற்பட்டுள்ளது. இது, கில்பர்ட்டு சிலேடர் என்ற மொழியறிஞரின் முடிவு.

ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள செனகல் நாட்டின் தாக்கர் பல்கலைக் கழகம் முதன்முதலில் தமிழ்மொழியைச் செவ்வியல் மொழி என்று முடிவு இயற்றி ஏற்றுக் கொண்டது.

தமிழ்நாட்டில், அண்ணர்மலை பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம். திருநெல்வேலியிலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியன தமிழைச் செம்மொழி என்று தீர்மானம் இயற்றியுள்ளன.

தனிச் சிறப்புக்கு சங்க இலக்கியங்கள்...

தொல்காப்பியம் மட்டுமல்லாமல் தமிழுக்கு மணி மகுடமாக விளங்குபவை சங்க கால இலக்கியங்கள். அவற்றில் பல நம்மிடையே இன்று இல்லை. காலம் அவற்றை அழித்து விட்டது. நமது கைக்குக் கிடைத்துள்ள சில நூல்கள் ஒரு பாணை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல தமிழின் தனிச் சிறப்பை வெளிக்காட்ட உதவுகிறது.

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, அக நானூறு, புற நானூறு, நற்றினை, ஐங்குறுநூறு, பரிபாடல் ஆகியவை அவற்றில் சில. இக்கால கட்டத்தில் தமிழ் இலக்கியம் மிக செழுமையான நிலையில் இருந்தது. சங்க கால இலக்கியம், தமிழின் பொற்காலம் என்பதில் சந்தேகம் இல்லை.

அதேபோல தமிழின் தலை சிறந்த அடையாளங்களில் ஒன்று திருக்குறள். தமிழ் என்ற வார்த்தை ஒரு இடத்தில் கூட வராமல், உலகின் எந்த மூலையில் இருப்பவருக்கும் பொருந்தும் வகையிலான இந்த அரும் படைப்பு, தமிழுக்கு மட்டும் சொந்தமானதல்ல, உலகுக்கே பொதுவானது. அதனால்தான் குறளை உலகப் பொது மறையாக போற்றுகிறது இலக்கிய உலகம்.

கி.பி. 3வது நூற்றாண்டில் சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இரட்டை காப்பியங்களைக் கண்டது தமிழ். தமிழின் ராமாயணம், மகாபாரதம் என இதைச் சொல்லலாம். அதேபோல கம்ப ராமாயணமும். தமிழின் அபாரமான படைப்புகளில் இதுவும் ஒன்று.

வால்மீகியின் ராயாணத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த படைப்பை கம்பர் படைத்திருந்தாலும், அதன் சாயல் கொஞ்சம் கூட இல்லாமல் தனது சுய படைப்பு போல இதை அமைத்திருப்பது மிக மிக வியப்புக்குரியது. அது கம்பரின் திறமையா அல்லது தமிழின் செழுமையா என்பதே ஒரு பட்டிமன்றத் தலைப்புக்குரியது. அதனால்தான் இன்றளவும் கம்ப ராமாயாணம் விவாதப் பொருளாக பட்டி தொட்டியெங்கும் வலம் வந்து கொணடிருக்கிறது.

பரவசப்படுத்தும் பக்தி இலக்கியம்

பக்தி இலக்கியத்திலும் தமிழுக்கு தனிச் சிறப்பு உண்டு. குறிப்பாக நாயன்மார் இலக்கியம் தமிழுக்கு கிடைத்த இன்னொரு மகுடம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் நான்கு தலை சிறந்த நாயன்மார்கள் ஆவர்.

அதேபோல 12 ஆழ்வார்கள் தமிழுக்கு செய்த சேவை மறக்க முடியாதது. அவர்களில் ஆண்டாளும், குலசேகர ஆழ்வாரும் குறிப்பிடத்தகுந்தவர்கள். சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் ஆண்டாள் படைத்த திருப்பாவை தமிழின் தனிச் சிறப்புக்கு அருமையான உதாரணம்.

தமிழுக்கு அருஞ்சேவை புரிந்தவர்களில் உமறுப் புலவரை குறிப்பிடாமல் இருக்க முடியாது. சீறாப்புராணம் என்ற சீரிய காவியத்தைப் படைத்தவர் உமறுப் புலவர். 5000 பாடல்களில் அண்ணல் நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றை அரிய பாடல்கள் மூலம் வடித்துள்ளார் உமறுப் புலவர்.

அதேபோல கிறிஸ்தவ சமுதாயத்தினரின் தாக்கமும் தமிழ் இலக்கியத்தில் விரவிக் கிடக்கிறது. அதிலும் கால்டுவெல், வின்ஸ்லோ, ஜி.யு.போப், பெஸ்கி ஆகியோரின் பங்களிப்பு தமிழுக்கு மிகப் பெரியது. இத்தாலியைச் சேர்ந்த பெஸ்கி படைத்த தேம்பவாணி தமிழின் அரும்பெரும் கவிப் படைப்புகளில் ஒன்றாக ஜொலிக்கிறது.

இப்படி தமிழின் சிறப்புகளையும், அதன் சீரையும், செழுமையையும் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படிப்பட்ட சிறப்புடைய தமிழ், 2004ம் ஆண்டில் செம்மொழியாக அறிவிக்கப்பட்டாலும் கூட, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அது செம்மொழியாக பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கி விட்டது என்பதே உண்மை.

தமிழின் பிற சிறப்புகள்

- தமிழ் இலக்கியம் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பெரும் வரலாறு கொண்டது.

- கி.மு. முதலாம் நூற்றாண்டு மற்றும் கி.மு. 2ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டுக்கள் எகிப்திலும், தாய்லாந்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

- யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பதிவேட்டில் கடந்த 1997 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு ஓலைச் சுவடிகள் அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன. அந்த இரண்டுமே தமிழ் சுவடிகள் என்பது பெருமைக்குரியதாகும்.

- இந்திய தொல்பொருள் துறை இந்தியாவில் இதுவரை கண்டுபிடித்துள்ள கல்வெட்டுக்களில் 55 சதவீதத்திற்கும் மேற்பட்டவை தமிழ் கல்வெட்டுக்கள் ஆகும். அதாவது 55,000 கல்வெட்டுக்கள் தமிழ் கல்வெட்டுக்கள்.

- தமிழில் கிட்டத்தட்ட 22 வட்டார வழக்குகள் உள்ளன. ஆதி திராவிடர், ஐயர், ஐயங்கார், அரவா, பருகண்டி, கசுவா, கொங்கர், கொரவா, கொர்சி, மதராஸி, பரிகலா, பாட்டு பாஷை, இலங்கை தமிழ், மலேயா தமிழ், பர்மா தமிழ், தெனாப்பிரிக்கா தமிழ், திகாலு, அரிஜன், சங்கேதி, கெப்பார், மதுரை, திருநெல்வேலி, கொங்கு மற்றும் குமரி ஆகியவையே அவை.

- உலகின் அனைத்துக் கண்டங்களிலும் விரவிப் பரவிக் கிடக்கிறது தமிழ்.

- இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் உள்ளது. மலேசியா, மொரீஷியஸ், தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, தாய்லாந்து, பர்மா, வியட்நாம், கயானா, பிஜி, சூரினாம், டிரினிடாட் டொபாகோ, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகள், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தமிழர்களும், தமிழும் கணிசமாக உள்ளனர்.

- எத்தகைய மொழிக்கும் ஈடு கொடுக்கக் கூடிய இயல்பும், பாலில் நீர் கலப்பது போல இயைந்து போகும் சிறப்பும் உள்ள மொழி தமிழ்.

இந்தத் தமிழ் செம்மொழியானது கால தாமதம் என்றாலும் இன்றாவது ஆனதே என்ற மகிழ்ச்சியில் உள்ளனர் உலகத் தமிழர்கள். உலகத்தின் தலையாய மொழிகளில் ஒன்றாக திகழும் நம் தாய் மொழிக்கு மாநாடு நடத்துவது மேலும் ஒரு மகுடம் சூட்டுவதற்குச் சமம். எத்தனையோ பெருமைகளை தலையில் சுமந்து நிற்கும் தமிழுக்கு, தமிழக அரசு சூட்டும் இந்த மணிமகுடம் மேலும் ஒரு பெருமையாக அமையட்டும்.

ஓலைச் சுவடிகளில் உருண்டு புரண்ட தமிழ் இன்று கம்ப்யூட்டர் திரைகளில் ஜாலம் காட்டும் காலத்திலும் நளினம் குறையாமல், நவீனம் மறுக்காமல், பாரம்பரியத்திற்குப் பங்கம் வராமல் தொடர்ந்து பரவசம் காட்டி வருவது தமிழுக்குள்ள மகா சிறப்பு.

தமிழால் வாழும் நாம் நம் செம்மொழிக்கு எடுக்கப்படும் விழாவை வாழ்த்துவோம், அக மகிழ்வோம்.

Thanks: Thatstamil.com

HEAT - PREVENTION IS BETTER THAN CURE!!!

HEAT - PREVENTION IS BETTER THAN CURE!!!


While your efforts and work outside the office are essential to the performance and operation of the company, your wellbeing is equally vital, hence, we would highly recommend taking the necessary precautions such as

· Drinking plenty of water
· not to remain under direct sun exposure, try to remain in the shade
· keep your cars well ventilated and aired
· take extra percussions with elders and children
· Do not leave your cell phone or other electronic items in the car exposed to the heat as it is easily flammable
· Please be sure to protect yourself with sunscreen.
· Dress in loose light clothing and avoid tight, air restricting garments.
· wear your sunglasses outside the office in day light to protect your eyes tissue which can be easily damaged by such a heat and sun.
· Try to leave an open bottle of water in your car if you leave it in an un-shaded car park as the evaporated water will counter act the heat impact.
· Do not leave perfumes or lighters in the car as they are flammable.
· Do no leave children or pets in locked unventilated areas such as cars (heat will kill them).
· Do not walk for long times directly under the sun (i.e. wear hat or umbrella).

செம்மொழிப் பாடல் !!!

செம்மொழிப் பாடல் !!!


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்!
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!

செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்

செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

செம்மொழி செம்மொழி - தமிழ் மொழியாம்!

கம்ப நாட்டாழ்வாரும் கவியரசி அவ்வை நல்லாளும்
எம்மதமும் ஏற்ற புகழ்கின்ற
எம்மதமும் ஏற்ற புகழ்கின்ற
எத்தனயோ ஆயிரம் கவதை நெய்வோர் தரும்
புத்தாடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி

செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம் மொழி நம் மொழி - அதுவே

செம்மொழியான - தமிழ் மொழியாம்!
தமிழ் மொழி!
தமிழ் மொழி!
தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

செம்மொழியான - தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

தமிழ் மொழியாம்!
எங்கள் தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
எங்கள் தமிழ் மொழியாம்!

செம்மொழியான - தமிழ் மொழியாம்!
வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!
வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!

செம்மொழியான - தமிழ் மொழியாம்!


இசை - எ.ஆர்.ரஹ்மான்
எழுத்து - கலைஞர் மு.கருணாநதி
பாடியவர்கள் : ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்சங்கர் ராஜா, டி.எம்.சவுந்தரராஜன், பி.சுசீலா, அருணா சாய்ராம், பாம்பே ஜெய்ஸ்ரீ, கார்த்திக், ஹரிணி, சின்மயி, ஹரிகரன், சுவேதா மோகன், ஜி.வி.பிரகாஷ், பென்னி தயள், ஸ்ரீனிவாஸ், விஜய் யேசுதாஸ், டி.எல்.மகாராஜன், நித்யஸ்ரீ, சவும்யா, எம்.ஒய்.அப்துல் கனி, எம்.காஜாமொய்தீன், எஸ்.சாபுமொய்தீன், பி.எல்.கிருஷ்ணன், நரேஷ் அய்யர், குணசேகர், சுருதிஹாசன், சின்ன பொண்ணு, சுசீலா ராமன், ப்ளேஸ், காஷ், ரெஹ்னா ஆகிய 30 பேர்.

திப்பு சுல்தான் 6 ஆயிரம் ராக்கெட்டுகளை ஏவி ஆங்கிலேயர்களை தாக்கியிருக்கிறார். உலகின் முதல் ராக்கெட்டைத் தயாரித்தது இன்றும் நம்மால் மறக்க முடியாத வரலாறு

திப்பு சுல்தான் 6 ஆயிரம் ராக்கெட்டுகளை ஏவி ஆங்கிலேயர்களை தாக்கியிருக்கிறார். உலகின் முதல் ராக்கெட்டைத் தயாரித்தது இன்றும் நம்மால் மறக்க முடியாத வரலாறு.: சிவதாணுப்பிள்ளை

கோவை: குமரிக் கண்டத்தை ஆய்வு செய்யும் பட்சத்தில் உலக வரலாறு தெரிய வரும் என்று பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி, சிவதாணுப்பிள்ளை தெரிவித்தார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், கம்பர் அரங்கில் நேற்று நடந்த அறிவியல் தமிழ் அமர்வில் சிவதாணுப்பிள்ளை பங்கேற்ற பின், தினமலர் இதழுக்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்தது:

தமிழ் மொழி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியா மற்றும் இந்தோனேஷியாவைச் சேர்த்து அமைந்திருந்த லெமூரியா எனும் குமரிக் கண்டத்தில்தான் முதல் மனிதன் தோன்றியிருக்க வேண்டும். இன்றும் இந்தோனேஷியாவில் உள்ள பாலி நகரில் திராவிடக் கலாச்சாரப் பண்புகள் இருப்பதைப் பார்க்க முடியும். நம்மூரில் மறைந்துவிட்ட வழக்கங்கள் கூட அங்கிருப்பது நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.
சிலப்பதிகாரத்தில் குமரிக் கண்டம் மூழ்கியது குறித்த தகவல்கள் காணக்கிடைக்கின்றன. தமிழர்கள் வாழ்ந்த இந்த பூர்விக இடத்தைப் பற்றி நன்கு ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். கடந்த 38 ஆண்டுகளாக, குமரிக் கண்ட ஆய்வுப் பணிகள் நின்றுவிட்டன. நம் கப்பல் படையே இந்த ஆய்வை நடத்த முடியும். அவ்வாறு ஆய்வு நடத்தும் பட்சத்தில் உலகின் வரலாறு தெரியும். நாம் இந்த ஆராய்ச்சியை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும்.

திப்பு சுல்தான் 6 ஆயிரம் ராக்கெட்டுகளை ஏவி ஆங்கிலேயர்களை தாக்கியிருக்கிறார். உலகின் முதல் ராக்கெட்டைத் தயாரித்தது இன்றும் நம்மால் மறக்க முடியாத வரலாறு. ராக்கெட் தயாரிக்கும் பணியை 1983ல் இந்தியா துவக்கிய போது, நாம் உலக அளவில் 20 ஆண்டுகள் பின்தங்கி இருந்தோம். ஆனால் இன்று விண்வெளியில் சர்வதேச அளவில் சாதனை நடத்தியிருக்கிறோம். அதற்கு தமிழரான அப்துல் கலாமுக்கே பெருமைகள் சேரும்.

பிரம்மோஸ் ஏவுகணையை நிலத்திலிருந்து கப்பல் இலக்கைத் தாக்கவும், கப்பலிலிருந்து நிலத்தில் உள்ள இலக்கைத் தாக்கவும், கப்பலிலிருந்து கப்பலில் உள்ள இலக்கைத் தாக்கவும் பயன்படுகிறது. இது செலவு குறைந்த தொழில்நுட்பம். அதே சமயம் துல்லியத் தன்மையும் புதுமைகளையும் கொண்டது.

தமிழ் மொழி சக்தி வாய்ந்த மொழி. பாரதியின் தொலைநோக்குப் பார்வைகள் நம் உணர்வுகளைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. தமிழ் வழியில் படித்தவர்கள் அறிவியல் துறையில் வர வேண்டும். அறிவியல் சிந்தனை அதன் வழி வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமீரகத்தின் தகவல் களஞ்சியம்

அமீரகத்தின் தகவல் களஞ்சியம்

http://www.vkalathur.com/muduvai.php

ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து வந்து அந்நிய நாட்டில் வாழ்கின்றோம். நாம் இங்கு இருந்தாலும் எண்ணங்கள் முழுக்க இந்தியாவையேச் சுற்றி சுற்றி வருவது நிதர்சனம். நம் வீட்டில் என்ன நடக்கிறது என்பதைச் சொந்தங்களிடம் சுகம் விசாரிக்கும் போது தெரிந்து கொள்கிறோம். ஆனால் ஊரில் நடப்பவற்றை... நாட்டில் நடப்பவற்றை எப்படித் தெரிந்து கொள்வது? பேப்பர் படித்துக் கொண்டே நண்பர்களுடன் விவாதித்த விவாதித்த விஷயங்கள் எல்லாம் இப்போது எந்த நிலையில் இரக்கின்றன? இவற்றையெல்லாம் இங்கிருந்து கொண்டு எங்கே கிடைக்கும் என்ற ஆர்வம் நம் அனைவருக்கும் இருக்கும். வளைகுடாவில் வாழும் தமிழர்களின் இந்த வாட்டத்தைப் போக்குவதற்காகவே தமிழ்சசேவை புரிந்துவருகிறார் காஹிலா என்கிற முதுவை ஹிதாயத்துல்லா.

இவர் தமிழ் உள்ளங்களுக்கு சுவாரஸ்யம் மிகுந்த முக்கியச் செய்திகளைத் திரட்டி பத்திரிக்கைகள் மூலம் நம்மைப் படிக்க வைப்பவர், தானாக முன்வந்த பத்திரி்க்கைகளுக்குச் செய்தி தரும் தேனீயான முதுவை ஹிதாயத்துல்லாவைப்பற்றி செய்திகளைத் தெரிந்து கொள்வொமா?

அமைதி தவழும் சிரித்த முகம் அனைவரிடமும் அன்புடன் பழகும் பண்பு, அமீரகத்தில் வாழும் நலிந்த தமிழ் மக்களுக்குத் தன்னுடன் தொடர்கொள்ள தமிழ் அமைப்புகள் மூலம் ஆர்ப்பாட்டமில்லாமல் உதவி செய்யும் சேவகர், எதையும் இலகுவாக மென்மையாக பேசி முடிக்கும் தன்மை, ஆடம்பரமில்லாத தோற்றம் இத்தனையும் சேர்ந்த மொத்தம் தான் முதுவை ஹிதயாத்துல்லா, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுவை என்னும் முதுகுளத்தூரைச் சேர்ந்த இவர் M.Sc. படித்த திருச்சி வானொலியில் இளைய பாரதம் நிகழ்ச்சியி்ல் வினாடி வினா போன்ற நிகழச்சிகளில் பங்கேற்றும், ஏற்று நடத்தியும் சிறப்பித்தவர், தம் பள்ளி, கல்லூரிகாலங்களில் பொத அறிவுப் போட்டிகளில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் வெற்றி பெற்று மகுடம் சூட்டியுள்ளார். பொத அறிவுச்செய்திகளை விரல் நுனியிலும் நாநுனியிலும் சேமித்து வைத்திருக்கும் தகவல் வங்கி இவர்.

மேலும் .......http://www.vkalathur.com/muduvai.php

செம்மொழி எம்மொழி

செம்மொழி எம்மொழி

”தமிழ்” என்றாலே “மூவினம்”

த – என்னும் வல்லினம்;
மி – என்னும் மெல்லினம்
ழ் – என்னும் இடையினம்
முத்தமிழாம்
இயல்,இசை,கூத்து
மூவேந்தர்
சேர்,சோழ, பாண்டியர்
முக்கனியின் சுவைபோன்றே
மூன்று தமிழ்ச் சங்கம்
முப்பெரும் கடல் தாண்டி
முழங்கும் மொழி
தாய்மொழியாம் தமிழ் மற்ற மொழிகட்கும்
தாயான மொழி
தொன்மை;வளமை;தனித்தன்மை
செம்மை;இனிமை;எளிமை;இளமை;
வளமை;புதுமை;மென்மை;மேன்மை கண்டு
பரிதிமாற் கலைஞர் ஆய்வு செய்தார்;
மூதறிஞர் கலைஞர் நிறைவு செய்தார்
எம்மொழி “செம்மொழி”யானதே..!!
ஆதாம் பேசியதும் தமிழே என்று
ஆய்வுகள் உண்டு
பேச்சுத் தமிழ்; எங்களின் செவி வழி
மூச்சுத் தமிழ்
அருந்தமிழ்ப் பற்றிய குறுஞ்செய்திகள்
தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தை முதல்வர் கலைஞர் திறந்து வைத்தார்;இதுவே இந்தியாவின் முதல் இணையப் பல்கலைக்கழகமாகும்.
“கண்ணுக்கு மையிடுவது போல, பிறமொழிகளைப் பயன்படுத்த வேண்டும்.மை அதிகமானால் கண் எப்படிக் கரித்துவிடுகிறதோ, அதுபோல பிறமொழிகள் அதிகம் கலப்பதும் ஆபத்தான நிலையை உண்டாக்கும்.”- பேரறிஞர் அண்ணா.
நமஸ்காரம் வணக்கமானதும்; உபந்நியாசம் சொற்பொழிவானதும்; பிரகஸ்பதி தலைவரானதும்;
மகாஜனங்கள் பொதுமக்களானதும்; உபாத்தியாயர் ஆசிரியரானதும்; காரியதரிசி செயலாளரானதும்; சர்வகலாசாலை பல்கலைக்கழகமானதும்; ராஜ்ஜியம் மாநிலமானதும்; உப அத்தியட்சகர் துணைவேந்தரானதும் பேரறிஞர் அன்ணாவின் பெரும் முயற்சியே;அதனால் பெற்றது தமிழுக்குப் புதிய வளர்ச்சியே.
சிங்கப்பூர் நூலகங்களில் தமிழ் நூல்கள், இதழ்கள் கிடைக்கின்றன. அந்நாட்டு குடியரசு தலைவர் செல்லப்பன் ராமநாதன் தமிழர்தான். அங்கே பாராளுமன்றம், அமைச்சரவையிலும் தமிழர்கள் அங்கம் வகிக்கின்றனர்; சிங்கப்பூர் வானூர்தியிலும் தமிழில் அறிவிப்புகள் சொல்லப்படுகின்றன.
1955 ஜூன் மாதம் டெல்லியில் நடைபெற்ற 18 மொழிகளின் வல்லுந்னர்களின் ஆய்வரங்கத்தில்
Tax, assessment, duty, customs ஆகிய ஆங்கிலச்சொற்களுக்கு இணையான இந்திய மொழி சொற்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வேறு மொழி எதிலும் பொருத்தமான வார்த்தைகள் சமர்ப்பிக்கப் படவில்லை.
தமிழ்நாடு சார்பில் கலந்துகொண்ட தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை எழுந்தார்,”இதில் எல்லாச் சொற்களுக்கும் தமிழில் தனி தனி சொற்கள் உண்டு. அவை வரி, தீர்வை, கடமை, சுங்கம்” என்று முழங்கினார்
தமிழ்ச் சொற்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகம் என்கின்றனர் வல்லுநர்கள்.
1991-ம் ஆண்டு நிலவரப்படி உலகில் அதிகபட்சமாக சீன மொழி(மாண்டரின்)பேசுவோர் எண்ணிக்கை 130 கோடியாக இருந்தது. 8-வது இடத்தில் தமிழ்(11 கோடியே 40 லட்சம் பேர்) இருந்தது. இதைவிடக் குறைவே ஆங்கிலம் பேசுவோர்.
திருக்குறளின் பெருமையை அறிந்த காந்தியடிகள்,”திருக்குறளைப் படிப்பதற்காக நான் தமிழனாக பிறக்க ஆசைப்படுகின்றேன்” என்றார்.
ரஷ்ய கிரளின் மாளிகையில் அணுத்துளைக்காத சுரங்கப் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது திருக்குறள்.
விக்டோரியா அரசியும் வைத்திருந்தார் திருக்குறள்
இங்கிலாந்தில் விவிலியத்துடன் போற்றப்படுகின்றது திருக்குறள்
தமிழ்நாடு சட்டமன்றம் திருக்குறள் ஓதியேத் துவங்கும்
சூரிய ஆண்டு முறையில் திருவள்ளுவராண்டு முறை; தை 1-ந் திகதி புத்தாண்டு;ஆங்கில ஆண்டைவிட திருவள்ளுவராண்டு 31 ஆண்டுகள் அதிகம்.
தமிழ்நாடு அரசும் திருவள்ளுவராண்டு முறையைப் பின்பற்றி வருகின்றது. அதன் 12 மாதங்களாவன:
கறவம்(தை); கும்பம்(மாசி);மீனம்(பங்குனி)மேழம்(சித்திரை);விடை(வைகாசி),ஆடவை(ஆனி);கடகம்(ஆடி);மடங்கல்(ஆவணி);கன்னி(புரட்டசி);துலை(ஐப்பசி);நளி(கார்திகை)சிலை(மர்கழி)
தமிழ்நாட்டில் மட்டுமன்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிஜி, மொரீசியஸ், பர்மா, தெ ஆப்பிரிக்கா, வியட்நாம் முதலிய நாடுகளில் தமிழ் பேசப்படுகின்றது. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தாய்மொழியாக-கல்வி மொழியாக, துணை ஆட்சி மொழியாக, செய்திப் பரவல் தொடர்பு மொழியாக, இலக்கிய மொழியாக பயன்பட்டு வருகின்றது. இந்தோனேசியா, மொரீசியஸ், டிரினிடாட் போன்ற நாடுகளில் தமிழ் தாய்மொழியாக பேசப்பட்டு வருகின்றது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்சு, ஜெர்மனி, போலந்து, செக்கோஸ்லோவாக்கியா முதலிய நாடுகளில் தமிழ் மொழி பல்கலைக்கழகங்களில் அறிஞர்கள் விரும்பிப் பயிலும் மொழியாக தமிழ் அமைந்துள்ளது. ”பலநாடுகளில் பேசப்படுகின்ற நிலைகளில் உள்ள உலக மொழிகளில் ஒன்றாகத் தமிழ்மொழி திகழ்கின்றது”என்று செக் நாட்டு மொழியியல் பேரறிஞர் கமில் கவலபில் கூறியுள்ளார்.”யுனெஸ்கோ” நிறுவனம் தமிழ் மொழியில் இதழ் வெளியிடுவது தமிழுக்கு கிடைத்த இன்னொரு சிறப்பாகும்.
உலகத் தமிழ் மாநாடுகள்:
முதல் மாநாடு கோலாலம்பூர்(1966)
2-வது மாநாடு சென்னை(1968)
3-வது மாநாடு பாரீஸ்(1970)
4-வது மாநாடு யாழ்ப்பாணம்(1974)
5-வது மாநாடு மதுரை(1981)
6-வது மாநாடு கோலாலம்பூர்(1987)
7-வது மாநாடு மொரீசியஸ்(1989)
8-வது மாநாடு தஞ்சாவூர்(1995)
உலகத் தமிழ்ச்
செம்மொழி மாநாடு கோவை(2010)

உலகப் புகழ்பெற்ற நயாகரா அருவியின் நுழைவு வாயிலில் தமிழில் வரவேற்பு வாசகம் எழுதப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பெரிய நூலகம் நியூயார்க் நகரில் உள்ளது. அதன் முகப்பு வாயிலில்
”கற்க கசடற கற்பவைக் கற்றபின்
நிற்க அதற்குத் தக” என்ற திருக்குறள் இடம்பெற்றுள்ளது.
“அமிழ்து அமிழ்து” என்று திரும்பத் திரும்ப சொன்னால், “தமிழ்.. தமிழ்” என்று ஒலிக்கும்
தமிழ் இலக்கண இலக்கியங்களைத் தானே படித்து “முத்தமிழ்க் காவலர்” ஆனார் கி.ஆ.பெ.விசுவநாதம்.
1967 ஜூலை 18-ல் “தமிழ்நாடு” என்னும் பெயர் அண்ணாவின் ஆட்சியில் சூட்டப்பட்டது.
நொபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர் சி.வி.ராமன் தமிழில் கையொப்பம் இடுவார்.
தமிழில் தட்டச்சை கண்டுபிடித்தவர் தஞ்சை சோமசுந்தர அய்யர்
தமிழில் ஒருங்குறி கணிணி எழுத்து உருவாக்கி உலகுக்கு அர்ப்பணித்தவர் அதிராம்பட்டினம்
உமர்தம்பி என்ற விஞ்ஞானி.
சென்னை மாநிலக் கல்லூரியில் முதல் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர் பர்சிவெல் என்ற ஆங்கிலேயர்.
செம்மொழி வரையறைகளைப் பெற்ற மொழிகளான லத்தீன்,பாரசீகம்,சீனம்,அரபு,சமச்கிருதம் ஆகிய ஐந்து மொழிகள் பட்டியலில் தமிழ் மொழியும் இணைந்துள்ளது.
தமிழ்ச்சொற்களின் மூலம் எபிரேய்,மங்கோலிய,ஐரொப்பிய மொழிகலிலும் கலந்திருப்பதைக் கண்டுபிடித்து சொன்னவர் ஈழத்தில் உள்ள மானிப்பாய் என்ற ஊரில் 1875-ல் பிறந்த வைத்தியலிங்கம் (ஞானப் பிரகாசம்);இவருக்கு 72 மொழிகள் தெரியும்.

பெண் கவிகள்:
அவ்வையார், ஆதிமந்திரியார், ஆண்டாள், ஒக்கூர் மாசாத்தியார், காக்கைப் பாடியானார், கவெற்பெண்டு, குறமகள் இளவெயினி, நக்கன்னையார், நல்முல்லையார், பாரிமகளிர், பூங்கண் உத்தரையார், நல்வெள்ளியார், பாரி மகளிர், பூங்கண் உத்தரையார், இளவெயினி, பொன்முடியார், போந்தைப் பசலையார், முடத்தாமக்கண்னியார், மாற்பித்தியார், மறோகத்து நற்பசலையார், வெண்ணிகுயத்தியார், வெள்ளிவீதியார்,
ஸ்பெயின் நாட்டில் பிறந்து தமிழ்நாட்டுக்கு வந்து சமயப் பணியாற்ற வந்த “காண்டன்ஸ்டைன் பெஸ்கி” என்பாரே “வீர்மாமுனிவர்” என்று தன் பெயரை தமிழ்ப் படுத்திய அவர்தான், “தேம்பாவணி” என்ற இலக்கியம் படைத்தார்.
1916-ம் ஆண்டு சுவாமிவேதாசலம் என்பார் தன் 13வயது மகள் நீலாம்பிகையுடன், “திருவருட்பா”வில் “உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்” என்ற வரியினைப் பாடும் போழ்து, “தேகம்” என்ற வடசொல்லுக்கு மாறாக “யாக்கை” என்ற தமிழ்ச் சொல் இருக்குமானால் தமிழ் இனிமைக் குன்றாது இருக்கும் என்று கருதினார். அதைக் கேட்ட நீலாம்பிகை,”அப்படியானால், இன்று முதல் நாம் அயல்மொழிச் சொற்களை நீக்கித் தனித் தமிழிலேயே பேசுதல், அதற்கான முயற்சியை நாம் விடாது செய்தல் வேண்டும் என்று ஆர்வ்த்தோடு கூறினார்.மகளின் வேண்டுகோளை ஏற்று “சுவாமி வேதாசலம்” எனும் தன் பெயரை ”மறைமலை அடிகள்” என்று தனித் தமிழில் மாற்றினார். இப்படித் தோன்றியதுதான் “தனித்தமிழ் இயக்கம்”!
வ.ரா. என அழைக்கப்படும் வ.ராமசாமி, பாரதியாரைச் சந்திக்கப் புதுச்சேரி சென்றார்.அப்போது ஆங்கிலத்தில் வ.ரா.பேசினார்.”ஒரு தமிழன் இன்னொரு தமிழனோடு இன்னும் எவ்வளவு காலம்தன் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்க வேண்டும்?” என்று கேட்டார் பாரதி. வ.ரா.வுக்கு அழுகையே வந்து விட்டது.
இசையரங்குகளில் பிறமொழிப் பாடல்களே பாடப்பட்ட நேரத்தில், “தமிழிசைச் சங்கம்” நிறிவி-தமிழிசையை வளர்த்த பெருமை ‘செட்டிநாட்டரசர்’ ராஜா அண்ணாமலை செட்டியாரைச் சாரும்.
ஒரு மொழி வழக்கொழிதலுக்கான காரணங்கள் ஆறு என ஆய்வில் கூறுகின்றார்:மார்டின் ஹாஸ்பல்மாத் என்னும் ஜெர்மானிய அறிஞர்.
1) மக்கள் இடப்பெயர்ச்சி
2) வணிகம்
3) சிறுபான்மை மக்கள் மீது பெரும்பான்மை மக்களின் ஆதிக்கம்
4) ஊடகங்கள்
5) காலனி ஆதிக்கம்
6) இனப் படுகொலை

முதல் தமிழ்ச் சஙம் 4440 ஆண்டுகளும், இரண்டாம் தமிழ்ச் சங்கம் 3700 ஆண்டுகளும், மூன்றாம் தமிழ்ச் சஙம் 1850 ஆண்டுகளும் செயல்பட்டன. இவை முதல், இடை, கடை என வழக்கில் இருந்தன. கி.பி.1-ம் நூற்றாண்டுக்கு முற்பட்டதே சஙகாலம்.
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என தென் மாநிலங்கள் ‘சென்னை மாகாணம்’ என்று அழைக்கப்பட்டது. தமிழ் பேசும் மாந்னிலத்திற்கு “மெட்ராஸ் ஸ்டேட்’ என்று ஆங்கிலத்தில் வழங்குதல் கூடாது. “தமிழ்நாடு” என்று பெயரிட வேண்டும் என்று 64 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்டார் தியாகி சங்கரலிங்கனார். தமிழுக்காகத் தன் உயிரையே தந்து சரித்திரத்தில் இடம் பிடித்தார்.

Tuesday, June 22, 2010

”மாநாடு சிறக்கும் ; செம்மொழி சிறக்குமா?”

”மாநாடு சிறக்கும் ; செம்மொழி சிறக்குமா?”

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் ஜூன் 23 முதல் 27 வரை நடைபெற இருக்கிறது. தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் சீரிய தலைமையில், துணை முதல்வர் ஸ்டாலினின் மேற்பார்வையில் சிறப்புடன் நடைபெற இருக்கும் இந்த மாநாடு எல்லா வகையிலும் வெற்றி பெறும்; வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்து கிறோம். ‘உலகெலாம் தமிழ் முழக்கம் கேட்கச் செய்ய’ இந்த மாநாடு பேருதவியாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

ஆனால் செம்மொழி மாநாடு நடைபெறும் இத்தருணத்தில் தமிழ் நாட்டில் தமிழின் நிலை என்ன?

தமிழ் ஆர்வலர்களும் தமிழ்ச் சான்றோர்களும் தமிழ்ப் புலவர்களும் ‘தமிழ்நாட்டில் தமிழ் இல்லையே’ என்று புலம்பத் தொடங்கிச் சற்றொப்பக் கால் நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இன்று வரை அவர்களின் கவலை தீரவில்லை; கண்ணீர் வற்றவில்லை.

தில்லியைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று தமிழகத்தின் பள்ளிகளில் ஓர் ஆய்வை நடத்தியது. கிராமப்புறங்களில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் ஏறத்தாழ 65
விழுக்காட்டினர்க்குத் தமிழ்வழி இரண்டாம் வகுப்புப் பாட நூலைப் படிக்கக்கூட முடியவில்லை என்று அது கண்டறிந்துள்ளது.

தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்களில் தமிழ் இல்லை.

தமிழகத்தின் கடைத்தெருக்களில், அங்காடி வீதிகளில் தமிழ் இல்லை.

அரசு அலுவலகங்களில் தமிழ் இல்லை.

நீதிமன்றங்களில் தமிழ் இல்லை.

தமிழ்க் கல்லூரிகள் எல்லாம் கலைக் கல்லூரிகளாக மாறிவிட்டன.

தமிழ்ப் படித்தவர்களுக்கு வேலை இல்லை.

தொலைக்காட்சிகளிலும் (கலைஞர் தொலைக்காட்சி உட்பட) திரைப் படங்களிலும் தமிழும் இல்லை; தமிழ்ப்பண்பாடும் இல்லை; தமிழ் வாழ்வும் இல்லை.

நாளிதழ்களிலும் பருவ இதழ்களிலும் நடத்தப்படும் தமிழ்க் கொலைக்கு அளவே இல்லை. (பேராசிரியர் நன்னன் அவர்கள் இதைக் குறித்து அன்றாடம் கலங்குகிறார்; கதறுகிறார்; குமுறுகிறார். ஆனால் அவருடைய கதறல் யாருடைய காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை)

தமிழர்கள் பலரும் ‘தமிங்கிலர்’ ஆகிவிட்டனர். ஆங்கிலம் கலக்காமல் யாருக்கும் ஒரு சொற்றொடர் கூட பேசவோ எழுதவோ இயலவில்லை.

கன்னித் தழிழ் இன்றைக்குப் ‘பண்ணித் தமிழ்’ ஆகிவிட்டது. (இதோ, ஓர் உரையாடல்: ‘நீ காலையில டிபன் பண்ணி டென் ஓ க்ளாக் மேல ஆபிசுக்கு போன் பண்ணிப் பேசு. அவன் ஈவினிங் வெயிட் பண்ணி உன்னை வீட்ல டிராப் பண்ணிடுவான். போன் பண்ண மிஸ் பண்ணிடாதே.’)

தமிழ்நாட்டில் தமிழின் அவல நிலையைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒரே ஒரு வினா உள்ளத்தைத் துளைத்துக் கொண்டே இருக்கிறது :

”மாநாடு சிறக்கும் ; செம்மொழி சிறக்குமா?”

-சிராஜுல்ஹஸன்

நன்றி : சமரசம் ( 16 – 30 ஜுன் 2010 )


Sheikh Sintha Mathar Masoud
dateTue, Jun 22, 2010 at 6:17 PM
subjectமாநாடு, செம்மொழி .........


மாநாடு சிறக்கும்; செம்மொழி சிறக்குமா?
மாநாடு சிறக்கும்; செம்மொழி இறக்கும் ……

ஷேக் சிந்தா மதார்

Monday, June 21, 2010

இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
லால்பேட்டை – 608303 - கடலூர் மாவட்டம்
மெட்ரிகுலேசன் பொதுத்தேர்வு – மார்ச் 2010 தேர்வு முடிவுகள்
அன்புடையீர் !
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இவ்வருடம் நம் பள்ளியில் மெட்ரிகுலேசன் பொதுத்தேர்வு எழுதிய 99 மாணவர்களின் 97 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். தேர்ச்சி சதவீதம் 98% அல்ஹம்துலில்லாஹ்…
முதல் இடம் - P.M. முனவ்வரா – 471 / 500
இரண்டாவது இடம் P.M. பஹீமா - 453 / 500
மூன்றாவது இடம் M.I. அஸ்மா - 450 / 500

கணித பாடத்தில் 100/100 மதிப்பெண்கள் பெற்றவர்கள்
H.K. முஹம்மது ஹிசாம்
M.H. முஹம்மது ஹசன்
அறிவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண்கள் பெற்றவர்கள்
P.M. முனவ்வரா
P.M. பஹீமா,
M.I. அஸ்மா,
S.A. ஆயிஷா

400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் – 23 பேர்
T. நூரல் ஃபஷியா – 446 N. அரபாத் பேகம் - 424
S.A. ஆயிஷா - 445 M.A. சாஹீனா பர்வீன் - 424
H.K. முஹம்மது ஹிசாம் - 443 P. சஞ்சீவ் - 421
M.H. முஹம்மது ஹசன் - 439 M.I, தஸ்லீமா - 418
N. நபீலா பர்வீன் - 436 A.S. முஹம்மது ஆஷிக் – 409
K. பரக்கத்துன்னிசா - 434 A.M. உவைஸ் அஹ்மது – 409
A.V. அபுதல்ஹா - 430 H. பாஹிரா நஸ்ரீன் - 404
M.I. தெளபீக்கா பானு - 430 N. அப்துல்லா - 404
M.A. பர்ஹானா பர்வீன் - 427 F. உம்மு அத்தியா நஸ்ரீன் - 402
A. பத்தின் நாச்சியா - 427 H. ஹஸ்மினா பர்வீன் - 400

390 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் 10 பேர்
350 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் 37 பேர்
300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் 22 பேர்
இங்ஙனம்
முஸ்லிம் பட்டதாரி கல்வி சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள்
பள்ளி முதல்வர், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும்
அலுவலக பணியாளர்கள்
லால்பேட்டை

கல்விப் பெருந்தகை ஜமால் முகமது சாகிப்

http://www.mudukulathur.com/Katturaiview.asp?id=261


கல்விப் பெருந்தகை ஜமால் முகமது சாகிப்

ஜனாப். ஜமால் முகமது சாகிப் இளமைப் பருவம்.
சீர்மிகு கல்விப் பணிகள், மக்கள் நலப்பணிகள் பலவற்றை சிறப்பாக செய்த ஜனாப் ஜமால் முகமது அவர்கள், 1882ம் வருடம் ஜனவரி மாதம் இப்பூவுலகில் அவதரித்தார். அவருடைய தந்தையார் ஜமார் முகையதீன் சாகிப் ஆவார்கள். இளமைப்பருவத்தில் திருகுர்ஆனை மனப்பாடம் செய்து ஓதுவதில் ஆர்வம் காட்டினார்கள். ஆரம்பக் கல்வியினை மண்ணடி முத்தியால் பேட் பள்ளியில் ஆர்வமுடன் கற்ற அவர், ஆங்கிலம், கணிதம், பூகோளவியல் ஆகிய பாடங்களில் அதிகம் மதிப்பெண்களைப் பெற்று சிறந்து விளங்கினார். தம் உயர்நிலைப் பள்ளிப் படிப்பினை சென்னை கிருத்துவ உயர்நிலைப்பள்ளியில் தொடர்ந்தார். வகுப்பு நண்பர்களுடனும் பொது விசயங்களையும், மத விசயங்களையும் விவாதிப்பதில் ஆர்வம் காட்டினார்கள். உடல் நலக் குறைவின் காரணமாக பள்ளிக் கல்வி தடைபட்டது. எனினும், அவர்தம் தந்தையார் அவர்களுடன் வியாபாரத்தை பெருக்குவதிலும், வியாபார நுணுக்கங்களை அனுபவரீதியாக தெரிந்து கொள்வதிலும் மிக்க ஆவலுடன் ஈடுபட்டார்கள்.
வியாபாரமும் கல்வியும்:
தோல் பதனிடும் தொழிலே அவர்தம் பூர்விக குடும்ப வியாபாரமாக இருந்தது. எனவே அவர் வியாபாரத்தில் ஈடுபட்ட போதும் கல்வியினை நடைமுறையில் கற்றுக் கொள்வதில் அவர் முனைப்புக் காட்டினார். அதன் காரணமாக மெட்ராஸ்யுனைடெட்கிளப்-ல் உறுப்பினராகத் தம்மை ஆக்கிக்கொண்டு, அங்கே வருகின்ற ஆங்கில பிரசுரிப்புகளான, பத்தொன்பதாம் நூற்றாண்டு ரிவீயூவ் தீ ஸ்பெக்டேட்டர் ஆகிய ஆங்கில வார, மாத இதழ்களை விருப்பத்துடன் படித்து வந்தார். அது மட்டுமன்றி, வரலாற்று நூல்கள் புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்கள், இதர பல்வேறு பயனுள்ள நூல்களையும், அவ்வப் போது சுயமாகவே வாங்கி படித்து தன்னுடைய ஆங்கில அறிவை நன்கு வளர்த்துக் கொண்டார். அதன் காரணமாக ஆங்கிலத்தில் வியாபார ரீதியான கடிதங்களை அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் எழுதி வியாபாரத்தை வளர்ச்சியடைய செய்தார்.
நவீன கல்வியும், ஐரோப்பிய பயணமும் :
பெரம்பூரில் இயங்கி வந்த ஜமாலியாப் பள்ளியில், அரபி மொழிக் கல்வியைத் தவிர ஏனைய நவீன பாடத்திட்டத்தினை மாணவருக்கு பயிற்று விக்க முடியுமா? என்ற சர்ச்சைக்கு முடிவுகளான ஜனாப் ஜமால் முகமது சாகிப் ஏப்ரல் 1910-ல் இருந்து ஜனவரி 1911 முடிய 10 மாதங்கள் இடைவிடாது, பயணம் மேற்கொண்டு எகிப்து, வியட்னாம், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து துருக்கி, (மீண்டும் எகிப்து, மக்கா மதினா, சவூதி அரேபியா ஆகிய நாடுகளை பார்வையிட்டு அவைகளின் அடிப்படையில் உறுதியான முடிவுக்கு வந்தார். குறிப்பாக கான்ஸ்டாண்டி – நோபிளில் அமைந்துள்ள பழமையான காலிபா, நகரத்தில் – செய்குல் இஸ்லாம் என்ற அமைப்பின் கருத்துக்களை பதிவு செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்த ஜமால் அவர்கள், மத ரீதியான அரபு கல்வியுடன், இதர நவீனப் பாடங்களையும், இஸ்லாமிய மத கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்குக் கற்றுத் தரலாம் என்ற கருத்தினை எழுத்து மூலமாகப் பெற்றுக் கொண்டார். இதன்மூலம் நவீனக் கல்வியினை இஸ்லாமிய மாணவர்களுக்கு இந்தியாவிலுள்ள கல்வி நிறுவனங்களில் ஏற்படுத்தி தருவதற்குரிய அடிப்படைக் கோட்பாட்டை வடிவமைத்து தந்த கல்வித் தந்தையாக ஜனாப், ஜமால் முகமது சாகிப் அவர்கள் விளங்குகிறார்கள்.
பிரிட்டிஷ் நாணயத்தில் (பவுண் ஸ்டிடர்லிங்க்) இந்திய ரூபாயின் மதிப்பு ஜமால் சாகிப்பின் பொருளாதார கண்ணோட்டம் :
ஜனாப் ஜமால் சாகிப் அவர்கள் பொருளாதாரப் படிப்பில் பட்டம் பெற்றவர் இல்லை. எனினும், பொருளாதார சிந்தனையில் குறிப்பாக அந்நிய செலவாணி நிர்ணய விகிதத்தில் கூர்மையான அறிவும், அவற்றில் ஏற்படும் மாற்றம் எவ்வாறு ஒரு நாட்டின் பொருளாதாரத்தை, இறக்குமதி ஏற்றுமதியின் வழியாக பாதிக்கும் என்பதை நன்கு அறிந்தவராக விளங்கினார்.
1920 முதல் 1930 முடிய உள்ள 10 ஆண்டுகளில் மூன்று முக்கிய பொருளாதார நடவடிக்கைகளை அன்றைய பிடிட்டிஷ் அரசாங்கம் மேற்கொண்டது 1.ராயல் கமிசன் அமைப்பு, 2. இந்திய பணத்திற்கும் தங்கத்திற்கும் உள்ள விலை நிர்ணய மாற்றம், 3. இந்திய ரூபாய்க்கும் பிரிட்டிஷ் பவுண்ட் ஸ்டெர்லிங்க்கும் இடையே உள்ள விலை நிர்ணயம், இம்மூன்று முக்கிய முடிவுகளும் இந்திய பொருளாதாரத்தை குறிப்பாக இந்திய பாமர மக்களைப் பாதிக்கக் கூடியவையாக இருந்தன. நாடு முழுவதும் இப்பொருளாதார முடிவுக்கு தீவிர எதிர்ப்பு கிளம்பின. இவைகள் சம்பந்தப்பட்ட பாதிப்பான பொருளாதார அம்சங்களை தன்னுடைய எழுச்சிமிக்க பேச்சுக்கள் மூலம் தென்னிந்திய மக்களுக்கு எடுத்துரைத்தவர் ஜனாப். ஜமால் முகமது ஆவார்கள். இத்தகைய நிலைப்பாட்டை மாற்றுவதற்கும், 1931-32ல் ஜனாப். ஜமால் சாகிப் அவர்கள் இங்கிலாந்து சென்று அவ்வரசிடம் முறையிட்டு பின் நாடு திரும்பினார். இத்தகைய பொருளாதார சிந்தனை மிக்க ஜமால் சாகிப் அவர்களை தென் இந்திய சாம்பர் ஆப் காமர்ஸ்-ன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் வியப்பு ஒன்றுமில்லை. இதன் காரணமாக ஜமால் காசிப் அவர்களை படிக்காத பொருளாதார மேதை என்று உறுதியாகக் கூறலாம்.
வட்டமேஜை மகா மாநாட்டில் ஜமால் முகமது அவர்களின் பங்கு:
பிரிட்டிஷ் பிரதம மந்திரி அவர்களால் 1931-ல் லண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்டமேஜை மாநாட்டிற்கு ஜமால் முகமது சாகிப் அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அப்போது அவர்கள் இந்திய சாம்பர்ஸ் ஆப் காமர்ஸ் கூட்டமைப்பின் தலைவராக இருந்தார்கள். வட்டமேஜை மகா மாநாட்டில் பங்கு பெற்று பொருளாதார கருத்துக்களை சிறப்புற வலியுறுத்தினார்.
மேலும், அவர் செயற்கையான முறையில், நிர்வாக உத்தரவுகள் மூலம் பிரிட்டிஷ் நாணயத்திற்கும் இந்தியாவின் ரூபாய்க்கும் உள்ள மதிப்பு விகிதாச்சார முறையின் சமநிலைப்பாட்டை தோற்றுவிப்பது, இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடிய அம்சம் எனக் குறிப்பிட்டார். மேலும் இந்தியா பிரிட்டிஷ்க்கு செலுத்த வேண்டிய கடனை அதிகரித்துக் கொண்டே செல்லும் எனக் குறிப்பிட்டார். வியாபார வளர்ச்சி குன்றினால், இந்தியாவின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கும் என வலியுறுத்தினார். இத்தகைய கருத்துகள் அப்போது உள்ள காலத்திற்கு மட்டுமின்றி, இப்போது உள்ள காலத்திற்கும் பொருந்தும். இது அவர்தம் தொலை நோக்குப் பார்வையை எடுத்துக்காட்டுகிறது.
மேலும் அவர் பேசுகையில், இந்தியாவுடைய இராணுவ செலவை அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் அதிகரித்துக் கொண்டே சென்றது பொதுமக்கள் மீது வரிச்சுமையை ஏற்படுத்திற்று. மகாண சட்ட மன்றங்களில் அத்தகைய இராணுவ செலவு அதிகரிப்பு ஒப்புக் கொள்ளப்படவில்லை யென்றாலும், அவற்றிற்கு மேல முடிவு எடுத்த திணிப்பது போன்ற நிர்வாக சட்டதிட்டங்கள் அகற்றப்பட வேண்டு மென்று உரையாற்றினார்.
விவசாயம், தொழில்-மேம்பாடு, வியாபாரம், தொழிலாளர்கள் பயன்பாடு ஆகியவற்றில் இந்திய மக்களின் பிரதிநிதிகளுக்கு மத்திய அரசில் தீர்மானிக்கும் உரிமை வேண்டும் என்று கூறியது மட்டுமல்லாமல் மாநில அரசாங்கத்திற்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு சுயாட்சி முறை அமைப்பு வேண்டுமென்று ஆணித்தரமாகக் கருத்துக்களை எடுத்து வைத்தார். இத்தகையக் கருத்துக்களின் அடிப்படையில் பின்னால் ஏற்படுத்தப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஓரளவு அமைந்தது என்றால் மிகையாகாது. எனவே இரண்டாவது வட்டமேஜை மகா மாநாட்டில் மாநில சுயாட்சிக்கு வித்திட்டவர் ஜனாப் ஜமால் முகம்மது அவர்களே.
வட்டமேஜை மாநாட்டில் பங்குபெற்ற பல்வேறு சமயத்தை சார்ந்தவர்களை ஒற்றுமையை ஏற்படுத்தி அதன்மூலம் இந்தியாவில் உள்ள பல்வேறு சமயம், இனத்தைச் சார்ந்த மக்களிடையையும், மத நல்லிணக்கத்தையும், சமுதாய ஒற்றுமையையும் ஏற்படுத்த நல்ல முயற்சி மேற்கொண்டார். இதன் காரணமாக மகாத்மா காந்தி அவர்களுடன் அடிக்கடி உரையாற்றும் வாய்ப்பு கிட்டியது. மகாத்மா காந்தி அவர்களும் இதர தலைவர்களும் ஜமால் சாகிப் அவர்கள் மீது முழு நம்பிக்கையும், மரியாதையும் வைத்திருந்தனர். இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் பங்குப் பெற்றவுடன் ஜனவரி 1932 –ல் ஜனாப் ஜமால் சாகிப் அவர்கள் இந்தியா திரும்பினார்கள்.
ஜமால் சாகிப் அவர்களின் மெச்ச தக்க குணநலன்கள் :
ஜமால் முகம்மது அவர்கள் ஒரு செல்வாக்கு மிக்க வியாபாரி எந்த அரசியல் கட்சியையும் சாராத உண்மையான தேசியவாதி; பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அடிவருடியாக இல்லாதவர்; இந்திய பொருளாதார விசயங்களிலும், அதன் நிதிநிலை அமைப்பிலும் பாண்டித்தியம் பெற்ற திகழ்ந்தவர்; ஆதலின் சுதந்திர இந்தியாவில் நிதி மற்றும் வணிக அமைச்சராக விளங்குவதற்கு முற்றிலும் தகுதி படைத்தவர்; சிறந்த கொடை வள்ளல்; புகழ்மிக்க கல்வியாளர்; அதனாலேயே தென் இந்திய முஸ்லிம் கல்விச்சங்கத்தின் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்; அவர்தம் பெயரில் திருச்சியில் உள்ள ஜமால் முகம்மது கல்லூரி தோன்றுவதற்கு வித்திட்டவர்; பல தரப்பினரும் பாராட்டிய சிறந்த மேடைப் பேச்சின் வித்தகர்; அப்பழுக்கற்ற ஆன்மீகவாதி; அகிம்சையில் அசையா நம்பிக்கை கொண்டவர்; பூக்களைக் கண்டு மகிழ்ந்தவர்; பூக்களைப் பறித்தல் கூட நோவினை ஏற்படுத்தும் என்று உணர்ந்தவர்; மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டவர்; வன்முறையில் துளியும் நம்பிக்கை இல்லாதவர்; இறைவன் மீது பூரண நம்பிக்கை வைத்தவர்; சுதேசி பொருள்களை விரும்பியவர்; - இத்தகைய ஈடு இணையற்ற பண்பின் காரணமாய், ஜனாப் ஜமால் முகம்மது சாகிப் அவர்கள், இருபதாம் நூற்றாண்டின், ஒப்பற்ற மனிதராக விளங்குகின்றார்.
இந்தியா முழுமையிலும் அலிகள் முஸ்லிம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு வாரி வழங்கியவர் தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனம் உருவாக காரணமாக இருந்தவர்.
விடுதலை போரில் செலவுக்காக மகாத்மா காந்தி மூதறிஞர் ராஜாஜியிடம் ( Blank Cheque ) தொகை எழுதப்படாத காசோலை வழங்கிய இத்தகைய வள்ளல் ஜமால் முகம்மது அவர்களுடைய சிறந்த மறுமை வாழ்விற்கு சமவுரிமை இறைவனை இறஞ்சிகிறது.



கட்டுரை எழுதியவர்
டாக்டர். கே.எஸ்.உதுமான் முகைய்தீன்
பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் (ஓய்வு)
பொருளாதாரத்துறை, சென்னை பல்கலைகழகம்,
சென்னை – 600 005.

நன்றி : சம உரிமை மாத இதழ்– ஜுன் 2010
samaurimail@gmail.com
ஆண்டுச் சந்தா : ரூ.144/-
தொடர்பு எண் : சென்னை : 044 4510 810
அமீரகத் தொடர்பு எண் : 050 51 96 433

Sunday, June 20, 2010

அந்த இரண்டணா

அந்த இரண்டணா

எம்.ஆர்.எம். ஃபாத்திமா
சிறந்த மார்க்க விற்பன்னரான அஹ்மத் ஜீவன் ஒளரங்கசீப் ஆலம்கீர் பாதுஷாவின் ஆன்மிக ஆசானாக விளங்கினார். புனித ரமழான் மாதத்தில் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசி மகிழவும் ஒன்றாகச் சேர்ந்து தொழவும் செய்துவந்தனர். ரமழான் மாதம் முடிந்து ஈத் பெரு நாளும் வந்தது. வழக்கம்போல் அன்றும் பெருநாள் தொழுகையை ஒன்றாகச் சேர்ந்து நிறைவேற்றினார்கள்.
பின்னர் அஹ்மத் ஜீவன், பாதுஷாவிடம் விடைபெற விரும்பிய பொழுது, “சற்றுப் பொறுங்கள்”! என்று கூறிவிட்டுத் தம் சட்டைப் பைக்குள் கையை விட்டு ஏதேனும் இருக்கிறதா? என்று துழாவினார் பாதுஷா.
ஆம்! இரண்டு அணா நாணயம் ஒன்று அதில் கிடந்தது. அதை எடுத்துத் தம் ஆசானிடம் கொடுத்து வழி அனுப்பினார். அவர், தம் மாணவர் தந்த இரண்டணா நாணயத்தை மகிழ்வோடு பெற்றுக் கொண்டு தம் இல்லம் திரும்பினார்.
ஒளரங்கசீப் பதினான்கு ஆண்டுகள் தக்காணத்தில் தங்கிவிட்டு டில்லி திரும்பினார். அவர் வந்ததும் அவருடைய முதல் அமைச்சர் அவரை அணுகி, “ஆலம்பனாஹ்! பெரும் நிலக்கிழாராக விளங்கும் அஹமத் ஜீவனிடமிருந்து அவருடைய சொத்துக்களுக்கான வரியை இதுகாறும் வசூலிக்கவில்லை. அதனை அவரிடமிருந்து வசூலிக்கத் தாங்கள் அனுமதி வழங்க வேண்டும்” என்று கூறி நின்றார்.
அதுகேட்டு ஒளரங்கசீபுக்குப் பெரிதும் வியப்பாக இருந்தது.
“என்ன சாதாரண, எளிய வாழ்க்கை, வாழ்ந்து வந்த ஆசான் அஹ்மத் ஜீவன் பெரும் பணக்காரராகி விட்டாரா? எனக்கு என்னவோ இது புரியாப் புதிராக உள்ளதே” என்று எண்ணியவராய் சிறிது நேரம் சிந்தனையில் வீற்றிருந்தார்.
பின்னர் தாம் டில்லி திரும்பிவிட்டதாகவும் தம்மை வந்து சந்திக்கு மாறும் அஹ்மத் ஜீவனுக்கு மடல் தீட்டினார்.
மீண்டும் ரமழான் மாதம் வந்தது. அஹ்மத் ஜீவன் டில்லி வந்து சேர்ந்தார். அவர் எப்பொழுதும் அணியும் எளிய அறிகுறிகள் ஏதும் காணப்படவில்லை. எனவே ஒளரங்கசீப் அவரிடம் யாதும் கேட்காது வெறுமனே இருந்து விட்டார்.
பின்னர் ஒருநாள், அஹ்மத் ஜீவன் ஒளரங்கசீபை நோக்கி, “ஈத் அன்று தாங்கள் கொடுத்த அந்தப் புனிதமான இரண்டணா நாணயம் என் வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை உண்டு பண்ணிவிட்டது. என்று கூற அதைக் கேட்ட ஒளரங்கசீப், “என்ன திருப்பம் அது? என்று வியப்புடன் வினவினார்.
அப்பொழுது அஹ்மத் ஜீவன், “அந்த இரண்டணா நாணயத்தைக் கொண்டு பருத்தி விதை வாங்கி விதைத்தேன், இறையருளால் அது செழித்து வளர்ந்து பன்மடங்கு இலாபத்தைத் தந்தது. அந்த மூலதனத்தைக் கொண்டு மேலும் உற்பத்தியைப் பெருக்கினேன். இன்று அது பல லட்சம் மடங்காகப் பெருகிவிட்டது” என்று கூறினார்.
அதுகேட்ட ஒளரங்கசீப் தம்முடைய ஊழியர் ஒருவரை அழைத்து, சாந்தினி செளக்கில்லேவாதேவி வாணிபம் செய்யும் சேட் உதம் என்பவரை ஹிஜ்ரி 1069 –ஆம் ஆண்டின் அவருடைய கணக்கேட்டை எடுத்துக்கொண்டு உடனே தம்மை வந்து காணுமாறு கூறும்படி பணித்தார்.
அரச ஆணை ஏற்றதும் தம்முடைய ஹிஜ்ரி 1069 –ஆம் ஆண்டின் கணக்கேட்டை எடுத்துக் கொண்டு அரண்மனைக்கு விரைந்தார் சேட் உதம்.
அப்பொழுது அவருடைய மனம் என்னவென்னவோ எண்ணிப் புண்ணாகியது.
அரண்மனையை அடைந்த அவர் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பாதுஷாவுக்கு வாழ்த்துரை வழங்கித் தம்முடைய கணக்கேட்டை அவர் முன் சமர்ப்பித்தார்.
அவருடைய அச்சத்தை முகக்குறியால் விளங்கிக்கொண்ட பாதுஷா, “ஒன்றுக்கும் கவலற்க ! இங்கு வந்து உம்முடைய ஹிஜ்ரி 1069 –ஆம் ஆண்டின் வரவுசெலவுக் கணக்கை படித்துக்காட்டும்” என்று கூறினார்.
சேட் உதம் கணக்கேட்டைத் திறந்து படித்துக்கொண்டே வந்தார். அப்பொழுது “இரண்டணா நாணயம்” என்று படித்தவர், அதை யாருக்குக் கொடுத்தோம் என்பதை அறியாது விழித்தார்.
உடனே ஒளரங்கசீபின் முகத்தில் புன்னகை மின்னியது. “கூறும் யாருக்கு அந்தப் பணம் கொடுக்கப்பட்டது?” என்று வினவினார்.
அதைக்கேட்ட சேட் உதம், பெருமூச்சு விட்டவராய் “ஆலம்பனாஹ் ! அது ஒரு சோகக்கதை” எனக்கூறி அக்கதையைக் கூறத்தொடங்கினார்.
“ஆலம்பனாஹ் ! ஓர் இரவு, இந்த டில்லி மாநகரில் கனத்த மழை பெய்தது. அதன் காரணமாக புதியதாகக் கட்டப்பட்ட என் வீட்டின் கூரை ஒழுகி அதனால் வீட்டின் உள்ளே மழை நீர் வந்துவிட்டது. நான் ஓட்டையை அடைக்க எவ்வளவோ முயன்றும் பயனில்லை. மழைநீர் ஒழுகிக்கொண்டே இருந்தது. இந்நிலையில் வெளியில் சென்று எவரேனும் உதவுவார்களா என்று சுற்றிலும் நோக்கினேன். அப்பொழுது விளக்குக் கம்பத்தின் அருகே ஒருவர் நின்று கொண்டிருந்தார். பார்ப்பதற்கு அவர் ஒரு கூலியாள் போன்று தோன்றியது. எனவே அவரை அழைத்து கூரையைச் செப்பனிடச் சொன்னேன். அதற்குச் சம்மதித்து அவர் மூன்று நான்கு மணிநேரம் வேலை செய்து கூரையைச் செப்பனிட்டார். உடனே நீர் ஒழுகுவது நின்று விட்டது. அவர் வேலையை முடிக்கும்பொழுது வைகறைத் தொழுகைக்கான பாங்கு சொல்லப்பட்டது. அப்பொழுது வேலையை நிறுத்தி விட்டு தொழுகையை நிறைவேற்றினார். அதன் பின் தம்முடைய வேலையை முடித்துவிட்டதாகவுன், தாம் செல்ல விரும்புவதாகவும் கூறினார்.
“அப்பொழுது, அவருக்கான கூலையைக் கொடுக்க எண்ணி என் சட்டைப் பைக்குள் கைவிட்டேன். அங்கு இரண்டே இரண்டு அணாதான் இருந்தது. சற்று நேரம் எனக்கு என்ன செய்வதென்றே விளங்க வில்லை. ‘எனக்கு இந்நேரத்தில் உதவியவருக்கு இது போதா தென்று’ எண்ணி என் மனம் வருந்தியது. வேறு வழியின்றி அதனை அவர் கையில் கொடுத்து, “உமக்கு இச்சொற்பத் தொகையை அளிக்க வருந்துகிறேன். விடிந்ததும் என் கடைக்கு வாரும் ! அங்கு உமக்கு வேலைக்கான முழுக்கூலியையும் தந்து விடுகிறேன்” என்று கூறினேன். அதற்கு அவர், “எனக்கு இதுவே போதும். நான் மீண்டும் வரமாட்டேன்” என்று கூறினார். நானும் என் மனைவியும் எவ்வளவோ கூறியும் அவர் கேளாது விறுவிறுவெனச் சென்று விட்டார்.
“அன்றிரவு எங்களுக்கு உதவி – புரிந்து எங்களுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்கள் இழப்பு ஏற்படாமல் காத்த அந்த நல்லவரை நான் இதுவரை எங்கு தேடியும் காணவில்லை. எனவே அவரைப்பற்றி ஒன்றும் தெரியாததால் நான் கணக்கேட்டில் அவரின் பெயரைக் குறிப்பிடாது செலவை மட்டும் எழுதிவைத்தேன்.”
-இவ்விதம் கூறி முடித்தார் சேட் உதம்.
இதன் பின் பாதுஷா அவருக்கு அரசாங்க அங்கி ஒன்றை அன்பளிப்பாக வழங்க அதனை மரியாதையுடன் வாங்கிக் கொண்டு விடை பெற்றுச் சென்றார்.
அவர் சென்றதும் ஒளரங்கசீப் அஹ்மத் ஜீவனை நோக்கி, “என்னுடைய ஆன்மீக ஆசானாகிய தாங்கள் எனக்கு நற்பண்புகளைக் கற்றுத் தந்திருக்கிறீர்கள். அதன் காரணமாக நான் என்னுடைய சொந்தத் தேவைகளுக்கு ஒருபோதும் பொதுக்கருவூலத்தை நாடுவ தில்லை. நான் மணிமுடி சூடிய நாளிலிருந்து இரவில் இரண்டு மணி நேரம் விழித்திருந்து ஒரு மணிநேரம் திருக்குர்ஆனை பிரதி எடுப்பதிலும், ஒரு மணிநேரம் தொப்பி நெய்வதிலும் கழித்து பொருள் ஈட்டி வருகின்றேன். மேலும் வாரத்தில் இரண்டு இரவுகளில் மாற்றுடை அணிந்து மக்களின் தேவைகளை அறிய நகரைச் சுற்றி வருகின்றேன். அப்படி ஓர் இரவு சுற்றி வந்த பொழுது, அந்த மனிதருக்கு உதவி செய்ததால் கிடைத்த பணமே அந்த இரண்டணா நாணயம்” என்று கூறினார்.
அது கேட்ட அஹ்மத் ஜீவனின் புருவங்கள் மேலேறின.
“நிச்சயமாக என்னுடைய மாணவர் கடின உழைப்பின் மூலம் இப்பணத்தை ஈட்டி இருப்பார். அதனால்தான் இறைவன் அதில் “பரக்கத்” செய்துள்ளான் என்று நானும் ஏற்கனவே எண்ணினேன். ஆனால் இத்துணை கடின உழைப்புச் செய்து அந்த இரண்டணாவை ஈட்டி இருப்பீர்களென்று நான் கனவிலும் எண்ணவில்லை. தங்களை போன்ற ஒரு தூய்மையாளரை மாணவராகப் பெற்ற என்னுடைய பேறே அதினினும் நற்பேறு !!” என்று வாயாரப் புகழ்ந்து பாதுஷாவை வாழ்த்தினார் அஹ்மத் ஜீவன்.

( வரலாற்றில் சில பொன்னேடுகள் எனும் நூலிலிருந்து )

நன்றி : இனிய திசைகள் ( டிசம்பர் 2002 )


syed musthafa
dateTue, Jun 15, 2010 at 11:38 PM
subjectRe: அந்த இரண்டணா ........................


அரிய பதிவு! வாழ்த்துக்கள்!

- திருச்சி சையது.


abdul rahuman
dateWed, Jun 16, 2010 at 8:20 AM
subjectRe: |TMB| அந்த இரண்டணா ........................

அற்புதமான நினைவுக்குறிப்பு!


"உழைத்து ஈட்டும் பொருளில் அல்லாஹ்வின் பரக்கத் எந்த அளவு உள்ளது" என்பதையும் அழகாக உணர்த்துகிறது. பல படிப்பினைகளைத் தரும் அருமையான ஆக்கம். நன்றி சகோதரர் முதுவை ஹிதாயத்.



Sheikh Sintha Mathar Masoud
dateWed, Jun 16, 2010 at 8:18 AM
subjectநெஞ்சைத் தொட்ட இரண்டணா


அஸ்ஸலாமு அலைக்கும்.
ஹிதாயத் அவர்களே,
நெஞ்சைத் தொட்டுவிட்டது அந்த இரண்டணா.
மிக்க நன்றி.
ஷேக் சிந்தா மதார்

மஸ்அலா இலக்கியத்தில் மார்க்க கல்வி

மஸ்அலா இலக்கியத்தில் மார்க்க கல்வி

( மேலப்பாளையம் த.மு.சா. காஜா முகைதீன் எம்.ஏ.எம்.பில்., )

இஸ்லாமிய இலக்கியங்களில் கிஸ்ஸா, நாமா, மஸ்அலா, முனாஜாத்து, படைப்போர் ஆகியவை இஸ்லாமிய இலக்கியங் களுக்கே உரித்தான புதிய வடிவங்களாகும். அவற்றின் உள்ளடக்கம் வேறுபட்ட தன்மைகள் உடையன. மஸ் அலா இலக்கியம் மட்டுமே எவ்விதக் கற்பனையும் கலவாத உள்ளடக்கச் செய்திகளைக் கொண்டுள்ள ஆயிரம் மஸ்அலா, வெள்ளாட்டி மஸ்அலா, நூறு மஸ்அலா என்னும் மூன்று வகை மஸ்அலா இலக்கியங்களை முஸ்லிம் புலவர்கள் இயற்றியுள்ளனர்.
காலத்தால் முந்திய ஆயிரம் மஸ் அலா என்னும் அதிசய புராணம் வண்ணப் பரிமளப் புலவரால் கி.பி. 1572 இல் இயற்றப் பெற்றது. நபிகள் நாயகம் (ஸல்…) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அல்குர் ஆனிலும் ஹதீதுகளிலும் இடம் பெற்றுள்ள இஸ்லாமிய வரலாறு மற்றும் போதனைகளே இதில் முற்றாக வழங்கப்படுகின்றன.
மஸ் அலா என்னும் அரபிச்சொல் ஆல் (கேள்வி) என்னும் வேர் சொல்லிலிருந்து தோன்றியதாகும். நபிபெருமான் (ஸல்…) அவர்கள் மதினாவில் இருக்கும் பொழுது மதினாவிற்கு அண்மையிலுள்ள கைபர் என்னும் பகுதியில் வேதியர் அப்துல்லா இப்னு சலாம் என்பாரை சந்தித்து இஸ்லாத்தைப் பரப்ப வேண்டும் என ஜிப்ரயீல் (அலை) மூலம் நபிபெருமான் (ஸல்) அவர்களுக்கு இறைக்கட்டளை கிடைக்கிறது. இதன்படி உக்காஸ் (ரலி) அவர்களைத் தூதுவராக அனுப்பி நபி பெருமான் (ஸல்…)அவர்கள் தம்மைப் பற்றியும் இஸ்லாத்தின் நெறி பற்றியும் அப்துல்லா இப்னு சலாமிடம் அறிவிக்கும்படிச் செய்தனர். இதனை செவிமடுத்த அப்துல்லா இப்னு சலாம்.
அர்த்தமொன் றறியா வண்ணமாயிர மசலாவுங்கள்
சித்தமன் புறவேகொண்டு சென்றவர்க்கருள்வேன்.
(ஆயிர மஸ் அலா :32)
என இயம்பி நபி பெருமானை சந்திக்கும் முகமாக 700 யூதர்களுடன் அப்துல்லா இப்னு சலாம். மதினாமாநகர் வர ஆயத்தப்படுகிறார் இதனை நபி (ஸல்…) அவர்களுக்கு ஜிப்ரயீல் (அலை) அறிவித்து, அப்துல்லா இப்னு சலாம் விடுக்கும் ஆயிரம் வினாக்களுக்குரிய விளக்கங்களையும் இறைக்கட்டளைப்படி நபி (ஸல்…) அவர்களுக்கு ஜிப்ரயீல் (அலை) அறிவிக்க அக்கருத்துக்களையே விளக்கமாக நபி (ஸல்…) அவர்கள் அளிக்கிறார். இஸ்லாமிய வாழ்க்கை நெறியின்படி நடப்போருக்குரிய பயன்களாக ஆயிரம் மஸ் அலாவின் தொடக்கத்தில் வண்ணப் பரிமளப் புலவர்.
மூதறி வுண்டாம் நாளும் முதலவன் கிருபை தோன்றும்
தீதறுந் துன்பந் தீருஞ் செல்வமுஞ் சிறப்பு முண்டாம்
பூதலத் துயிர்கள் யாவும் புகழ்ச்சியும் மகிழ்ச்சியான
ஆதியை யிறசூல் தம்மை யகம்மகிழ்ந்தருளுவோர்க்கே (ஆயிரம் மஸ் அலா : 2 ) என்று விளங்க வைக்கிறார்.
நான் உங்களுக்கு இரண்டை விட்டுச் செல்கிறேன். ஒன்று திருக் குர்ஆன் மற்றொன்று அல்ஹதீஸ் இவ்விரண்டையும் உறுதியாக பற்றிக்கொள்ளின் நீங்கள் ஒரு போதும் வழி தவறமாட்டீர்கள் என்று தம் சமூகத்தினருக்கு நபி (ஸல்…) அவர்கள் அறிவிப்புச் செய்ததற்கிணங்க குர்ஆன் ஹதீஸ்களே ஆயிரம் மஸ் அலாவின் நற்செய்திகளாக உள்ளன.
அப்துல்லா இப்னு சலாமின் ஆரம்பக் கேள்வி தீனென்றால் என்ன? என்பது ………………………………………………… தீனாவதே சாறான கலிமா சாஹா தத்துடன் ஈறாத சிபத்தில் ஈமானுமாம் (ஆயிரம் மஸ் அலா : 72)
என்று இஸ்லாத்தின் அடி நாதமான கலிமா பற்றியது நபி (ஸல்…) அவர்களின் பதில். லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லா என்பதே நபி (ஸல்…) அப்துல்லா இப்னு சலாமுடைய உள்ளத்தின் பதித்த முதல் செய்தியாகும். இது.
தொடர்ந்து இஸ்லாத்தின் கொள்கைகளில் ஏற்கப்பட்டவை விலக்கப் பட்டவை, நல்லார், அல்லார், திருக்குர்ஆன் சிறப்பு ஜிப்ரயீல் (அலை) யின் செயல்பாடு, கதிரவன் சந்திரன் பற்றிய விளக்கங்கள், சொர்க்கத்தின் சுகம், நரகத்தின் கொடுமை பற்றியும் ஆபில் காபில் தஜ்ஜால் ஆகியோர் பற்றியும் இறுதி நாள் பற்றியும் விளக்கங்கள் நபி (ஸல்…) அவர்களின் விடைகளில் இடம் பெற்றுள்ளன.
மனிதப் படைப்பு குறித்து திருக்குர்ஆன் (22.5) நிச்சயமாக நாம் உங்களை எண்ணிலிருந்து சிருஷ்டித்தோம் என்று குறிப்பிடப்படுகிறது.
ஒருமண்ணாற் படைத்த மாந்தன் ஒரு வடிவாய்
ஆவரென்றே
கருதியே பலமன் கொண்டு கருப்பிடித்தனமத்தா னந்தப்
பரிசுவால் மானுட ரெல்லாம் பலவண்ணானாரென்ன
மருவியே இரசூல் கூற …
என்பதில் மனிதப் படைப்பின் தன்மை பற்றிய இறைவாக்கைப் பற்றி வண்ணப் பரிமளப்புலவர் மஸ் அலாவில் பதிவு செய்துள்ளார்.
கியாமத் (இறுதி) நாளின் அடையாளங்கள் வரிசைப்படுத்திக் கூறிய புலவர். உங்கள் மீது உங்கள் இறைவனால் சாட்டப்பட்டிருக்கும் மலக்குல் மவுத் தான் உங்களுடைய உயிரைக் கைப்பற்றுகின்றார். பின்னர் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு உங்கள் இறைவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள் (அல்குர்ஆன் 32 :11) என்று மனிதனின் இறப்பையும், அவன் இறுதி நாளில் எழுப்பப்படுவதனையும் பற்றிய இறைமறைக் கருத்துக்களையும், நன்மை, தீமை பற்றி வானவர் எடுத்துரைப்பதையும்.
கியாமத்தான கியாமத்து நாளிலே – கருதிநாயன்
கணக்குகள் கேட்டு நாள்
நியாயத் தாயடியாரை எழுப்புமந்தேரஞ் – சாலி
குவானவர் தங்களைத்
தயாநட் பானது கொண்டந்தப் பூமியின் தக்க
கூட்டுற வாக்குவா ரென்னவே
பயானைப் பேச நபி பதம் போற்றி வந்தவர் சூதர் – மறு மொழி கூறுவார். (மஸ் அலா :797)
இவ்வாறு இறை மறையின் செய்திகளே இதில் படிப்பினையாக இடம் பெறுகின்றன. இறுதிநாளில் உயிர்கள் அனைத்தும் இறைவன்பால் சென்றபின் இவ்வுலகம் எவ்வாறிருக்கும்? இதனை
இனிமேல் துனியாவோடு இகழ்ச்சியிலை
பனிஆதம் பிறப்பும் இறப்புமில்லை
யுனுசேர் அருணத்து உதயங்களிலை
அநியாயம் அவலம்பவம் கசடுகளிலையே
(ஆயிர மஸ் அலா : 962)
என்று ஒரு மஸ் அலா உரைக்கிறது. உலகின் அழிவுக்குப்பின் உலக வாழ்க்கை நன்மை செய்தோர்க்கு நன்மையும் தீமை செய்வோர்க்குத் தீமையும் வந்து நேரும் என்பதை,
நன்மை செய்தவர் சொர்க்க மாநகரெய்தி வாழ்வர்
தின்மை செய்தவர் நரகமானது சேர்ந்திருப்பர்..
என இவ்வாறு மனிதப் படைப்புத் தொடங்கி இஸ்லாமிய வாழ்க்கை நெறிகளையும் இம்மை மறுமைப் பயன்களையும் மஸ் அலாக்கள் வாயிலாக நபி (ஸல்) மொழி மறுமொழிகள் அப்துல்லா இப்னு சலாமுக்கு தீனுல் இஸ்லாம் பற்றிய தெளிவினை ஏற்படுத்தியது. அந்நிலையில்
மாமானமும்புகழ் முகம்மதே, எங்களின்
வாழ்வே குதாய் தூதரே
சூமானியமான வழிபிழைத் தேநின்ற சூதர்
அங்கிடமானதை
யீமானி லேநீனிலே சாருமசலாவுத் தமாமாய்ப்
பயானோதினீர்
சாமானி யாமோக சாருமசலாவுந் தமாமாய்ப்
பயானோதினீர்
அப்துல்லா இப்னு சலாமின் இக்கூற்றில் அவருக்கு ஏற்பட்ட தெளிவு வெளிப்படுகிறது.
மஸ் அலாக்கள் மூலம் நபி (ஸல்…) அளித்த மெய்மைகளை உள்வாங்கிய அப்துல்லா இப்னு சலாம் தம்முடைய குழுவினர் ஏழு நூறு பேர்களுடன் கலிமாச் சொல்லி இஸ்லாத்தில் இணைந்தார். இவ்வதிசயப் புராணமென்னும் ஆயிரமசலா ஒவ்வொன்றிலும் இஸ்லாமியமார்க்கக் கல்வியை வண்ணப்பரிமளப்புலவர் பரிணமிக்கச் செய்துள்ளார்.

நன்றி : சம உரிமை ( ஜுன் 2010 )

Tuesday, June 15, 2010

அல்லாமா இக்பால் அவர்களின் பொன் மொழிகள் !!!!!!!!!

அல்லாமா இக்பால் அவர்களின் பொன் மொழிகள் !!!!!!!!!

ஆட்சியும் அதிகாரமும்

உண்மையான அரசும் ஆட்சியும், படைத்துகாக்கும் இறைவனுக்கே உரியவை . அவன் ஒருவன் தான் ஆளுபவன் மற்றவைகளுக்கு முழந்தாளிடுவது மக்களின் அறியாமையினால்தான்.

தன்னை தானே ஆட்சி செலுத்தாதவனை மற்றவர்கள் ஆட்சி செலுத்துவார்கள்.

அரசியல்
அரசியல் ஒரு சூனியக்கலை , ஆளும் வர்கதிரனால் அந்த மந்திர வித்தை செய்யபடுகிறது . ஆளப்படுபவர்களும் , தூங்குபவர்களும் விழித்துக் கொள்ளும்போது , அதிகாரம் செய்யும் அந்த மந்திரவாதிகள் மீண்டும் அவர்களை அறியாமை என்னும் உறக்கத்தில் ஆழ்த்தி விடுகிறார்கள் . ஆனால் நசுக்கபடுபவர்கள் என்றுமே தூங்குவதில்லை .

வண்ணமும் நறுமணமும் இருப்பதாகத் தோன்றும் மாயத் தோற்றந்தான் அரசியல் , ஆனால் இது செல்வந்தர்கள் தாங்கள் செல்வத்தை பெருக்கப் பயன்படுத்தும் ஆயுதம் .

அகம்

தன் அகத்தை முழுதும் தெறித்து கொள்கிறவன் தீமைகள் அனைத்தையும் பயனுள்ளதாக்கி விடுவான் .

அறியாமை
உறுதி மிக்க வைரத்தயும் மெல்லிய மலரின் இதழால் அறுத்துவிடலாம் . ஆனால் அறியாமையில் உழலும் இந்த மனிதனிடம் எவ்வித உபதேசமும்
பலனளிக்காமல் போய் விடுகிறது ; அது எவ்வளவு மிருதுவாக இருந்த போதிலும் சரியே .

அல்லாமா இக்பால் ,

அந்த இரண்டணா

அந்த இரண்டணா

எம்.ஆர்.எம். ஃபாத்திமா
சிறந்த மார்க்க விற்பன்னரான அஹ்மத் ஜீவன் ஒளரங்கசீப் ஆலம்கீர் பாதுஷாவின் ஆன்மிக ஆசானாக விளங்கினார். புனித ரமழான் மாதத்தில் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசி மகிழவும் ஒன்றாகச் சேர்ந்து தொழவும் செய்துவந்தனர். ரமழான் மாதம் முடிந்து ஈத் பெரு நாளும் வந்தது. வழக்கம்போல் அன்றும் பெருநாள் தொழுகையை ஒன்றாகச் சேர்ந்து நிறைவேற்றினார்கள்.
பின்னர் அஹ்மத் ஜீவன், பாதுஷாவிடம் விடைபெற விரும்பிய பொழுது, “சற்றுப் பொறுங்கள்”! என்று கூறிவிட்டுத் தம் சட்டைப் பைக்குள் கையை விட்டு ஏதேனும் இருக்கிறதா? என்று துழாவினார் பாதுஷா.
ஆம்! இரண்டு அணா நாணயம் ஒன்று அதில் கிடந்தது. அதை எடுத்துத் தம் ஆசானிடம் கொடுத்து வழி அனுப்பினார். அவர், தம் மாணவர் தந்த இரண்டணா நாணயத்தை மகிழ்வோடு பெற்றுக் கொண்டு தம் இல்லம் திரும்பினார்.
ஒளரங்கசீப் பதினான்கு ஆண்டுகள் தக்காணத்தில் தங்கிவிட்டு டில்லி திரும்பினார். அவர் வந்ததும் அவருடைய முதல் அமைச்சர் அவரை அணுகி, “ஆலம்பனாஹ்! பெரும் நிலக்கிழாராக விளங்கும் அஹமத் ஜீவனிடமிருந்து அவருடைய சொத்துக்களுக்கான வரியை இதுகாறும் வசூலிக்கவில்லை. அதனை அவரிடமிருந்து வசூலிக்கத் தாங்கள் அனுமதி வழங்க வேண்டும்” என்று கூறி நின்றார்.
அதுகேட்டு ஒளரங்கசீபுக்குப் பெரிதும் வியப்பாக இருந்தது.
“என்ன சாதாரண, எளிய வாழ்க்கை, வாழ்ந்து வந்த ஆசான் அஹ்மத் ஜீவன் பெரும் பணக்காரராகி விட்டாரா? எனக்கு என்னவோ இது புரியாப் புதிராக உள்ளதே” என்று எண்ணியவராய் சிறிது நேரம் சிந்தனையில் வீற்றிருந்தார்.
பின்னர் தாம் டில்லி திரும்பிவிட்டதாகவும் தம்மை வந்து சந்திக்கு மாறும் அஹ்மத் ஜீவனுக்கு மடல் தீட்டினார்.
மீண்டும் ரமழான் மாதம் வந்தது. அஹ்மத் ஜீவன் டில்லி வந்து சேர்ந்தார். அவர் எப்பொழுதும் அணியும் எளிய அறிகுறிகள் ஏதும் காணப்படவில்லை. எனவே ஒளரங்கசீப் அவரிடம் யாதும் கேட்காது வெறுமனே இருந்து விட்டார்.
பின்னர் ஒருநாள், அஹ்மத் ஜீவன் ஒளரங்கசீபை நோக்கி, “ஈத் அன்று தாங்கள் கொடுத்த அந்தப் புனிதமான இரண்டணா நாணயம் என் வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை உண்டு பண்ணிவிட்டது. என்று கூற அதைக் கேட்ட ஒளரங்கசீப், “என்ன திருப்பம் அது? என்று வியப்புடன் வினவினார்.
அப்பொழுது அஹ்மத் ஜீவன், “அந்த இரண்டணா நாணயத்தைக் கொண்டு பருத்தி விதை வாங்கி விதைத்தேன், இறையருளால் அது செழித்து வளர்ந்து பன்மடங்கு இலாபத்தைத் தந்தது. அந்த மூலதனத்தைக் கொண்டு மேலும் உற்பத்தியைப் பெருக்கினேன். இன்று அது பல லட்சம் மடங்காகப் பெருகிவிட்டது” என்று கூறினார்.
அதுகேட்ட ஒளரங்கசீப் தம்முடைய ஊழியர் ஒருவரை அழைத்து, சாந்தினி செளக்கில்லேவாதேவி வாணிபம் செய்யும் சேட் உதம் என்பவரை ஹிஜ்ரி 1069 –ஆம் ஆண்டின் அவருடைய கணக்கேட்டை எடுத்துக்கொண்டு உடனே தம்மை வந்து காணுமாறு கூறும்படி பணித்தார்.
அரச ஆணை ஏற்றதும் தம்முடைய ஹிஜ்ரி 1069 –ஆம் ஆண்டின் கணக்கேட்டை எடுத்துக் கொண்டு அரண்மனைக்கு விரைந்தார் சேட் உதம்.
அப்பொழுது அவருடைய மனம் என்னவென்னவோ எண்ணிப் புண்ணாகியது.
அரண்மனையை அடைந்த அவர் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பாதுஷாவுக்கு வாழ்த்துரை வழங்கித் தம்முடைய கணக்கேட்டை அவர் முன் சமர்ப்பித்தார்.
அவருடைய அச்சத்தை முகக்குறியால் விளங்கிக்கொண்ட பாதுஷா, “ஒன்றுக்கும் கவலற்க ! இங்கு வந்து உம்முடைய ஹிஜ்ரி 1069 –ஆம் ஆண்டின் வரவுசெலவுக் கணக்கை படித்துக்காட்டும்” என்று கூறினார்.
சேட் உதம் கணக்கேட்டைத் திறந்து படித்துக்கொண்டே வந்தார். அப்பொழுது “இரண்டணா நாணயம்” என்று படித்தவர், அதை யாருக்குக் கொடுத்தோம் என்பதை அறியாது விழித்தார்.
உடனே ஒளரங்கசீபின் முகத்தில் புன்னகை மின்னியது. “கூறும் யாருக்கு அந்தப் பணம் கொடுக்கப்பட்டது?” என்று வினவினார்.
அதைக்கேட்ட சேட் உதம், பெருமூச்சு விட்டவராய் “ஆலம்பனாஹ் ! அது ஒரு சோகக்கதை” எனக்கூறி அக்கதையைக் கூறத்தொடங்கினார்.
“ஆலம்பனாஹ் ! ஓர் இரவு, இந்த டில்லி மாநகரில் கனத்த மழை பெய்தது. அதன் காரணமாக புதியதாகக் கட்டப்பட்ட என் வீட்டின் கூரை ஒழுகி அதனால் வீட்டின் உள்ளே மழை நீர் வந்துவிட்டது. நான் ஓட்டையை அடைக்க எவ்வளவோ முயன்றும் பயனில்லை. மழைநீர் ஒழுகிக்கொண்டே இருந்தது. இந்நிலையில் வெளியில் சென்று எவரேனும் உதவுவார்களா என்று சுற்றிலும் நோக்கினேன். அப்பொழுது விளக்குக் கம்பத்தின் அருகே ஒருவர் நின்று கொண்டிருந்தார். பார்ப்பதற்கு அவர் ஒரு கூலியாள் போன்று தோன்றியது. எனவே அவரை அழைத்து கூரையைச் செப்பனிடச் சொன்னேன். அதற்குச் சம்மதித்து அவர் மூன்று நான்கு மணிநேரம் வேலை செய்து கூரையைச் செப்பனிட்டார். உடனே நீர் ஒழுகுவது நின்று விட்டது. அவர் வேலையை முடிக்கும்பொழுது வைகறைத் தொழுகைக்கான பாங்கு சொல்லப்பட்டது. அப்பொழுது வேலையை நிறுத்தி விட்டு தொழுகையை நிறைவேற்றினார். அதன் பின் தம்முடைய வேலையை முடித்துவிட்டதாகவுன், தாம் செல்ல விரும்புவதாகவும் கூறினார்.
“அப்பொழுது, அவருக்கான கூலையைக் கொடுக்க எண்ணி என் சட்டைப் பைக்குள் கைவிட்டேன். அங்கு இரண்டே இரண்டு அணாதான் இருந்தது. சற்று நேரம் எனக்கு என்ன செய்வதென்றே விளங்க வில்லை. ‘எனக்கு இந்நேரத்தில் உதவியவருக்கு இது போதா தென்று’ எண்ணி என் மனம் வருந்தியது. வேறு வழியின்றி அதனை அவர் கையில் கொடுத்து, “உமக்கு இச்சொற்பத் தொகையை அளிக்க வருந்துகிறேன். விடிந்ததும் என் கடைக்கு வாரும் ! அங்கு உமக்கு வேலைக்கான முழுக்கூலியையும் தந்து விடுகிறேன்” என்று கூறினேன். அதற்கு அவர், “எனக்கு இதுவே போதும். நான் மீண்டும் வரமாட்டேன்” என்று கூறினார். நானும் என் மனைவியும் எவ்வளவோ கூறியும் அவர் கேளாது விறுவிறுவெனச் சென்று விட்டார்.
“அன்றிரவு எங்களுக்கு உதவி – புரிந்து எங்களுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்கள் இழப்பு ஏற்படாமல் காத்த அந்த நல்லவரை நான் இதுவரை எங்கு தேடியும் காணவில்லை. எனவே அவரைப்பற்றி ஒன்றும் தெரியாததால் நான் கணக்கேட்டில் அவரின் பெயரைக் குறிப்பிடாது செலவை மட்டும் எழுதிவைத்தேன்.”
-இவ்விதம் கூறி முடித்தார் சேட் உதம்.
இதன் பின் பாதுஷா அவருக்கு அரசாங்க அங்கி ஒன்றை அன்பளிப்பாக வழங்க அதனை மரியாதையுடன் வாங்கிக் கொண்டு விடை பெற்றுச் சென்றார்.
அவர் சென்றதும் ஒளரங்கசீப் அஹ்மத் ஜீவனை நோக்கி, “என்னுடைய ஆன்மீக ஆசானாகிய தாங்கள் எனக்கு நற்பண்புகளைக் கற்றுத் தந்திருக்கிறீர்கள். அதன் காரணமாக நான் என்னுடைய சொந்தத் தேவைகளுக்கு ஒருபோதும் பொதுக்கருவூலத்தை நாடுவ தில்லை. நான் மணிமுடி சூடிய நாளிலிருந்து இரவில் இரண்டு மணி நேரம் விழித்திருந்து ஒரு மணிநேரம் திருக்குர்ஆனை பிரதி எடுப்பதிலும், ஒரு மணிநேரம் தொப்பி நெய்வதிலும் கழித்து பொருள் ஈட்டி வருகின்றேன். மேலும் வாரத்தில் இரண்டு இரவுகளில் மாற்றுடை அணிந்து மக்களின் தேவைகளை அறிய நகரைச் சுற்றி வருகின்றேன். அப்படி ஓர் இரவு சுற்றி வந்த பொழுது, அந்த மனிதருக்கு உதவி செய்ததால் கிடைத்த பணமே அந்த இரண்டணா நாணயம்” என்று கூறினார்.
அது கேட்ட அஹ்மத் ஜீவனின் புருவங்கள் மேலேறின.
“நிச்சயமாக என்னுடைய மாணவர் கடின உழைப்பின் மூலம் இப்பணத்தை ஈட்டி இருப்பார். அதனால்தான் இறைவன் அதில் “பரக்கத்” செய்துள்ளான் என்று நானும் ஏற்கனவே எண்ணினேன். ஆனால் இத்துணை கடின உழைப்புச் செய்து அந்த இரண்டணாவை ஈட்டி இருப்பீர்களென்று நான் கனவிலும் எண்ணவில்லை. தங்களை போன்ற ஒரு தூய்மையாளரை மாணவராகப் பெற்ற என்னுடைய பேறே அதினினும் நற்பேறு !!” என்று வாயாரப் புகழ்ந்து பாதுஷாவை வாழ்த்தினார் அஹ்மத் ஜீவன்.

( வரலாற்றில் சில பொன்னேடுகள் எனும் நூலிலிருந்து )

நன்றி : இனிய திசைகள் ( டிசம்பர் 2002 )

Tamil E-Books

Tamil E-Books


http://www.masjid-al-taqwa.blogspot.com

தீன்குறள்

தமிழ் இஸ்லாமிய இலக்கியங்கள் தமிழைச் சொன்ன அளவுக்கு இஸ்லாத்தைச் சொன்னதில்லை என்கிற ஒரு கருத்து உலவுகிறது.

சீறாப்புராணம் தொடங்கி மஸ்தான்சாஹிபு பாடல்கள் வரை, " கொண்டாடப்படும்" இஸ்லாமிய இலக்கியங்கள் பலவும் தமிழைப் பிழிந்து கொடுத்த அளவுக்கு இஸ்லாமியக் கருத்தாக்கங்களை மொழிந்திடவில்லை என்பது தமிழாய்ந்த இஸ்லாமிய அறிஞர் பெருமக்களிடம் குடிகொண்டுள்ள ஓர் ஆதங்கம்.

இது ஒருபுறமிருக்க, இஸ்லாம் என்றாலே இலக்கியத்துக்கு இடமளிக்கக் கூடாத ஒன்று என்பது போன்ற 'தூய' தோற்றத்தையும் சிலர் முனைந்து தோற்றுவித்துவருகின்றனர்.:-(

வாழ்விற்கு உகந்த இஸ்லாமிய நற்கருத்துகளை இதயத்திற்கு உகந்த இனிய தமிழ்மொழியில் இலக்கியமாக்குவதன் எதிர்பார்ப்பு இரண்டையும் அறிந்தவர்களின் விழிகளில் ஏக்கமாகிப் படர்ந்திருக்க, அந்தத் தாகநெருப்பைத் தணிக்கும் அளவில் தத்துவக் கவிஞர் இ.பதுருத்தீன் அவர்களின் நூல்கள் அமைவதுண்டு. 'இறைவா' என்கிற தலைப்பில் வந்த உரைவீச்சு நூல் ஒரு எடுத்துக்காட்டு.

ஒருமுறை அவர், தமிழில் இஸ்லாமியக்கவிதை எழுதுவது 'கத்திமீது நடப்பது மாதிரி கடினமான வேலை' என்று குறிப்பிட்டார். கவிதைகளின் மிகைப்பண்பும் வரம்புக்குட்பட்டே, ஆனால் சுவையாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டும் அதில்.

என்னதான் திலகமாக இருந்தாலும் 'உன்புகழை வானமே அண்ணாந்து பார்க்கிறது' என்றெல்லாம் 'முத்து' வரிகளை உதிர்க்க இயலாது. கூடாது.


அவ்வகையில் தத்துவக் கவிஞர் இ.பதுருத்தீன் இயற்றியுள்ள 'தீன்குறள்' தமிழ் இஸ்லாமிய இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்கதாய் இருக்கிறது.

திருக்குறளின் அடியொற்றி 'அ'வில் தொடங்கி 'ன்' னில் முடியும் தீன்குறள், இறைமொழி, நபிவழி இவற்றின் கருத்துகளை 101 அதிகாரங்களாக, 1010 குறட்பாக்களில் கொண்டுள்ளது.

ஒருசோறு பதமாக,

செய்யின் உவப்பஒரு தொண்டேனும் செய்க;அதை
எய்யின் இறப்ப தரிது” (தீன் குறள் 554)

என்பதைச் சுட்டலாம்.


இஸ்லாமிய நற்கருத்துகளை இனியதமிழில், பா வடிவில் வாசிக்க விரும்பும் யாருக்கும் இந்நூல் பயனளிக்கும்.

நூல் : தீன்குறள்

ஆசிரியர் : தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்

விலை : ரூ. 100

கிடைக்குமிடம் :

தளபதி தாரிக் பதிப்பகம்
65/1131 வ.உ.சி. நகர்
தொண்டியார் பேட்டை
சென்னை – 600 081

செய்தி: Imantimes
--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953 / 050 1207670
www.ezuthovian.blogspot.com
www.mypno.com


நூல் அறிமுகம் : தீன் குறள்

http://www.mudukulathur.com/noolarimugamview.asp?id=260

இஸ்லாமியத் தமிழ்க் கவிதை உலகில் முத்திரை பதித்து வரும் தத்துவக்கவிஞர் இ. பத்ருத்தீன் எழுதிய “தீன் குறள்” எனும் நூல் அவரது எழுத்து வன்மைக்கு ஒரு மணி மகுடம் எனச் சாட்சியம் பகரலாம்.
தமிழின் முதல் எழுத்து “அ”; இறுதி எழுத்து ‘ன்’ “அகர முதல எழுத்தெல்லாம்…” என்று ஆரம்பித்து, “ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப்பெறின்” என முடித்ததன் மூலம் தமிழை முழுவதும் தன்னுள் அடக்கியது திருக்குறள் என்பர் சில ஆய்வாளர்கள்.
‘அளவியல் ஒப்ப அனைத்தும், இறையின்
உளவியல் ஒப்பே உலகு”

என ஆரம்பித்து
“உறைந்தும் இறைபால் உயரார், மனத்துள்
நிறைந்து மகிழா ரெனின்”

என முடித்ததன் மூலம் தமிழை முழுவதும் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது தீன் குறள் எனலாம்.
‘கடவுள் வாழ்த்து’ ஆரம்பித்து ‘ஊடல் ஊவகை’ யில் முடிப்பார் திருவள்ளுவர். வாழும் வள்ளுவரான பதுருத்தீனும் ‘இறை வாழ்த்து’ தொடங்கி ‘மன நிறைவு’டன் முடிக்கிறார்.
101 தலைப்புகளில் 1010 தீன் குறள்களைக் கொண்டிலங்கும் இந்நூல் இறை மறை, நபிமொழி ஆகியவற்றின் உள்ளீடுகளைக் கொண்டு வெளிச்சக் கருத்துக்களைப் பெளர்ணமிக்க வைத்துள்ளது. இந்தச் “சின்ன குருவிச்சிறகு” “அன்னப் பெருஞ் சிறகாம் மாக்கவிஞர் முன்னே” தீன்குறளால் மாட்சிமை பெற்றுள்ளது.
இந்நூலில் இல்லாதது எதுவுமில்லை என்று கூறுமளவுக்கு வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துச் செய்திகளும் இஸ்லாமிய நெறியில் பொங்கிப் பிரவாகமெடுத்துள்ள சிறப்பை நாம் பாராட்டியே ஆக வேண்டும் இதோ சான்றுக்கு இரு தீன்குறள்கள் :
“செய்யின் உவப்பஒரு தொண்டேனும் செய்க;
அதை எய்யின் இறப்ப தரிது” (தீன் குறள் 554)

(செய்ய விரும்பினால் ஊர் மகிழுமாறு ஒரு தொண்டேனும் செய்வீர்; அத்தகைய தொண்டு காலத்தால் அழியாதது).
“தொண்டு புரியார் தவசீலராயினும்
கண்டு புரியா துலகு” (தீன் குறள் 555)

(தொண்டு புரியார் தவ சீலராயினும் உலகம் அவரை இனங்கண்டு போற்றாது).
இந்நூல் ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டியது; ஒவ்வொரு வரும் படிக்க வேண்டியது; எல்லாப் பள்ளிவாசல்களிலும் படிக்கும் பொருட்டு வைக்கப்பட வேண்டியது; மதரஸாக்களிலும் ஏனைய அரபிக் கல்வி நிலையங்களிலும் கட்டாயமாகப் பாடமாக வைக்கப்பட்டுப் பயிற்றுவிக்கப்பட வேண்டியது; அனைத்து முஸ்லிம் கல்வி நிலையங் களிலும், பொதுநலச் சேவை அமைப்புகளிலும், அங்கிங்கெனாதபடி எல்லா நூலகங்களிலும் அவசியம் இடம்பெற வேண்டியது; சமுதாயப் புரவலர்கள் அதிக எண்ணிக்கையில் வாங்கித் தேவையானவருக்கு அன்பளிப்பாகத் தரப்பட வேண்டியது. ஏனெனில் கவிக்கோ டாக்டர் அப்துல் ரகுமான் கூறிய வண்ணம் “தீன் குறள்” – இஸ்லாம் தமிழுக்குத் தரும் ‘மஹர்’; தமிழ் இஸ்லாத்திற்குத் தரும் ‘பரிசம்’. - ’எஸ்.எம்.எம்’.

நூல் : தீன்குறள்

ஆசிரியர் : தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்
விலை : ரூ. 100
கிடைக்குமிடம் :
தளபதி தாரிக் பதிப்பகம்
65/1131 வ.உ.சி. நகர்
தொண்டியார் பேட்டை
சென்னை – 600 081


நன்றி : இனிய திசைகள் ( முதல் இதழ் )
டிசம்பர் 2002

என்றாவது ஒருநாள்.....

என்றாவது ஒருநாள்.....

என்றாவது ஒருநாள் என
எண்ணி எண்ணி ஒடிவிட்டது
எண்ணிலடங்கா நாட்கள்!!

முத்தங்கள் பலகிப் போயின
கைப்பேசியில் நமக்கு - இன்னும் புரியாமல்
இரைச்சல் என கொடுத்துவிட்டு சென்றிடும்
நம் பிள்ளை உன்னிடம்!!

இணையாத நமக்கு
பெருநாள் கூட வெகுதொலைவில்
நீயொரு நாளில் நான் ஒரு நாளில்!!

துடித்துக்கொண்டிருக்கும் என் மனம்
உனக்கோ இங்கே கொதித்துக்கொண்டிருக்கும்
வெயிலைப் பற்றி கவலை!!

தூரமாக இருந்தாலும்
பாரமாகத் தோன்றாத
நம் பாசம்!!

நாட்டிற்கே வந்தாலும்
நாலாவது நாளே அழுதுவிடுவாய்;
என் விடுமுறை முடிவின் நாளை எண்ணி!!

நீ சொல்லிக் கொடுத்து சொல்லிக் கொடுத்து
பேசும் நம் பிள்ளை கைப்பேசியில்;
என் சந்தோஷம் என்னவென்று
உனக்குத்தான் எத்தனை பரிட்சயம்!!

நோய் என்று சொன்னாலும்
நொந்து இரண்டு சொட்டுக்
கண்ணீர் மட்டும்தான்
துணையாய் கட்டிலுக்கு!!


வந்துவிடுவேன் என
வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தாலும்
விழிகளில் ஈரம் மட்டுமே மிச்சமாய்!

கானல் நீராய்
காணாமல் போன நம் கனவுகள்;
சோலைக்காக நம் பாசங்கள்
பாலையில் பல் இழிக்க;
நாடு திரும்புமுன் நட்டுவிட்டுச் செல்வேன்
கொடிக்கம்பத்தை “ஆழம் மிகுந்தப் பகுதி” என
அபாய சங்கு ஊதிவிட்டு!!!

-யாசர் அரஃபாத்